search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா வைரஸ்"

    • தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    சென்னை:

    கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் மாநிலத்தில் பரவி உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊடுருவியது. இதனால், தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்து வந்தது. அதன்பின், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது. தொடர்ந்து, கொரோனாவிற்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    இதையடுத்து, மீண்டும் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கேரளாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியது.

    அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது. இந்தநிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (வயது 55) என்பவர் உயிரிழந்தார்.

    தமிழ்நாட்டில் நேற்று 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 16 பேர், கோவையில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.
    • புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை:

    கொரோனா தொற்று பாதிப்பு சில மாதங்களாக குறைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டே வருகிறது.

    உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த 26-ந் தேதி வரை 69 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு புதிய வகை ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறையினர் அங்கு விரைந்து சென்று இளம்பெண்ணை தனிமைப்படுத்தினர். மேலும் அவரது பெற்றோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அந்த பகுதி முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணியும் மேற்கொள்ளப்பட்டது. அவரது பெற்றோரையும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.

    அதனை தொடர்ந்து, புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ரத்த மாதிரியையும் சேகரித்து ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், புலியகுளத்தை சேர்ந்த 34 வயது பெண்ணுக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். அண்மையில் அவர் எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

    கோவையில் ஜே.என்.1 வகை கொரோனா ஒருவருக்கு உறுதியானதை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்பதுடன், பரிசோதனையும் மேற்கொள்கின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள சுகாதார மையம், ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தி அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இதுதவிர மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிப்பது, கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக 100 வார்டிலும் எந்தெந்த பகுதியில் கொரோனா உள்ளதோ அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தும் வருகின்றனர்.

    கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து கோவையில் பொது இடங்களில் மக்கள் கூடும்போது முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன் மாவட்டம் முழுவதும் 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தின் எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஓரிரு நாளைக்குள் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனை முன்பு தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

    • புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.
    • விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜேஎன் 1 என்ற மாறுதல் அடைந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தொடர்பாக கர்நாடக அரசின் அமைச்சரவை துணைக்குழு தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

    அதன்படி பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், பாதிக்கப்பட்ட நபர்களை 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பது அவசியம். மேலும் அறிகுறிகளுடன் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்கள் கட்டாயம் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

    • டெல்டா பிளஸ் மிக கொடூரமாக பலரது உயிரை பறித்தது.
    • டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது.

    சென்னை:

    சீனாவில் உருவாகி உலகையே தடம்புரள செய்து விட்டது கொரோனா வைரஸ்.

    கடந்த 2018-ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது. 'சார்ஸ் கொரோனா வைரஸ்' எனப்படும் கொரோனா தொற்று பல உருமாற்றங்களை அடையக் கூடியது. 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகம் எடுத்து பரவியது.

    கொரோனா வைரஸ் சில வார இடைவெளிகளில் புதிய புதிய வடிவங்கள் எடுத்தது. காமா, பீட்டா, ஆல்பா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என்று வகை வகையாக கொரோனா உருமாறியது. இதில் டெல்டா பிளஸ் மிக கொடூரமாக பலரது உயிரை பறித்தது.

    ஆல்பா வகை கொரோனா தீநுண்மி 2 உருமாற்றங்களை மட்டுமே பெற்றது. டெல்டா வகை 8 உருமாற்றங்களை அடைந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் ஓமைக்கரானாக மாறியது. இந்த ஓமைக்கரான் நூற்றுக்கும் மேற்பட்ட உருமாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

    அந்த வரிசையில் ஓமைக்ரானின் உட்பிரிவான பிஏ 2.86 பைரோலா வைரசில் இருந்து புதிய வகை கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளது. அந்த புதிய வகை கொரோனா ஜே.என்.1 என்று அழைக்கப்படுகிறது.

    கொரோனா பெருந்தொற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து உலகம் முழுக்க நிலைத்திருக்கும் என்பதை மீண்டும் காட்டும் வகையில் தற்போது புதிதாக உருவெடுத்திருக்கிறது ஜே.என்.1 வகை பாதிப்பு.

    இந்த புதிய கொரோனா முதலில் அமெரிக்காவில் கடந்த அக்டோபர் இறுதியில் கண்டறியப்பட்டது. இது தற்போது உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.


