search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை முயற்சி"

    • மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் தாலுகா ஆவலப்பள்ளி அருகே உள்ள காளஸ்திபுரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். முனிராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

    இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். இது குறித்து லட்சுமியின் தம்பி ராஜப்பா (26) பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வருகிறார்கள்.

    • மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
    • மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார்.

    ஓசூர்:

    ஓசூர் தாலுகா ஆவலப்பள்ளி அருகே உள்ள காளஸ்திபுரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். முனிராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். இது குறித்து லட்சுமியின் தம்பி ராஜப்பா (26) பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வருகிறார்கள்.

    • சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்
    • துப்பாக்கியின் பின்புறத்தாலும் சுமைலாவின் முகத்தில் ஸோனு பலமாக தாக்கினார்

    புது டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி.

    இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவிருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த சோனு துப்பாக்கியால் தனது தங்கை சுமைலாவை முகத்திலேயே சுட்டார்.

    துப்பாக்கியின் ரவை சுமைலாவின் முகத்தில் தாக்கியும் ஆத்திரம் அடங்காத சோனு, அத்துப்பாக்கியின் பின்புறத்தால் சுமைலாவின் முகத்தில் பலமாக தாக்கினார்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த சுமைலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் சோனுவை கைது செய்தனர். சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவின் கணவர் அருண், அனுஷாவின் நண்பர் என்பது தெரியவந்தது.
    • விஷயத்தில் உண்மை நிலவரங்களை அறிய அருண் மற்றும் அனுஷாவின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் நர்சு வேடத்தில் வந்த பெண், சினேகாவிற்கு ஊசி போட முயன்றார். ஆனால் அவர் வைத்திருந்த சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதுகுறித்து சினேகாவின் தாயார் கேட்டபோது அந்த பெண், சினேகாவின் நரம்பில் வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயன்றார்.

    இதனை தொடர்ந்து அந்த பெண்ணை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர், அதே மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரியும் அனுஷா (25) என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சினேகாவின் கணவர் அருண், அனுஷாவின் நண்பர் என்பது தெரியவந்தது. அவரை காதலித்ததாகவும் திருமணம் கை கூடாததால் சினேகாவை கொலை செய்ய முயன்றதாகவும் அனுஷா போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான அனுஷா, ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். முதல் கணவரை பிரிந்து விட்டார். 2-வதாக திருமணம் செய்தவர் வெளிநாட்டில் உள்ளார். இருப்பினும் அருண் மீதான காதலை அவர் கைவிடாமல் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அருணிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் அனுஷாவிடம் சாதாரண முறையில் நட்பாக இருந்ததாக மட்டும் கூறினார்.

    இந்த விஷயத்தில் உண்மை நிலவரங்களை அறிய அருண் மற்றும் அனுஷாவின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் அழிக்கப்பட்ட செய்திகளை மீட்க தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக போலீஸ் அதிகாரி அஜீப் தெரிவித்துள்ளார். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட அனுஷாவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை தலைவர் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஆணைய உறுப்பினர் பினாகுமாரி பரிந்துரைத்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனுஷாவை கைது செய்தனர்.
    • காதலனுடன் சேர முடியாத ஆத்திரத்தில் அவர் சினேகாவை கொல்ல முயன்றாரா? என்று விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி சினேகா(வயது25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்துக்காக திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் அங்கு சினேகாவுக்கு குழந்தை பிறந்தது. கடந்த இரு நாட்களாக சினேகாவும், அவரது குழந்தையும் மருத்துவமனையில் இருந்தனர். அவர்களை குடும்பத்தினர் உடனிருந்து கவனித்து வந்தனர். பின்பு சினேகாவும், அவரது குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்து சினேகாவின் குடும்பத்தினர் புறப்பட தயாராகினர். அப்போது பிறந்த குழந்தைக்கு சில பராமரிப்பு தேவைப்பட்டதால், செவிலியர்கள் கூறுவதை கேட்பதற்காக குழந்தையுடன் சினேகா மருத்துவமனையில், தான் தங்கியிருந்த அறையில் காத்திருந்தார்.

