search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா எதிரொலி : சண்டிகரில் மாஸ்க் அணிவது கட்டாயம்
    X

    கொரோனா எதிரொலி : சண்டிகரில் மாஸ்க் அணிவது கட்டாயம்

    • இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் அதிகபட்சமாக 265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், பொது இடங்களில் இனி அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சண்டிகர் நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    Next Story
    ×