மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு உயர்வு

கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... கேரளா, கர்நாடகாவில் பாதிப்பு உயர்வு
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கேரளாவில் 266 பேரும், கர்நாடகாவில் 70 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தள்ளது.

கொரோனாவுக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,420 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, பாட்னா, கயா மற்றும் தர்பங்கா விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு பீகார் அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த நான்கு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com