    ஜே.என்.1 புதிய வவகை கொரோனா இந்தியாவிலும் பரவி இருக்கிறது. கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

    சிலரின் சளி மாதிரிகளை மரபணு பகுப் பாய்வுக்கு உட்படுத்தியதில் 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கோவாவில் 34 பேருக்கும், அதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு அத்தொற்று இருப்பதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

    புதிய வகை கொரோனா பாதிப்பு இருந்தால் சில அறிகுறிகள் மூலம் கண்டு பிடித்துக் கொள்ளலாம். ஒருவருக்கு தொடர்ந்து சில தினங்கள் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, சோர்வு, உடல்வலி, சுவாசிப்பதில் சிரமம், வயிற்றுப் போக்கு ஆகியவை இருந்தால் அது ஜே.என்.1 கொரோனா பாதிப்புக்கு அறிகுறிகளாக கருதப்படுகிறது.

    புதிய வகை கொரோனா தாக்கத்தில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை எளிதாக தற்காத்துக் கொள்ள முடியும். பொது இடங்களில் மற்றும் அதிக பேர் கூடும் பகுதிகளில் முகக் கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளி, கைகளை சோப்பு மூலம் கழுவுதல், இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக்கொள்ளுதல் அவசியமாகும்.

    இவை தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்துமிக்க உணவுப் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. மது, புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், உடற்பயிற்சி ஆகியவைகளை கடைபிடித்தால் ஜே.என்.1 புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நூற்றுக்கணக்கான உருமாற்றங்களை பெற்று விட்டதால் ஏற்கனவே உள்ள தடுப்பூசிகள் ஜே.என்.1 வகைக்கு பலன் அளிக்காது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதே வேளையில் ஏற்கனவே தடுப்பூசி இரு தவணையும், பூஸ்டர் தவணையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு ஜே.என்.1 வகை தொற்று பாதித்தாலும், பாதிப்பு வீரியமாக இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    புதிய வகை கொரோனாவான ஜே.என்.1 பற்றி சர்வதேச அளவில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. உலக சுகாதார அமைப்பும் அதை பற்றி ஆய்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்த புதிய வைரஸ் வீரியமே இல்லாத ஒன்று என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சளி தொல்லை காய்ச்சலுடன் இந்த வைரஸ் விலகி சென்று விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை பற்றி மக்கள் எந்த வகையிலும் குழப்பமோ, பீதியோ அடைய தேவை இல்லை என்று மருத்துவர்கள் உறுதிப்பட தெரிவித்து உள்ளனர்.

    புதிய வகை கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள கவனமாக இருந்தால் போதும். ஜே.என்.1 ரக கொரோனா பாதித்தாலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் புதிய வகை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    இணை நோய் இருப்பவர்களுக்கு மட்டுமே புதிய வகை கொரோனா வைரஸ் சற்று கூடுதல் உடல் வலியை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருந்தால் போதுமானது.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சளி, இருமல், ஜலதோஷம் ஏற்பட்டால் உடனடியாக அதை கவனித்து கொள்வது நல்லது.

    • பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர்.
    • நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இந்த சூழலில் புதிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கொரோனா மரபியல் கூட்ட மைப்பின் (இன்சா காக்) தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:-

    இந்தியாவில் சுமார் 88 சதவீத மக்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பரவும் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. இந்த வகை கொரோனா வைரசால், காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன. பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து விடுகின்றனர். மருத்துவ மனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது.


    அதேநேரம், நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். எந்த வகையான கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை கண்டறிய சளி மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் போதும். அச்சம்அடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது குளிர்காலம், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக ஜே.என்.1 வைரஸ் வேகமாக பரவுகிறது. இதன் வீரியம் குறைவாகவே உள்ளது. எனினும் வைரஸ் பரவலை தடுக்க அந்தந்த நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவைசேர்ந்த முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் வெளியிட்ட அறிக்கையில், 'குளிர்காலம் தொடங்கி உள்ளதால் ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரித்து உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், மூத்த குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். எக்ஸ் பி.பி.1 வகை வைரசுக்காக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஜே.என்.1 வகை வைரஸ் பரவலை தடுப்பதற்கும் பயன்படுத்தலாம்' என்று தெரிவித்து உள்ளது.

    • கேரளாவில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கொரோனா தொற்றுப் பரவலால் கேரள மக்கள் அச்சமடைய வேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உருமாற்றத்தில் உருமாற்றம் அடைந்த JN.1 வகை கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,054ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,50,09,248 (4.50 கோடி) ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,860 (4.44 கோடி) ஆக உயர்ந்துள்ளது.

    இதனிடையே, கொரோனா தொற்றுப் பரவலால் கேரள மக்கள் அச்சமடைய வேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

    • ஒமிக்ரான் வகையில் இருந்து உருமாறிய JN1 எனும் வைரஸ் பரவி வருகிறது.
    • உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருக்கிறது.

