search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் திருட்டு மோட்டார் சைக்கிளில் மயிலை கொன்று வைத்த கும்பல்
    X

    நாகர்கோவிலில் திருட்டு மோட்டார் சைக்கிளில் மயிலை கொன்று வைத்த கும்பல்

    • சி.சி.டி.வி.காமிரா பதிவுகளை கைப்பற்றி தனிப்படை விசாரணை
    • மோட்டார் சைக்கிளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இருந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருணாங்குளம் சந்திப்பில் கடந்த 3 நாட்களாக மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அந்த சாக்கு மூட்டையில் இருந்து தான் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. போலீசார் அந்த சாக்கை பிரித்து பார்த்த போது மயில் ஒன்றை கொன்று தோலை உரித்து வைத்திருந்தனர். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இருந்தது.

    எனவே மயிலை கொன்று சமைத்து சாப்பிட கொண்டு வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அதனை மோட்டார் சைக்கிளுடன் விட்டுச் சென்றது ஏன்? என்பது தெரியவில்லை. வேறு ஏதும் காரணங்களுக்காக அதனை கொண்டு வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை பாதியில் நிறுத்திவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதனை தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அது வடசேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என்பது தெரிய வந்தது. வனத்து றையினர் அவரிடம் விசாரணை நடத்தி னார்கள். அப்போது தனது மோட்டார் சைக்கிள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாயமாகி விட்டதாகவும் இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தி ருப்பதாகவும் அவர் கூறினார்.

    இதை கேட்டு வனத்துறை யினர் அதிர்ச்சி அடைந்தனர். மோட்டார் சைக்கிளை திருடிய நபர் தான் மயிலையும் கொன்று சமைத்து சாப்பிட எடுத்துச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மயிலை கொன்ற கும்பலை பிடிக்க வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை பற்றி விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    Next Story
    ×