search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளச்சல்"

    • ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம்.
    • தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடி தொழில் செய்து வரு கின்றன.

    இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்குச் சென்று அருகில் மீன்பிடித்து விட்டு மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளன.

    முதல் கட்டமாக குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 50 விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.மீதி படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.அவை மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறது.

    ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் மற்ற விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லும்.அந்த வகையில் தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    இதனால் குளச்சல் கடல் பகுதியில் இருந்து மீதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் வியா பாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப்படகுகளில் இந்த சீசனில் 'கேரை'மீன்கள் பிடிபடும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்க வில்லை.ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது.பிடிபடும் இந்த மீன்களும் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது என்றனர்.

    • இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது
    • துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

    ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பியது.

    விசைப்படகு மீனவர்கள் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மறுநாள் சுனாமி நினைவு நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு ஆலய வழிபாடுகளிலும் கலந்து கொண்டு நேற்று முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.

    ஒரு சில படகுகள் சுனாமி நினைவு நாள் முடிந்ததும் மீன் பிடிக்க சென்றன. இதில் ஒரு படகு இன்று காலை கரை திரும்பியது. இந்த படகில் திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட இந்த மீனை கரை சேர்க்க முடியாததால் மீனவர்கள் 8 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். ஏல முடிவில் இந்த மீன் ரூ.61 ஆயிரத்திற்கு விலைபோனது. இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பணம் அரசு கணக்கில் சேர்ப்பு
    • தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் குளச்சல் அரபிக்கடல் பகுதிக்கு வரும் கர்நாடகா விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் கடலில் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்களை சட்ட விரோதமாக பிடித்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளச்சல் அரபிக்கடல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளில் வந்த 29 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்து வருவதாக குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடகாவை சேர்ந்த 3 விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 3 விசைப்படகுகளில் இருந்த கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த 29 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக, தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான சாவாளை மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அமிர்தேஸ்வரி, அமிர்தா னந்தா, அஜனா ஆகிய மூன்று விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்களையும் அதிகளவில் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அமிர்தேஸ் வரி படகின் உரிமையாளர் சச்சின், அமிர்தானந்தா படகின் உரிமையாளர் நாகம்மா, அஜனா படகின் உரிமையாளர் அசரப் ஆகியோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து பறி முதல் செய்யப்பட்ட மீன்கள் நேற்று குளச்சல் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ரூ.10 லட்சத்திற்கும் மேல் இந்த சாவாளை மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.இந்த மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க பயன்படுவதால் மீன் எண்ணை நிறுவனத்தினர் இதனை வாங்கி சென்றனர்.இந்த சாவாளை விற்பனை செய்யப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் தகவல்
    • உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    செம்பொன்விளை துணை மின் நிலையம் குளச்சல் விநியோக பிரிவுக்குட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் வரும் 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடப்பதால் உடையார்விளை, கோணங்காடு, அஞ்சாலி ஆகிய பகுதியிலும், 15-ந்தேதி செம்பொன்விளை மின் பிரிவுக்குட்பட்ட பாலப்பள்ளம், மிடாலக்காடு, நீர்வக்குழி, மத்திக்கோடு, பிடாகை, சகாய நகர், குப்பியந்தறை, நெடுவிளை பகுதியிலும், 16-ந்தேதி குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட நரிக்கல், கீழ்கரை பகுதியிலும், 21-ந்தேதி குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட இலப்பைவிளை, மரமடி, கொட்டில்பாடு, குழந்தை ஏசு காலனி, ஆசாத்நகர், காரித்தாஸ் காலனி பகுதியிலும், 22 ம் தேதி செம்பொன்விளை விநியோகத்திற்குட்பட்ட இரும்பிலி, கணேசபுரம், பனவிளை, சலேட்நகர், கண்டர்விளாகம், வாணியக்குடி, ஆலஞ்சி, குறும்பனை ஆகிய பகுதியிலும் மேற்கூறிய நேரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேரளாவுக்கு கடத்தியபோது பிடிபட்டது
    • போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசாரும், வருவாய்த்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்தி தடுப்பதோடு, கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமை யிலான பணியாளர்கள், கல்குளம் வட்டம் குளச்சல் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தே கத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது.

