search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாக வழிபாடு"

    • தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.
    • திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.

    தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்.

    இத்தலத்தில் மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாம்புப் புற்றுக்கு பக்தர்கள்

    பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர்.

    12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று 6-4-1988-ல் இங்கு சட்டை உரித்து விட்டுச் சென்றிருக்கிறது.

    அதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழி பட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    சங்கரன்கோவில்

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது.

    நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர்.

    இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரைவில் நடைபெறும்.

    • காஸ்யபருக்கும் கத்ரு என்பவருக்கும் பிறந்தவர் நாகர்.
    • தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.

    ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதத்தை தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு மாதமும் விரதத்தை பின்பற்ற வேண்டும்.

    நாக பஞ்சமி விரதம் ஏற்பட்டதற்கான புராண நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:

    காஸ்யபருக்கும் கத்ரு என்பவருக்கும் பிறந்தவர் நாகர்.

    தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கினார், நாகர்.

    இதனால் கோபம் கொண்ட தாயர் கர்து, தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படி மகனுக்கு சாபம் கொடுத்தாள்.

    ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் எப்படி நிறைவேறியது என்பதை பார்க்கலாம்.

    பரிசட்த்து மன்னன் பாம்புகளின் தலைவனாக விளங்கிய "தட்சகன்" என்ற கொடிய நாகத்தால் கடிக்கப்பட்டு இறந்தான்.

    தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இணத்தையே அழிக்க உறுதி பூண்டான் பரிசட்த்தின் மகன் ஜனமேஜயன்.

    அதற்காக "சர்ப்பயக்ஞம்" என்ற வேள்வியை நடத்தினான்.

    பல பாம்புகள் அவன் நடத்திய யாகத்தில் இருந்த வேள்வித்தீயில் விழுந்து மாண்டன.

    அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி நாகர்க்கு சாப நிவர்த்தி கொடுத்தார்.

    அவ்வாறு சாபநிவர்த்தி கொடுத்த நாள் ஒரு பஞ்சமி தினமாகும்.

    எனவே இந்த நாக பஞ்சமி விரதம் ஆனி மாத சுக்லபஷ பஞ்சமியில் கொண்டாடும் வழக்கம் உள்ளது.

    இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

    புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் புத்திரர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

    விரதமுறை

    நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் பால் அபிஷேகம் செய்வார்கள்.

    பின் மஞ்சள் பூசிக் குங்குமம் வைப்பார்கள்.

    பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள்.

    மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வருவார்கள்.

    • மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
    • இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.

    சிவாலயங்களில் வழிபாடு செய்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வரும் பொழுது ஒரு புறம் அரச மரத்தடியை காணலாம்.

    அரச மரத்தடியில் விநாயகர் சிலையும், பாம்பு கல்லும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை பல கோவில்களில் காணலாம்.

    பாம்புக்கல்லில் இரண்டு பாம்புகள் பின்னி இணைந்திருப்பதையும் நடுவில் சிறிய சிவலிங்கம் இருப்பதையும் காணலாம்.

    பாம்புக்கல்லில் உள்ள பாம்பு போல தம்பதியர் இணைந்து, விநாயகரின் அருளாலும், வேப்பமரங்களின் மருத்துவ சக்தியாலும் மகப்பேறு பெறலாம் என்பது தத்துவம்.

    அரசமரம், விநாயகர், பாம்புக்கல் இந்த மூன்றையும் ஒருங்கே வலம் வந்து வழிபடவேண்டும்.

    திங்கட்கிழமை அமாவாசை வந்தால் அன்று வழிபாடு செய்வது சிறப்பு உடையது.

    வழிபாடு செய்யும் பொழுது ஏழுமுறை வலம் வரவேண்டும். ஒரு சிலர் கடும் விரதம் இருந்து 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    பாம்புக் கல்லைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினால் முதல்நாள் அதை தண்ணீரில் மூழ்கி இருக்கச் செய்ய வேண்டும்.

    மகப்பேறு வேண்டி பிராத்தனை செய்து கொண்ட தம்பதிகள் அந்த குறிப்பிட்ட முதல் நாள் இரவு உணவு உட்கொள்ளக்கூடாது.

    மறுநாள் அரசமரத்தடியில் மேடை அமைத்து அதன்மேல் பாம்புக்கல்லைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    இவ்வாறு பிரதிஷ்டை செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்புகின்றனர்.

    ராமேஸ்வரத்தில் பாம்புக் கல்லை பிரதிஷ்டை, செய்வது விசேஷம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் ஆலயத்தில் எண்ணற்ற பாம்புக்கற்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

    • இச்சிலையை வேளூர் மாரிச்செட்டியாரும் அவருடைய நண்பர் கந்தப்ப ஆச்சாரியும் நிறுவினர்.
    • அவர்கள் திருப்போரூர் சென்று கந்தபெருமானை வழிபடுவது வழக்கம்.

    சென்னை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் மூலஸ்தானத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது.

    இச்சிலையை வேளூர் மாரிச்செட்டியாரும் அவருடைய நண்பர் கந்தப்ப ஆச்சாரியும் நிறுவினர்.

