search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புது டெல்லி"

    • செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி எனும் குடியிருப்பு உள்ளது
    • இரு இளைஞர்கள் அவர் மகளை தங்களுடன் ஆடுமாறு துன்புறுத்தினர்

    டெல்லி தலைநகர் பகுதிக்கு உட்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த பகுதி, ஃபரிதாபாத் (Faridabad).

    இங்குள்ள செக்டார் 87 பகுதியில் பிரின்சஸ் பார்க் சொசைட்டி (Princess Park Society) எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 52 வயதான பிரேம் மேத்தா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த குடியிருப்பில் தசரா பண்டிகையை முன்னிட்டு வட இந்தியர்கள் கொண்டாடும் கார்பா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு டாண்டியா ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த கொண்டாட்டத்தில் பிரேம் மேத்தாவின் மகளும் பங்கேற்றார்.

    அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் பிரேம் மேத்தாவின் மகளை நெருங்கி, தங்களுடனும் டாண்டியா ஆட்டம் ஆடுமாறு வற்புறுத்தினார்கள். மேலும், அவருடைய தொலைபேசி எண்ணையும் கேட்டு வற்புறுத்தினார்கள். இதனால் பிரேம் மேத்தாவின் மகள் செய்வதறியாது திகைத்தார்.

    இதை கண்ட பிரேம் மேத்தா, தகாத செயலில் ஈடுபட்ட அந்த இரண்டு இளைஞர்களிடம் சென்று கோபமாக பேசினார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வாக்குவாதம் அதிகரித்து மோதலாக மாறியது.

    மோதல் முற்றியதில், அந்த இருவரும் பிரேம் மேத்தாவை கீழே தள்ளி விட்டனர். கீழே விழுந்த அவர் சுயநினைவை இழந்தார்.

    உடனடியாக அங்கிருப்பவர்கள் உதவியுடன் அவர் மகளும், குடும்பத்தினரும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேத்தா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடி வந்த ஒரு குடும்பம், இரு இளைஞர்களின் அக்கிரமத்தால் சோகத்தில் மூழ்கிய செய்து அப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    • குர்ப்ரீத்திற்கு லேனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது
    • துர்நாற்றம் வீச துவங்கியதும் உடலை மறைக்க குர்ப்ரீத் வழி தேடினார்

    மேற்கு புது டெல்லியில் உள்ள திலக் நகர் பகுதியை சேர்ந்தவர் குர்ப்ரீத் சிங்.

    குர்ப்ரீத், தனது சொந்த வேலைக்காக அடிக்கடி சுவிட்சர்லாந்து செல்வது வழக்கம். அவ்வாறு சென்றிருந்த போது அந்நாட்டை சேர்ந்த லேனா பெர்கர் எனும் பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகி வந்தனர். சுவிட்சர்லாந்து செல்லும் போதெல்லாம் லேனாவை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் குர்ப்ரீத்.

    சமீப சில மாதங்களாக குர்ப்ரீத்திற்கு லேனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

    லேனா, வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருப்பதாக குர்ப்ரீத் சந்தேகிக்க தொடங்கினார். தன்னுடன் உறவில் இருந்து கொண்டே வேறொரு ஆணுடன் அவர் பழகுவதை விரும்பாத குர்ப்ரீத், லேனாவை கொல்ல திட்டமிட்டார்.

    எனவே, தனது திட்டத்தை செயல்படுத்த இந்தியாவில் வேறொரு பெண்ணின் தகவல்களை கொடுத்து ஒரு காரை வாங்கினார். பிறகு லேனாவை இந்தியாவிற்கு வர சொல்லி அழைப்பு விடுத்தார். குர்ப்ரீத்தின் அழைப்பின் பேரில் லேனா, அக்டோபர் 11 அன்று இந்தியா வந்தார். வந்தவருடன் 4 நாட்கள் வரை சிரித்து பேசி மகிழ்ந்திருந்த குர்ப்ரீத், அடுத்த நாள் லேனா எதிர்பாராத விதமாக அவரை தாக்கி, அவர் கை, கால்களை கட்டி பிறகு கொலை செய்தார்.

    சில நாட்களானதும், வீட்டிலேயே வைத்திருந்த லேனாவின் சடலத்திலிருந்து துர்நாற்றம் வீச துவங்கியது. உடலை மறைக்க வழி தெரியாமல் தவித்த குர்ப்ரீத், தான் வாங்கிய வேறொரு பெண்ணின் காரில் சடலத்தை ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் வைத்து, காரை நீண்ட தூரம் ஓட்டி சென்று, அங்குள்ள ஒரு அரசு பள்ளிக்கு அருகே ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத சாலை ஓரமாக வீசி விட்டு வேகமாக காரில் சென்று விட்டார்.

    லேனாவின் உடலை கண்ட எவரோ தகவல் கொடுத்ததன் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்விற்கு அனுப்பி வைத்து, விசாரணையை துவங்கினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆராய்ந்ததில் குர்ப்ரீத் கார் சென்று வந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் குல்ப்ரீத்தை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.

    இறுதியில் குற்றத்தை குல்ப்ரீத் ஒப்பு கொண்டார்.

