search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்னா"

    • நாளை வரை நடக்கிறது
    • முகாமினை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார்.

    மார்த்தாண்டம், நவ.24-

    சாமியார்மடம் ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மையத்தில் குழந்தை இல்லா தம்பதியருக்கு இலவச மருத்துவ முகாம் ரத்னா நினைவு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தொடாந்து நாளை (25-ந்தேதி) வரை நடக்கிறது. முகாமினை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார்.

    முகாமானது தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாமில் மருத்துவ ஆலோசனை, விந்தணு பரிசோதனை, ஸ்கேன் ஆகியவை இலவச மாக செய்யப்படும். மேலும் ரத்த பரிசோதனைகள், ஐ.யு.ஐ., ஐ.சி.எஸ்., ஐ.வி.எப். போன்ற மேல்சிகிச்சைகள் சலுகை கட்டணத்தில் செய்யப்படும்.

    முகாமில் கலந்துகொள்ள விரும்பும் குழந்தை இல்லா தம்பதிகள் ஏற்கனவே மேற்கொண்ட பரிசோத னைகளின் முடிவுகள் மற்றும் சிகிச்சை விவ ரங்களை கொண்டு வரு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது. இந்த இலவச முகாமில் கலந்துகொண்ட பெண்களுக்கு ரத்னா டெஸ்ட்டியூப் பேபி மைய இயக்குனர் டாக்டர் சாந்தி மகிழன் மற்றும் மற்றும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் ரத்னா நினைவு மருத்துவமனையில் அடிப்ப டை பரிசோதனைகள், கருக்குழாய் அடைப்பை கண்டறிதல், லேப்பிரோஸ் கோப்பி, ஹிஸ்டி ரோஸ்கோப்பி மூலம் கருக்குழாய் அடைப்பை சரி செய்தல், கருமுட்டையை வளர செய்து கண்காணித் தல், விந்தணு பரிசோதனை, உறைநிலையில் விந்தணுக் களை பதப்படுத்து தல், கரு பதப்படுத்துதல், விந்து மீட்பு உட்பட பல்வேறு வகையான சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.

    ×