search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பழங்கால நாக வழிபாடு
    X

    பழங்கால நாக வழிபாடு

    • இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பை சூடியிருந்தனர்.
    • அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு.

    பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர்.

    இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர்.

    இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பை சூடியிருந்தனர்.

    கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.

    இதே போன்று நாகலோகம் என்ற ஒன்று இருந்ததாகவும், அங்கு நாகங்களின் தலைவன் நாகராஜன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி.

    அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார்.

    அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு.

    இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது.

    இவ்வாறு நாக வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது.

    Next Story
    ×