    அந்த காரை நிறுத்தும் படிஅதிகாரிகள் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து சற்று தூரம் தள்ளி கார் நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்த னர். அப்போது காருக்குள் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளில் இருப்பது தெரியவந்தது. அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அரிசி மூடைகள் உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படை க்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டது. கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • வானிலை எச்சரிக்கை காரணமாக கடலுக்குச் செல்லவில்லை
    • குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 300 விசை படகுகள், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசை ப்படகுகள் ஆழ் கடல் பகுதி வரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.

    இந்த நிலையில் மன்னார் வளைகுடா, பாண்டிச்சேரி மற்றும் தமிழக கடல் பகுதி யில் 40 கி.மீ.முதல் 50 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், இது அதிகரித்து 60 கி.மீ.வரை வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    குமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் இன்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை.

    அவை குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.மேற்கு கடற்கரை பகுதியில் காற்று எச்சரிக்கை விடுக்கப்படா ததால் சில படகுகள் குமரி மேற்கு கடற்கரை பகுதிக்கு சென்று தொழில் செய்து வருகின்றன.

    இது தவிர காற்று எச்சரிக்கை காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டு மரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாது காப்பாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன.அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

    இதனால் குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடி த்தொழில் பாதிக்கப்பட்டது.

    • தாக்குதலில் படுகாயமடைந்தவர் நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் கடுக்கா விளையை சேர்ந்தவர் தானேஸ்ராஜ் (வயது 53). இவர் அசாமில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகி றார்.

    இவரது மனைவி ரம்யா. கல்லுக்கூட்டம் சந்திப்பில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். இதன் திறப்பு விழாவுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் தானேஸ் ராஜின் நண்பர் ஆதரவு கருத்துக்களை பதிவிட்டார்.

    இதற்கு வேம்படி விளை யை சேர்ந்த ஜாப்ரி ஜாண் (27) எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் அவர், தேனேஸ்ராஜின் நண்பர் ஆடினார்விளையில் செல்லும்போது வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதனை தேனேஸ்ராஜ் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜாப்ரி ஜாண் கீழே கிடந்த கல்லை எடுத்து தேனேஸ்ராஜின் தலையில் அடித்து மிரட்டல் விடுத்தார். தாக்குதலில் படுகாய மடைந்த தேனேஸ் ராஜ் நெய்யூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து குளச்சல் போலீசார் ஜாப்ரி ஜாண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியை பிஷி ஜாஸ்மின் தலைமையில் நடைபெற்றது. புதிய வகுப்பறைகளை பிரின்ஸ் எம். எல். ஏ., நகர்மன்ற தலைவர் நசீர், வட்டார கல்வி அலுவலர் ஹரிகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். குமரி கிழக்கு மாவட்ட காங். தலைவர் கே. டி. உதயம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல்சேகர், லாரன்ஸ், செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெயராஜ், நகர தலைவர் சந்திரசேகர், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் லதா ராபின்சன், கவுன்சிலர்கள் ரமேஷ் செல்வகுமாரி, சுரேஷ் குமார், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பசீலா, துணைத்தலைவர் சமீனுதீன், பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    • உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.
    • விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலோர காவல் குழுமம் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் குளச்சல் மரைன் காவல் நிலையம் சார்பில் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக இணைய தள விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.

    மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் மாணவிகளுக்கு சமூக இணைய தளத்தில் வரும் ஆபாச படங்களை ஷேர் செய்யக்கூடாது, அறிமுகமில்லாத பெண்களிடம் பழக கூடாது, குறிப்பாக காதல் வசப்படக்கூடாது. எவரேனும் காதல் கடிதம் தந்தால் அல்லது காதலிக்கிறேன் என மெசேஜ் அனுப்பினால் வீட்டில் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளியில் ஆசிரியர்களிடம் கூற வேண்டும்.தாய் தந்தையை தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது, படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எதிர்க்காலத்தை பெற்றோர் அமைத்து தருவர். மாணவர்கள் கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கக்கூடாது.விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் கடன் வாங்கி உங்களை படிக்க வைக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகுவது, பெற்றோரை கொலை செய்வதற்கு சமம்.தினமும் நீங்கள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்.அதில் வரும் குற்றச்செய்திகளை தெரிந்து கொண்டு, நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். ஸ்கூட்டி ஓட்டும்போது அதிக வேகத்தில் செல்லக்கூடாது.