    குல்ப்ரீத் வீட்டிலிருந்த மற்றொரு காரையும், சுமார் ரூ. 2.25 கோடி பணத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர், மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல பிரிவுகளில் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது
    • சுரிந்தர் கோலி மற்றும் மொனிந்தர் சிங் பந்தெருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது

    இந்திய தலைநகர் புது டெல்லியின் நோய்டா (Noida) பகுதியில் உள்ள நிதாரி (Nithari) கிராம பகுதியில், கடந்த 2006 டிசம்பர் மாதம், ஒரு வீட்டின் வெளியே உள்ள வடிகால் பாதையில் பல எலும்பு கூடுகளை பொதுமக்கள் கண்டனர். இது குறித்து உடனடியாக அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

    பொதுமக்கள் அளித்த புகாரை அளித்து, காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

    அந்த வீட்டை காவல்துறையினர் மேலும் ஆய்வு செய்யததில் பல குழந்தைகளின் உடல் பாகங்கள் கிடைத்தன. அந்த பகுதியின் சுற்று வட்டாரத்தில் வசித்து வந்த பல சிறுவர் சிறுமியர் உடல்கள் அவை என்றும் தெரிய வந்தது.

    மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு காவல்துறையிடமிருந்து மத்திய புலனாய்வு துறையிடம் (CBI) ஒப்படைக்கப்பட்டது. அந்த வீட்டின் வேலைக்காரன் சுரிந்தர் கோலி (Surinder Koli) மற்றும் மொனிந்த சிங் பந்தெர் (Moninder Singh Pandher) ஆகியோர் அந்த குழந்தைகளை கடத்தி, தகாத உறவில் ஈடுபட்டு, அவர்களை கொன்றதாக சிபிஐயின் தீவிர விசாரணையில் தெரிய வந்தது.

    ஆதாரத்தை மறைக்க அக்குழந்தைகளின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியதாக கோலி தெரிவித்தான். குற்றத்தை ஒப்பு கொண்ட கோலி, உயிரிழந்தவர்களின் உடல்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அவர்களின் உடல் பாகங்களை உண்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

    பல பிரிவுகளில் அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து காசியாபாத் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இறுதியாக அவர்கள் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    இதனை எதிர்த்து அவர்கள் செய்த மேல்முறையீட்டு வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், நாட்டையே உலுக்கிய 17 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குற்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த அலகாபாத் நீதிமன்றம், போதுமான ஆதாரம் இல்லாததால், அவர்கள் இருவரையும் அனைத்து வழக்கிலிருந்தும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.

    • பல்வேறு காரணங்களால் சில தலைவர்கள் வரவில்லை
    • சில நாட்டு தலைவர்களின் வருகை உறுதியாகவில்லை

    உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா உட்பட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க அனைத்து நாடுகளின் தலைவர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சில அதிபர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரடார் ஆகியோர் பல்வேறு காரணங்களால் வர மாட்டார்கள் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃப்யுமியொ கிஷிடா, ஜெர்மனி அதிபர் ஓலஃப் ஷோல்ட்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான், சவுதி அரேபியா இளவரசர் மொஹம்மத் பின் சல்மான், தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா, தென் கொரியா அதிபர் யூன் சுக்-இயோல், ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் மற்றும் துருக்கி அதிபர் ரெசிப் டாயிப் எர்டோகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என தெரிய வந்துள்ளது.

    இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய உறுப்பினர்கள் பங்கேற்கிறார்களா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்நிலையில், நைஜீரிய அதிபர் போலா டினுபு மற்றும் மவுரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் வந்திறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    • செப்டம்பர் 9, 10 தேதிகளில் புது டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது
    • சீன-அமெரிக்க உறவு சமீப காலங்களில் சீர்குலைந்திருக்கிறது

    உலகின் 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு ஜி20.

    உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்ட இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்தது.

    தற்போது இம்மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் புது டெல்லியில் இதன் அடுத்த உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்றும் புதினுக்கு பதிலாக ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் ரஷியாவின் சார்பில் பங்கேற்பார் என ரஷியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    ரஷிய உக்ரைன் போரில், ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வரும் நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பது தவிர்க்க முடியாததாகும். சமீப காலங்களாக வர்த்தக மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு கசப்பான நிலையை அடைந்திருக்கிறது.

    இப்பின்னணியில் அமெரிக்க அதிபரை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக, ரஷிய அதிபர் புதினை போல சீன அதிபரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அதிபருக்கு பதிலாக அந்நாட்டு தூதர் லி கியாங், சீனாவின் சார்பாக புது டெல்லிக்கு வருகை தருவார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்து சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்த வெளியுறவு துறையின் செய்தித்தொடர்பாளர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    அண்மை காலங்களில், கடந்த 2022 நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்
    • துப்பாக்கியின் பின்புறத்தாலும் சுமைலாவின் முகத்தில் ஸோனு பலமாக தாக்கினார்

    புது டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது சாஸ்திரி பூங்கா பகுதி.

    இங்குள்ள புலாந்த் மஸ்ஜித் அருகில் சகோதரிகளான சோனு (30) மற்றும் அவர் தங்கை சுமைலா வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    தன் கணவருக்கும் தன் தங்கை சுமைலாவிற்கும் தவறான உறவிருப்பதாக சோனு சந்தேகம் அடைந்திருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பாக சகோதரிகள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்திரமடைந்த சோனு துப்பாக்கியால் தனது தங்கை சுமைலாவை முகத்திலேயே சுட்டார்.

    துப்பாக்கியின் ரவை சுமைலாவின் முகத்தில் தாக்கியும் ஆத்திரம் அடங்காத சோனு, அத்துப்பாக்கியின் பின்புறத்தால் சுமைலாவின் முகத்தில் பலமாக தாக்கினார்.

    இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காயமடைந்த சுமைலாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சாஸ்திரி பூங்கா காவல்துறையினர் சோனுவை கைது செய்தனர். சோனு மீது கொலை முயற்சி மற்றும் ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சோனுவிற்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×