    அப்போது அங்கு நர்சு உடையணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் திடீரென சினேகாவின் கையை பிடித்து ஊசி போட முயன்றார். அவர் வைத்திருந்து சிரிஞ்சில் மருந்து எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சினேகா அதுபற்றி கேள்வி எழுப்பினார்.

    ஆனால் அந்த பெண், சினேகாவின் நரம்பில் வலுக்கட்டாயமாக ஊசியை குத்த முயன்றார். அப்போது அங்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர். அந்த பெண் அதே மருத்துவமனையில் மருந்தாளுனராக பணி புரியும் அனுஷா(25) ஆவார்.

    காயங்குளத்தை சேர்ந்த அவர், சினேகாவின் உடலில் சிரிஞ்சு மூலம் காற்றை ஏற்றி கொல்லமுயற்சி செய்துள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனுஷாவை கைது செய்தனர்.

    அவர் எதற்காக சினேகாவை கொல்ல முயன்றார்? என்று விசாரணை நடத்தினர். அதில் சினேகாவின் கணவர் அருணும், அனுஷாவும் நண்பர்கள் என்பதும், இருவரும் ஏற்கனவே காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. காதலனுடன் சேர முடியாத ஆத்திரத்தில் அவர் சினேகாவை கொல்ல முயன்றாரா? என்று விசாரணை நடத்ததப்பட்டு வருகிறது.

    குழந்தை பெற்ற பெண்ணை, மற்றொரு பெண் நர்சு வேடமிட்டு வந்து நரம்பில் காற்றை செலுத்தி கொல்ல முயன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவி, மாமியாரை கொல்ல முயன்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில்பட்டி கிரா–மத்தை சேர்ந்தவர் முனீஸ்வ–ரன் (வயது 34). இவரது மனைவி இசக்கியம்மாள் (30). கூலி வேலை பார்த்து வரும் முனீஸ்வரன், திரும–ணமான நாள் முதல் தின–மும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    2 குழந்தைகள் பிறந்த நிலையிலும் அவர் குடிப்ப–ழக்கத்தை மறக்கவில்லை. இதற்கிடையே தனது உற–வுக்கார பெண் ஒருவருடன் முனீஸ்வரனுக்கு ெதாடர்பு இருப்பது மனைவி இசக்கி–யம்மாளுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இத–னால் கணவன், மனைவிக்கி–டையே மேலும் பிரச்சினை முற்றியது.

    இதையடுத்து இசக்கியம்மாள் குழந்தைகளை அழைத் துக்கொண்டு, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். அவ்வப்போது முனீஸ்வரன் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத் தன்று காலை மனைவி, பிள்ளைகளை பார்த்து தான் வாங்கிச்சென்ற பல–கா–ரங்களை கொடுத்து–விட்டு வந்தார். பின்னர் அதேநாளில் இரவு 11 மணிக்கு மீண்டும் அங்கு சென்றார். அப்போது மனைவி அவரை கண்டித் தார். இதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன், உன்னையும், உன் தாய் கூடம்மாளையும் கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று கூறி கத்தரிக்கோலால் அவர்களை குத்தி காயப்ப–டுத்தி உள்ளார்.

    உடனே அங்கு சத்தம் கேட்டு ஊர்க்காரர்கள், அக்கம்பக்கத்தினர் திரண்ட–னர். இதையடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்வ–தற்காக முனீஸ்வரன் தனது கையை கத்தியால் கிழித் துக்கொண்டு நாடகம் ஆடி–யுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியினர் போலீசா–ருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த சிவகாசி கிழக்கு போலீசார், முனீஸ்வரன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
    • கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார்.

    குனியமுத்தூர்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). வெல்டர். இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    பிரியாவின் தங்கை வீடு கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளைத்தில் உள்ளது. இங்கு அவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது பிரியாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் தினேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கணவரிடம் கோபித்துக்கொண்டு பிரியாக 2 குழந்தைகளுடன் கோவையில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார். இங்கு வந்த பின்னர் தினேசுடன் நெருக்கம் அதிகமானது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். இந்த தகவல் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு ஏற்கனவே நடந்தவற்றை மறந்து விடு, என்னுடன் வா நாம் சேர்ந்து வாழலாம் என அழைத்தார்.