    திருப்பம், வளைவுகளில் செல்லும்போது போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விபத்துக்களில் சிக்க கூடாது என அறிவுரை கூறினார். பின்னர் மாணவர்கள் அனைவரும் 'போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம்'என போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர் கெஜின், உடற்கல்வி ஆசிரியர் ஜூடின் மற்றும் மரைன் போலீசார் கலந்து கொண்டனர்.

    • அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • தக்க நேரத்தில் கடலில் குதித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மரைன் போலீஸ் மற்றும் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் மரைன் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ்குமார், முதல் நிலை காவலர் சிவகுமார் ஆகியோர் நேற்று பகல் குளச்சல் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    குளச்சல் துறைமுக பழைய பாலம் அருகே செல்லும்போது பாலத்தின் மீது நடந்து சென்ற 52 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் திடீரென கடலில் குதித்தார்.இதனை கவனித்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் உடனே கடலில் குதித்து அந்த பெண் குதித்த இடத்திற்கு நீந்தி சென்றார்.மணற்பரப்பிலிருந்து இதை பார்த்த மரமடியை சேர்ந்த மீனவர்கள் ராஜ், எப்ரேன் ஆகியோரும் கடலில் குதித்து நீந்தி சென்றனர்.சிறிது நேரத்திற்கு பின்பு தத்தளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு கடலில் மூழ்காமல் பார்த்துக்கொண்டனர்.

    இதற்கிடையே அந்த பெண் மயக்கமானார்.உடனே சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் மற்றும் மீனவர்கள் அந்த பெண்ணை தாங்கிக்கொண்டு நீந்தினர்.பின்னர் அந்த வழியாக பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற குறும்பனை கிறிஸ்து ஜெயந்தன் என்பவரை உதவிக்கு அழைத்தனர்.உடனே கிறிஸ்து ஜெயந்தன் வள்ளத்தை வேகமாக அவர்கள் பக்கத்தில் திருப்பி 4 பேரையும் வள்ளத்தில் மீட்டு மீன் துறைமுகத்தில் கரை சேர்த்தார்.

    பின்னர் த.மு.மு.க. ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்.அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தக்க நேரத்தில் கடலில் குதித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மரைன் போலீஸ் மற்றும் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர். விசாரணையில் அந்த பெண் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை
    • மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம்

    கன்னியாகுமரி:

    குளச்சல் துறைமுகத்தில் இருந்து சுமார் 300 விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை சுற்றியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் 45 கி.மீ.முதல் 55 கி.மீ.வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும், 11 மற்றும் 12-ந் தேதிகளில் 65 கி.மீ. அளவிற்கு வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த தகவல் குமரி மாவட்ட அனைத்து கட லோர மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று மீண்டும் கடலுக்குச் செல்ல வில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.

    இன்றும் பெரும்பாலான விசைப்படகுகள், பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இருப்பினும் ஒரு சில வள்ளங்கள் மீன் பிடிக்க சென்றன. இவற்றுள் குறை வான மீன்களே கிடைத்தன.குளச்சலில் நேற்று மீன்வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கம் மீன்கள் கிடைத்து வருகின்றன.ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 45 படகுகள் நேற்று கரை திரும்பின.இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் கிடைத்தன.

    மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு கிலோ கிளி மீன்கள் தலா ரூ.105 விலை போனது.கடந்த நாட்களை விடவும் ரூ.25 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சின்ன கிளி மீன் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.85 வரை விலை போனது. நாக்கண்டம் தலா கிலோ வழக்கமாக ரூ.40 க்கு விலை போனது. தோட்டு கணவாய் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.385 விலையும், ஓலக்கணவாய் வழக்கமாய் ரூ.240-க்கும், ஸ்குட் கணவாய் ரூ.415 க்கும், நிப்புள் கணவாய் ரூ.180-க்கும் விலைபோனது.

    கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண் டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    ×