என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உத்தரபிரதேசத்தில் 3 குழந்தைகளை கார் ஏற்றி கொல்ல முயன்ற தந்தை
- வீரேந்திர திடீரென காரை ஓட்டியவாறு 3 குழந்தைகள் மீதும் மோதினார்.
- மலிஹாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரேந்திராவை கைது செய்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள காசிகேடா பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரா என்ற சீதாராம் சிந்தர்வா. இவருக்கு ஷிவானி (8), சினேகா (4), கிருஷ்ணா (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வீரேந்திராவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் வீரேந்திரா ஆத்திரம் அடைந்தார். தனது ஆத்திரத்தை அவர் தனது குழந்தைகள் மீது காட்டினார்.
சீதாராமின் 3 குழந்தைகளும் அருகில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தனர். மூத்த குழந்தை ஷிவானி தனது தங்கை சினேகாவை கையில் பிடித்தபடி, தம்பி கிருஷ்ணாவை இடுப்பில் சுமந்தபடி சென்றார்.
இந்த வேளையில் வீரேந்திர திடீரென காரை ஓட்டியவாறு 3 குழந்தைகள் மீதும் மோதினார். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சம்பவம் நடந்ததும் வீரேந்திரா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே 3 குழந்தைகள் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சிக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவானது. 42 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் குழந்தைகள் மீது கார் ஏற்றப்படுவதும், குழந்தைகள் கீழே விழும் காட்சிகளும் பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக மலிஹாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரேந்திராவை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்