    இதுகுறித்து பிரியா தனது கள்ளக்காதலன் தினேஷிடம் கூறினார். கார்த்திக் உயிரோடு இருந்தால் நாம் 2 பேரையும் சேர்ந்து வாழவிட மாட்டார். எனவே அவரை கொலை செய்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என அவர்கள் 2 பேரும் கொலை திட்டம் தீட்டினர்.

    அதன்படி தனது கணவர் கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார். சம்பவத்தன்று அவரும் சேலத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்தார்.

    பிரியா தனது கணவரை கஞ்சிகோணாம் பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனி பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே கள்ளக்காதலன் தினேஷ் கத்தியுடன் மறைந்து இருந்தார். அவர் பாய்ந்து சென்று கார்த்திக்கை கத்தியால் குத்தினார். கார்த்திக் தடுக்க முயன்றதில் அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது.

    வலிதாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் தினேசும், பிரியாவும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கார்த்திக் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற பிரியா, அவரது கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ரவுடி மீது கொலை முயற்சி வழக்கு
    • மதன்ராஜ் பெயர் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் மீனாட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 29). இவர் பறக்கை சந்திப்பில் உள்ள டீக்கடை யில் டீ குடித்துவிட்டு அங்குள்ள கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தினார். அப்போது கோட்டார் பகுதியை சேர்ந்த பரிமளக்கண்ணன் என்பவருக்கும், மதன்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பரி மளக்கண்ணன் அவரது நண்பர்கள் பிரவீன், ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து மதன்ராஜ் வீட்டிற்கு சென்று வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

    மேலும் மதன்ராஜை கம்பியால் தாக்கினார்கள். இதுகுறித்து மதன்ராஜ் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் பரிமளக்கண்ணன், பிரவீன், ஆகாஷ் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோட்டார் வாகையடி தெற்கு தெருவை சேர்ந்த ஆகாஷ் (22). இவர் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

    நான் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர்கள் பிரவீன், பரிமளக்கண்ணனுடன் பறக்கை சந்திப்பில் டீ குடித்துக் கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மதன்ராஜ் என்பவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆறுமுகம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மதன்ராஜ் என்னை அவதூறாக பேசியதுடன் கத்தியால் குத்தினார்.

    இதில் எனது கண் மற்றும் முதுகில் ரத்த காயம் ஏற்பட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியி ருந்தார். இதன் பேரில் போலீசார் மதன்ராஜ் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதன்ராஜ் பெயர் ஏற்கனவே ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அந்த பெண் மகனின் புகைப்படங்கள் மற்றும் அவன் இருக்கப் போகும் சரியான இடத்தை வலைதளத்தில் சமர்ப்பித்துள்ளார்.
    • கூலிக்கு கொலை செய்யும் கொலையாளியாக காட்டி கொண்ட ஒரு புலனாய்வாளர் விசாரணை நடத்தி கண்டுபிடித்துள்ளார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தனது 3 வயது மகனை கொல்ல ஒரு வாடகை கொலையாளியை தேடி வந்துள்ளார். இதற்காக ஒரு வலைதளத்தில் கூலிக்கு ஆள் தேடியுள்ளார்.

    ஆனால் அந்த வலைதளம் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டது என்றும் இது போன்ற கோரிக்கைகள் உண்மையிலேயே வந்தால் அந்த வலைதளத்தை நடத்துபவர்கள், காவல்துறையினரிடம் தகவல்களை அளித்து விடுவார்கள் என்றும் அப்பெண்ணுக்கு தெரியவில்லை.

    வார இறுதிக்குள் தனது மகனை கொல்ல வேண்டும் என்றும் அதற்காக கூலிக்கு ஒரு கொலைகாரன் வேண்டும் என அந்த வலைதளத்தில் தேடி வந்துள்ளார். மேலும் அவர் தனது மகனின் புகைப்படங்களையும் அவன் இருக்கப் போகும் சரியான இடத்தையும் அந்த வலைதளத்தில் சமர்ப்பித்துள்ளார்.