    அவர்கள் திருப்போரூர் சென்று கந்தபெருமானை வழிபடுவது வழக்கம்.

    ஒரு முறை இது போன்று திருப்போரூருக்கு செல்லும் பொழுது அருகில் களைப்பாற ஒரு மரத்தடியில் படுத்தனர்.

    அப்போது, வேளூர் மாரிச்செட்டியார் கனவில் ஸ்ரீகந்தசாமி தோன்றி, தாம் அருகில் உள்ள புற்றில் இருப்பதாகவும்,

    தன்னை எடுத்துச் சென்னைக்கு சென்று நிறுவி கோவில் கட்டுமாறும் பணித்தார்.

    அவ்வாறு அவர்கள் இப்போது கந்தகோட்டம் உள்ள இடத்தில் குளித்துவிட்டு மீண்டும் சிலையை எடுக்க முயன்ற போது

    எடுக்க முடியவில்லை எனவே இது தான் ஸ்ரீகந்த பெருமானின் திருவுள்ளம் போலும் எனக்கருதி, அங்கேயே கோவில் கட்டினர்.

    இதிலிருந்து புற்றிலிருந்து வெளிப்படும் இறைவனுக்கு தனிமகத்துவம் உள்ளது என்பதை அறியலாம்.

    • ஒரு பசு மட்டும் அருகில் உள்ள புற்றில் பால் சுரந்து பீச்ச அதனை நாகம் அருந்துவதைக் கண்ணுற்றார்
    • தம்பிக்கலை ஐயன் திருக்கோவிலின் பின்புறம் புற்று உள்ள நாகர் ஆலயம் உள்ளது.

    ராகு கேது திருத்தலமான தம்பிக்கலை ஐயன் கோவில் ஈரோடு சத்தி மார்க்கத்தில் காஞ்சி கோவில் அருகில் உள்ளது.

    அக்காலத்தில் காஞ்சி கோவில் அருகே வனாந்தரமாக இருந்ததாம்.

    ஒரு முறை தம்பிக்கலை ஐயனின் தம்பி நல்லண்ணன் பசுக்களை அருகில் உள்ள வனத்தில் மேய்த்து வருகையில்

    ஒரு பசு மட்டும் அருகில் உள்ள புற்றில் பால் சுரந்து பீச்ச அதனை நாகம் அருந்துவதைக் கண்ணுற்றார், தம்பிக்கலை ஐயன்.

    இக்காட்சியைக் கண்டபோதே இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.

    தம்பிக்கலை ஐயன் திருக்கோவிலின் பின்புறம் புற்று உள்ள நாகர் ஆலயம் உள்ளது.

    அந்த இடத்தில் மண் செம்பில் தீர்த்தம் எடுத்து வந்து அவ்விடத்தில் மந்திரித்துக் குடித்தால் தோல் வியாதிகளும் மனநோய்களும் குணமாகும்.

    • புதுக்கோட்டையில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது பேரையூர்.
    • பால் அவரது உடலில் பட்டவுடன் நீலநிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம்.

    புதுக்கோட்டையில் இருந்து 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது பேரையூர்.

    இங்குள்ள ஆலயத்தில் உள்ள இறைவனின் பெயர் நாகநாதசுவாமி என்பதாகும்.

    நாகராஜன் வணங்கிப் பூசித்த திருத்தலம். எனவே இறைவன் நாகநாதன் எனப்படுகிறான்.

    திருத்தலத்தில் நாகநாதருக்குப் பால் அபிஷேகம் செய்வார்கள்.

    பால் அவரது உடலில் பட்டவுடன் நீலநிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம்.

    சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரிய பகவான் இங்கு வழிபட்டு நலம் பெற்ற சிவஸ்தலம் இது.

    • இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
    • கழுத்தில் மாலையாக விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.

    1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.

    2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.

    3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

    4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

    5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

    6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.

    7. பாம்பு கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

    8. கழுத்தில் மாலையாக விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்.

    • நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள்.
    • மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.

    நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள்.

    இந்த நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி,

    சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.

    இந்த விரதத்தையும் பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும்.

    ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டி அன்று செய்ய வேண்டும். இதற்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, செம்பிலோ, நாகவடிவம்

    செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    சுக்ல பஷ சஷ்டியன்று அதிகாலையில் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விநாயகரை வழிபட வேண்டும்.

    பூஜை அறையிலோ கூடத்திலோ கலசம் அமைத்து அலங்கரித்து, நாகவடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் கும்குமம்

    திலகமிட்டு பசும்பால், தேன், கல்கண்டு, கனி வகைகள், வைத்து நிவேதினம், செய்து தூபதீபம் காட்டுப் பிராத்தனை செய்ய வேண்டும்.

    பிரார்த்தனை முடிந்ததும் பசும் பாலில் தேனைக் கலந்து பிறருக்கு பிரசாகமாக தந்துவிட்டு, விரதமிருப்பவர்களும் சாப்பிடலாம்.

    காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப் பொருட்களை சாப்பிட்டு விட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்கவேண்டும்.

    மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும்.

    அதன்பிறகு இரவு பலகாரம் சாப்பிடலாம். நாகராஜ விரதமிருப்பவர்கள் முறைப்படி இதைக் கடைப்பிடித்தால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

    அதற்கு அடையாளமாக நேரிலோ கனவிலோ சர்ப்பம் படம் விரித்து ஆடுவதைக் காணலாம் என சர்ப்ப தோஷபரிகார நூல் கூறுகிறது.

    • கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.
    • பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.

    கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது.

    அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாக உருவத்தை சிலையாக செய்து

    தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.

    ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது.

    அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சரும வியாதி குணமாகவில்லை.

    நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை,

    சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது.

    அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார்.

    அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது.

    தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார்.

    அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்தது.

    இந்த விஷயம் தெரிந்து பாண்டிய நாட்டின் மன்னர், "எனக்கு பல வருடங்களாக பாடாய்படுத்தி வரும்

    இந்த சருமவியாதியை தீர்க்க, கேரளாவில் உள்ள அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள்" என்றார்.

    மதுரை வந்த நம்பூதிரியும் அரசரின் சருமவியாதியை தீர்க்க, தான் வழிபடும் நாகர் சிலைகளின் மீது

    பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.

    மன்னரின் உடலில் இதுநாள் வரை இருந்த சருமவியாதி நீங்கியது.

    இதை கண்டு அரசர் மகிழ்ந்து அந்த நம்பூதிரிக்கு பொன்னும் பொருட்களும் அள்ளி கொடுத்து அத்துடன்

    பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை துணை அனுப்பி நம்பூதிரியை சகல மரியாதையுடன்

    கேரள தேசத்திற்கு திரும்ப அனுப்பி வைத்தார்.

    • பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.
    • சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆச்சாரத்துடன் செய்ய வேண்டும்.

    பரிகாரத் தலங்களில் செய்யும் வழிபாடுகள் மூலமாக ராகு, கேது தோஷங்கள் நம்மை விட்டு விலகுகின்றன.

    சர்ப்ப பரிகாரங்கள் செய்யும்போது மிகுந்த ஆச்சாரத்துடன் செய்ய வேண்டும்.

    சைவ உணவு விரதம் மேற்கொள்ள வேண்டும்.

    பிக்னிக் செல்லது போல் செல்லாமல், பக்தி யாத்திரையாக மேற்கொள்ள வேண்டும்.

    தான தர்மங்களை மனம் கோணாமல், மனமுவந்து நம்மால் முடிந்த அளவு செய்ய வேண்டும்.

    * காளஹஸ்தி

    திருப்பதிக்கு மிக அருகில் உள்ளது. சென்னை-திருப்பதி சாலையில் உள்ளது.

    ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் காளஹஸ்தி செல்லலாம்.

    * திருநாகேஸ்வரம்

    கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு நாகருக்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

    * திருமணஞ்சேரி

    இது கும்பகோணத்திலிருந்து குத்தாலம் சென்று, அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.

    * திருப்பாம்புரம்

    கும்பகோணத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம் - காரைக்கால் சாலையில் உள்ளது.

    * வாழைத் தோட்டத்து அய்யன் கோவில்

    திருப்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் மங்கலம் கிராமத்துக்கு அருகில் உள்ளது. அங்குள்ள புற்றுமண் சர்வரோக நிவாரணியாகும்.

    * கீழ்பெரும்பள்ளம்

    கேது சேஷத்திரம் - இங்கும் பரிகாரம் செய்து வைக்கப்படுகிறது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது.

    * மன்னார்சாலா - கேரளா

    எர்ணாகுளம் அடுத்த ஆலப்புழையிலிருந்து ஒரு மணி நேரம் பயணத்தில், திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் ஹரிபாடு என்னுமிடத்தில், 5 கி.மீ தொலைவில் மன்னார்சாலா உள்ளது.

    * பாம்பு மெய்காட்டு அம்பலம்

    திருச்சூரிலிருந்து மாலா என்னும் ஊரில் உள்ளது.

    • பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.
    • தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்.

    கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது நாக தோஷத்தினால் ஏற்படுவது என்று இன்றும் கிராம மக்கள் கருதுகிறார்கள்.

    ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம்.

    ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதற்கும் கிரகண பாதிப்புதான் காரணம்.

    லக்னத்தில் ராகு இருந்து சந்திரனுடன் கேது சேர்ந்தால் குழந்தை நீலமாகப் பிறக்கும்.

    ராகு - கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள்.

    லக்னம், லக்னத்தில் இருந்து முதல் இரண்டு இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, லக்னாதிபதியை பாவ கிரகங்கள் பார்த்தாலோ பாலாதிர்ஷ்ட தோஷம் என்று கூறுவர்.

    பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.

    நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும்.

    தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன்.

    அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும்.

    நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று

    கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

    • ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
    • மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும்.

    சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும்.

    ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும்.

    ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.

    புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

    இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.

    மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.

    ×