search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் பரபரப்பு: சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
    X

    சென்னையில் பரபரப்பு: சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

    • படுகாயம் அடைந்த ராஜேஸ்வரிக்கு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    சென்னையில், ரெயிலில் பழ வியாபாரம் செய்து வரும் ராஜேஸ்வரி என்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடற்கரை- தாம்பரம் ரெயிலில் பயணம் செய்து வந்த ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

    அப்போது அதே ரெயிலில் இறங்கிய நபர் ஒருவர், ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரெயிலில் தப்பிச் சென்றுள்ளார்.

    படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×