    உடனே அந்த இணையதளத்தின் ஆபரேட்டர்கள், காவல்துறையினரிடம் தெரிவித்தனர். காவல்துறையினர், இணையதளத்தில் கோரிக்கை வைக்க பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரியை (IP address) ஆய்வு செய்தனர். கோரிக்கை வைத்த அந்த பெண்ணும் அதே கணினியை பயன்படுத்துவதை உறுதி செய்து கொண்டனர்.

    இதற்கு பிறகு தன்னை கூலிக்கு கொலை செய்யும் கொலையாளியாக காட்டி கொண்ட ஒரு புலனாய்வாளர், அப்பெண்ணைத் தொடர்பு கொண்டார். ரூ.2,40,000க்கு ($3,000) கொலை செய்ய அவர் ஒப்புக்கொள்வதாக அப்பெண்ணிடம் நடித்துள்ளார். இதன் மூலம் குற்ற முயற்சியை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சிக்கான கோரிக்கை விடுத்தல் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சட்டத்திற்கு புறம்பான வழியில் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.12,00,000 ($15,000) பிணையம் செலுத்தவும் அவரது குழந்தையிடமிருந்து விலகி இருக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அச்சிறுவன் தற்போது பாதுகாப்பாக உறவினர்களுடன் இருக்கின்றான்.

    அப்பெண் எதற்காக தன் மகனையே கொலை செய்ய முற்பட்டார்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 

    • படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    சென்னையில், ரெயிலில் பழ வியாபாரம் செய்து வரும் ராஜேஸ்வரி என்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடற்கரை- தாம்பரம் ரெயிலில் பயணம் செய்து வந்த ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

    அப்போது அதே ரெயிலில் இறங்கிய நபர் ஒருவர், ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரெயிலில் தப்பிச் சென்றுள்ளார்.

    படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வீரேந்திர திடீரென காரை ஓட்டியவாறு 3 குழந்தைகள் மீதும் மோதினார்.
    • மலிஹாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரேந்திராவை கைது செய்தனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள காசிகேடா பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரா என்ற சீதாராம் சிந்தர்வா. இவருக்கு ஷிவானி (8), சினேகா (4), கிருஷ்ணா (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் வீரேந்திராவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் வீரேந்திரா ஆத்திரம் அடைந்தார். தனது ஆத்திரத்தை அவர் தனது குழந்தைகள் மீது காட்டினார்.

    சீதாராமின் 3 குழந்தைகளும் அருகில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தனர். மூத்த குழந்தை ஷிவானி தனது தங்கை சினேகாவை கையில் பிடித்தபடி, தம்பி கிருஷ்ணாவை இடுப்பில் சுமந்தபடி சென்றார்.

    இந்த வேளையில் வீரேந்திர திடீரென காரை ஓட்டியவாறு 3 குழந்தைகள் மீதும் மோதினார். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சம்பவம் நடந்ததும் வீரேந்திரா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே 3 குழந்தைகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சிக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவானது. 42 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் குழந்தைகள் மீது கார் ஏற்றப்படுவதும், குழந்தைகள் கீழே விழும் காட்சிகளும் பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த சம்பவம் தொடர்பாக மலிஹாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரேந்திராவை கைது செய்தனர்.

    • படுகாயமடைந்த சிவா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துபட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 32). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்களது வீட்டுக்கு உறவினரான சிவா அடிக்கடி வந்து சென்றார். அப்போது சிவாவுக்கும், பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

    இது குறித்து முருகானந்தத்துக்கு தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் தான் இல்லாத நேரத்தில் சிவா வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் தமுத்துபட்டியில் இருந்து வெள்ளைய கவுண்டனூருக்கு ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த சிவா மீது மோதினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவா திடீரென சுதாரித்துக் கொண்டு விலகியதால் உயிர் தப்பினார்.

    அப்போதும் ஆத்திரம் அடங்காத முருகானந்தம் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு சிவாவின் வீட்டுக்கு சென்று உருட்டுக் கட்டையால் பயங்கரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சிவா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இந்த தாக்குதலில் முருகானந்தத்துக்கும் காயம் ஏற்பட்டதால் அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×