search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவால் பாதித்தவர்களை 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்த உத்தரவு

    • புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.
    • விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜேஎன் 1 என்ற மாறுதல் அடைந்த கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள் தொடர்பாக கர்நாடக அரசின் அமைச்சரவை துணைக்குழு தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

    அதன்படி பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல், பாதிக்கப்பட்ட நபர்களை 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பது அவசியம். மேலும் அறிகுறிகளுடன் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்கள் கட்டாயம் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிடும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×