search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.
    • உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது.

    சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது.

    நிமோனியா தொற்று அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்குமாறு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மார்கோ ரூபியோ தலைமையிலான குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் அமெரிக்க அதிபர் ஜோபைனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சீனாவில் இதுவரை அறியப்படாத சுவாச நோய் பரவி வருவதால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான பயணத்தை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பொது சுகாதார நெருக்கடிகள் பற்றி பொய் சொல்வதில் சீன அரசு நீண்ட வரலாற்றை கொண்டுள்ளது.

    கொரோனா தொற்றின்போது உண்மையை சீனா மறைத்தது. உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. அமெரிக்கர்களின் ஆரோக்கியத்தையும் நமது பொருளாதாரத்தையும், பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளனர்.

    • அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை.
    • போலீசார் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் போவை பகுதியில் உள்ள அசோக் நகரில் ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்வில்லை. இதையடுத்து, பெற்றோர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே காவல் நிலையம் விரைந்த பெற்றோர், தங்களின் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர். காணாமல் போன சிறுவன் விளையாடி கொண்டிருந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    அதன்படி மோப்ப நாய் "லியோ" சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. முதலில் சிறுவன் அணிந்திருந்த டி-சர்ட் ஒன்றை மோப்பம் பிடித்த லியோ, பிறகு சிறுவன் விளையாடி கொண்டிருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தேடலை துவங்கிய லியோ மைதானத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே சிறுவனை கண்டுபிடித்து அசத்தியது.

    மோப்ப நாய் தேடுதல் வேட்டையில் இறங்கிய மூன்றரை மணி நேரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாத பட்சத்தில் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, சில மணி நேரங்களில் சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது. 

    • கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.
    • அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர்.

    வாழப்பாடி:

    கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமம் வழியாக நிறைமாத கர்ப்பிணியான மலைவாழ் லம்பாடி இனப்பெண் ஒருவர் வந்துள்ளார். சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாத அவர் மெட்டுக்கல் மற்றும் குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோரத்தில் இருந்த எட்டி மரத்தடியில் தங்கியுள்ளார்.

    கிராம மக்களிடம் அன்பாக பழகிய அவர் கிராமத்திலுள்ள குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார். சில தினங்களில் அந்த மரத்தடியிலேயே அழகான குழந்தையை பெற்றெடுத்த அவரும் குழந்தையும் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இவரை அம்மனின் வடிவமாகக் கருதிய கிராம மக்கள் அந்த பெண்ணிற்கு எட்டிமரத்தடியிலேயே சிலை வைத்து கோவில் கட்டினர். இச்சிலைக்கு அருகில் முறுக்கு மீசை முனியப்பன் சாமியையும் பிரதிஷ்டை செய்து எட்டிமரத்து முனியப்பன், லம்பாடி அம்மன் கோவில் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.

    குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் குழந்தையுடன் சென்று லம்பாடி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் குழந்தைகளின் அழுகையை அம்மன் கட்டுப்படுத்தி நோய்நொடி வராமல் பாதுகாப்பதாக இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. இதன்படி ஏ.குமாரபாளையம் மெட்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் குழந்தையை அம்மன் சன்னதியில் படுக்க வைத்து குழந்தைப் பொங்கல் வைத்து நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    • நாளை வரை நடக்கிறது
    • முகாமினை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார்.

    மார்த்தாண்டம், நவ.24-

    சாமியார்மடம் ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் குழந்தை இல்லா தம்பதியருக்கு இலவச மருத்துவ முகாம் ரத்னா நினைவு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடாந்து நாளை (25-ந்தேதி) வரை நடக்கிறது. முகாமினை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார்.

    முகாமானது தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாமில் மருத்துவ ஆலோசனை, விந்தணு பரிசோதனை, ஸ்கேன் ஆகியவை இலவச மாக செய்யப்படும். மேலும் ரத்த பரிசோதனைகள், ஐ.யு.ஐ., ஐ.சி.எஸ்., ஐ.வி.எப். போன்ற மேல்சிகிச்சைகள் சலுகை கட்டணத்தில் செய்யப்படும்.

    முகாமில் கலந்துகொள்ள விரும்பும் குழந்தை இல்லா தம்பதிகள் ஏற்கனவே மேற்கொண்ட பரிசோத னைகளின் முடிவுகள் மற்றும் சிகிச்சை விவ ரங்களை கொண்டு வரு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. இந்த இலவச முகாமில் கலந்துகொண்ட பெண்களுக்கு ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மைய இயக்குனர் டாக்டர் சாந்தி மகிழன் மற்றும் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் ரத்னா நினைவு மருத்துவமனையில் அடிப்ப டை பரிசோதனைகள், கருக்குழாய் அடைப்பை கண்டறிதல், லேப்பிரோஸ் கோப்பி, ஹிஸ்டி ரோஸ்கோப்பி மூலம் கருக்குழாய் அடைப்பை சரி செய்தல், கருமுட்டையை வளர செய்து கண்காணித் தல், விந்தணு பரிசோதனை, உறைநிலையில் விந்தணுக் களை பதப்படுத்து தல், கரு பதப்படுத்துதல், விந்து மீட்பு உட்பட பல்வேறு வகையான சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.

    • பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
    • குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஜீவா நகர் சந்தனமாரியம்மன் கோவில் சேர்ந்தவர் முனீஸ்வரன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (வயது 36). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துசுடலி வேறு ஒரு வாலிபரிடம் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால் மீண்டும் கர்ப்பம் ஆனார்.

    பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துசுடலிக்கு கடந்த 18.10.2023 அன்று ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வறுமை, ஏற்கனவே இருக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சவால்களை கருத்தில் கொண்டு தற்போது பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் நினைத்தார்.

    இதையடுத்து குழந்தையை கொல்லும் எண்ணத்தை கைவிட்டு, தனது கணவர் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் குழந்தையை விற்றுவிட முத்துசுடலி முடிவு செய்தார். அதன்படி தனது விருப்பத்தை சேத்தூரை அடுத்த முகவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜேஸ்வரி (54) என்பவரிடம் கூறியுள்ளார்.

    அவர் மற்றும் தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த புரோக்கர் ஜெயபால், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த செல்வி (30) ஆகியோர் மூலம் ஈரோட்டை சேர்ந்த தம்பிராஜன் மனைவி அசினாவுக்கு பிறந்த 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடந்த 25.10.2023 அன்று முத்துசுடலி விற்றுள்ளார்.

    இதற்கிடையே வீடு திரும்பிய முத்துசுடலிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தாய்ப்பால் கொடுக்காததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் குழந்தை பெற்றெடுத்த ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர். முதலில் பல்வேறு மழுப்பலான பதில்களை கூறிய முத்துசுடலி, பின்னர் குழந்தையை விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் திருப்பதிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் முத்துசுடலியிடம் விசாரணை நடத்தியபோது பிறந்த 7 நாட்களில் குழந்தையை ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு விற்பனை செய்தது உறுதியானது. இதுபற்றி திருப்பதி மற்றும் விருதுநகர் உதவி மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் சேத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், முத்துசுடலியிடம் அதிரடியாக விசாரணை நடத்தினார். இதில் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாததால் ஈரோட்டை சேர்ந்தவருக்கு ரூ.3½ லட்சத்துக்கு விற்றதும் அம்பலம் ஆனது. அந்த பணத்தில் ரூ.2 லட்சத்தை குழந்தையின் தாய் முத்துசுடலிக்கும், மீதமுள்ள ரூ.1½ லட்சம் புரோக்கர் மற்றும் மற்ற பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

    அதனை அடிப்படையாக கொண்டு குழந்தையை விற்ற முத்துசுடலி, முகவூர் ராஜேஸ்வரி, நாமக்கல் குமாரபாளையம் செல்வி, குழந்தையை வாங்கிய ஈரோடு அசினா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள புரோக்கர் ஜெயபாலை தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார் விருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரித்து வருகிறார்கள்.

    ராஜபாளையத்தில் பிறந்த ஒரு வாரமேயான ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சி.சி.டி.வி.காமிராவின் காட்சிகள் ஆய்வு
    • குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    நாகர்கோவில், நவ.19-

    புதுக்கடை அருகே முன்சிறை சந்திப்பில் இருந்து முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலகம் மங்காடு வழியாக களியக் காவிளைக்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் புதுக்கடை போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். புதுக்கடை போலீசாரும் குழந்தை நலத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    பின்னர் முட்புதரில் கிடந்த குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை வீசப் பட்டுள்ளது.

    எனவே அதே பகுதியை சேர்ந்த பெண்கள் யாராவது வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். கள்ளக்காத லில் பிறந்த குழந்தையாக இருக்க லாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர் பாக விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    அந்த பகுதியில் யாராவது நிறை மாத கர்ப்பிணியாக இருந்து தற்பொழுது குழந்தை பெற்றுள் ளார்களா? என்பது குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    மேலும் குழந்தை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் சி.சி.டி.வி. காமிராக்களில் சரியான காட்சிகள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள்.

    • பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.
    • தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்.

    கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது நாக தோஷத்தினால் ஏற்படுவது என்று இன்றும் கிராம மக்கள் கருதுகிறார்கள்.

    ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம்.

    ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதற்கும் கிரகண பாதிப்புதான் காரணம்.

    லக்னத்தில் ராகு இருந்து சந்திரனுடன் கேது சேர்ந்தால் குழந்தை நீலமாகப் பிறக்கும்.

    ராகு - கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள்.

    லக்னம், லக்னத்தில் இருந்து முதல் இரண்டு இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, லக்னாதிபதியை பாவ கிரகங்கள் பார்த்தாலோ பாலாதிர்ஷ்ட தோஷம் என்று கூறுவர்.

    பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.

    நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும்.

    தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்.

    அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும்.

    நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று

    கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

    • கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கவுரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கவுரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதற்காக அவர் மாதம் தோறும் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.

    அப்போது கவுரியை உடல் பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை பிறக்கும் தேதி வந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதையடுத்து அன்று மாலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கவுரியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கவுரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

    இதனையடுத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது. எனினும் குழந்தை உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த ஒரு நாளே ஆன பெண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.
    • ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பொருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25). கர்ப்பமாக இருந்தார். இவர் குடும்பத்தினர் 12 பேருடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார்.

    இன்று காலை சாமி தரிசனம் முடிந்த பிறகு கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு வந்தனர். ரெயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டது.

    இதனால் வேறு வழியின்றி பயணிகள் சிலர் கல்பனாவுக்கு பிரசவம் பார்த்தனர். ஓடும் ரெயிலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.அவரது குடும்பத்தினர் இது குறித்து காட்பாடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ரெயில் நிலையத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரெயில்வே போலீசார் ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    ரெயில் காட்பாடி வந்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சேர்த்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பிரசவமான சம்பவம் காட்பாடி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனது 2 மகன்களுடன் தாயார் வீட்டிற்கு செல்வ தாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.
    • மாயமான சரண்யாவை செல்போன் டவர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் அருகே பறக்கை சி.டி.எம்.புரம் பகுதியை சேர்ந்தவர் சுயம்பு லிங்கம் (வயது 31), கொத்த னார். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ரோகித் (5), பாலரெஜின் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று சரண்யா தனது 2 மகன்களுடன் தாயார் வீட்டிற்கு செல்வ தாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.

    பின்னர் சரண்யா வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சுயம்புலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாயமான சரண்யாவை செல்போன் டவர் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். சரண்யா வுக்கு தோழிகள் யாராவது உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குறைதீர் முகாம்
    • மருத்துவக் கல்லூரியில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு

    அரியலூர்

    அரியலூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள அனிதா நினைவு அரங்கில், தேசிய மற்றும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாவட்ட நிர்வா கம் சார்பில் குழந்தை உரி மை மீறல் குறித்த குறைதீர் அமர்வு நடைபெற்றது.

    தேசிய குழந்தைகள் உரி மைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா தலைமையில் நடைபெற்ற அமர்வில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய கூடுதல் இயக்குநர் ஜித்தேந்திர சிங், ஆலோசகர் தேவேந்திரகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு,

    ஆண்டிமடம் ஒன்றியத்தி ற்கு ட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் புகார்கள் குறித்து குழந்தைகளிடம் விசாரி த்தார். மேலும், குழந்தை களின் பாதுகாப்பு, பள்ளி இடைநிற்றல், உடல் ரீதியான தண்டனை, ஆதரவற்ற குழ ந்தைகள் பாதுகாப்பு உள்பட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்கள் தொட ர்பான 300-க்கும் மேற்பட்ட மனுக்களை நேரடியாக பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • மழை நின்றபின் குழந்தை லோகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
    • அருகில் இருந்த கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பெருமகளூர் பேரூராட்சி கல்யாண ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் - பிரியா தம்பதியரின் குழந்தை லோகிதா ( வயது 2).

    பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்து வந்தது.

    மழை நின்றபின் குழந்தை ேலாகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் இருந்த கம்பியை தொட்ட போது அதிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை யோகிதா தூக்கி வீசப்பட்டது.

    உடனடியாக குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெருமகளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்த பேராவூ ரணி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×