search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.சி.டி.வி.காமிரா"

    • சி.சி.டி.வி.காமிராவின் காட்சிகள் ஆய்வு
    • குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    நாகர்கோவில், நவ.19-

    புதுக்கடை அருகே முன்சிறை சந்திப்பில் இருந்து முஞ்சிறை கிராம நிர்வாக அலுவலகம் மங்காடு வழியாக களியக் காவிளைக்கு செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது.

    இதை பார்த்த பொது மக்கள் புதுக்கடை போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். புதுக்கடை போலீசாரும் குழந்தை நலத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    பின்னர் முட்புதரில் கிடந்த குழந்தையை மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    பிறந்த சில மணி நேரத்தில் குழந்தை வீசப் பட்டுள்ளது.

    எனவே அதே பகுதியை சேர்ந்த பெண்கள் யாராவது வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். கள்ளக்காத லில் பிறந்த குழந்தையாக இருக்க லாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர் பாக விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    அந்த பகுதியில் யாராவது நிறை மாத கர்ப்பிணியாக இருந்து தற்பொழுது குழந்தை பெற்றுள் ளார்களா? என்பது குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    மேலும் குழந்தை வீசப்பட்ட பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் சி.சி.டி.வி. காமிராக்களில் சரியான காட்சிகள் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார் கள்.

    • சி.சி.டி.வி.காமிரா பதிவுகளை கைப்பற்றி தனிப்படை விசாரணை
    • மோட்டார் சைக்கிளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இருந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருணாங்குளம் சந்திப்பில் கடந்த 3 நாட்களாக மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அந்த சாக்கு மூட்டையில் இருந்து தான் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. போலீசார் அந்த சாக்கை பிரித்து பார்த்த போது மயில் ஒன்றை கொன்று தோலை உரித்து வைத்திருந்தனர். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இருந்தது.

    எனவே மயிலை கொன்று சமைத்து சாப்பிட கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அதனை மோட்டார் சைக்கிளுடன் விட்டுச் சென்றது ஏன்? என்பது தெரியவில்லை. வேறு ஏதும் காரணங்களுக்காக அதனை கொண்டு வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை பாதியில் நிறுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதனை தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அது வடசேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரிய வந்தது. வனத்து றையினர் அவரிடம் விசாரணை நடத்தி னார்கள். அப்போது தனது மோட்டார் சைக்கிள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாயமாகி விட்டதாகவும் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.

    இதை கேட்டு வனத்துறை யினர் அதிர்ச்சி அடைந்தனர். மோட்டார் சைக்கிளை திருடிய நபர் தான் மயிலையும் கொன்று சமைத்து சாப்பிட எடுத்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மயிலை கொன்ற கும்பலை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை பற்றி விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    ×