    இந்தியாவில் புதிய வகை கொரோனா JN1 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு பல்வேறு உருமாற்றங்களால் புதிய வகை வைரஸ்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் கொரோனா ஒமிக்ரான் வகையில் இருந்து உருமாறிய JN1 எனும் வைரஸ் பரவி வருகிறது.

    புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து, உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில், புதிய வகை கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் INSACOG அமைப்பின் தலைவர், மருத்துவர் என்.கே. அரோரா உண்மை விவரங்களை தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த வாரம் வரையிலும், கடந்த எட்டு வாரங்கள் வரையிலும் 22 பேருக்கு புதிய வகை கொரோனா JN1 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதாக எந்த ஆதாரமும் இல்லை. மற்ற வகை கொரோனா பாதிப்புகளை போன்ற அறிகுறிகளை JN1 வகையும் வெளிப்படுத்துகிறது."

    "கொரோனா JN1 பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பதாக எந்த தகவலும் இல்லை. தற்போதைய சூழலில் இந்த வகை கொரோனா பாதிப்பு குறித்து பதற்றம் அடைய வேண்டியதில்லை, மாறாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று தெரிவித்தார். 

    • கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கேரளாவில் 266 பேரும், கர்நாடகாவில் 70 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

    கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,420 ஆக அதிகரித்துள்ளது.

    இதனிடையே, பாட்னா, கயா மற்றும் தர்பங்கா விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு பீகார் அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    • இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் அதிகபட்சமாக 265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், பொது இடங்களில் இனி அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சண்டிகர் நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    • 2020-ல் கொரோனா வைரஸ் பரவும்போது ஆல்பா வைரசாக பரவியது.
    • கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது.

    சென்னை:

    கொரோனா தொற்றுக்கு பிறகு உருமாறி உருமாறி பல வைரஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஒமைக்ரானில் இருந்து உருமாறிய ஜே.என்-1 என்ற வைரஸ் பரவி வருவது பற்றி உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை உஷார்படுத்தி உள்ளது.

    இந்த வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஒரு காலத்தில் இன்புளுயன்சா பரவியது. அதன் பிறகு அது மறைந்து விட்டதா? இல்லை. சீசன் காய்ச்சலாக குளிர்காலத்தில் பரவுகிறது. அப்படியே கட்டுப்பட்டும் விடுகிறது.

    அது மட்டுமல்ல இன்புளுயன்சாவில் இருந்து ஏ மற்றும் பி என்ற இரு உருமாறிய வைரஸ்களும் வந்தன.

    இதன் மூலம் சாதாரண வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவையும் வருகின்றன. ஆனால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    அதே போல்தான் கொரோனா வைரசும். அது முற்றிலுமாக ஒழிந்து விடாது. இருந்துகொண்டேதான் இருக்கும்.

    2020-ல் கொரோனா வைரஸ் பரவும்போது ஆல்பா வைரசாக பரவியது. அந்த ஆண்டு இறுதியில் 'டெல்டா' வகை வைரசாக உருமாறி பரவியபோதுதான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நேரடியாக நுரையீரலை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

    அப்போது நம்மிடம் தடுப்பு மருந்துகளும் இல்லை. அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டது. பெரும்பாலும் எல்லோரும் 3 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

    இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவானது. அதேபோல் கொரோனா தாக்கியதாலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்தது.

    கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது. நம் நாட்டில் நைஜீரியாவில் இருந்து வந்தவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு எக்ஸ்.பி.பி. என்ற வகை உருமாறி வந்தது. அதுவும் மறைந்து இப்போது உருமாறிய ஜே.என்-1 என்ற வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இது 26 பேரிடம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் யாருக்கும் பரவவில்லை. பரிசோதனையை அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக கண்டுபிடிக்க முடியும்.

    இதில் நாம் பார்க்க வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான். யாரும் படுத்த படுக்கையாகவில்லை. எனவே இதன் தாக்கம் ஆபத்தை ஏற்படுத்தாது.

    மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது புதுவகை வைரஸ் இல்லை. மிக தீவிரமாகி நுரையீரலை பாதிப்பது இல்லை. மேலும் ஏற்கனவே தடுப்பூசி எடுத்து கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியால் வைரசின் வீரியம் குறைக்கப்படும். எனவே கொரோனாவை நினைத்து பீதி அடைய வேண்டியது இல்லை.

    • 528 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    நாட்டிலேயே அதிக அளவாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் நேற்று 528 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ×