search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் விசைப்படகில் சிக்கிய 1000 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் ரூ.61ஆயிரத்திற்கு விற்பனையானது
    X

    1000 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன். 

    குளச்சல் விசைப்படகில் சிக்கிய 1000 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் ரூ.61ஆயிரத்திற்கு விற்பனையானது

    • இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது
    • துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

    ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பியது.

    விசைப்படகு மீனவர்கள் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மறுநாள் சுனாமி நினைவு நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு ஆலய வழிபாடுகளிலும் கலந்து கொண்டு நேற்று முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.

    ஒரு சில படகுகள் சுனாமி நினைவு நாள் முடிந்ததும் மீன் பிடிக்க சென்றன. இதில் ஒரு படகு இன்று காலை கரை திரும்பியது. இந்த படகில் திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட இந்த மீனை கரை சேர்க்க முடியாததால் மீனவர்கள் 8 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். ஏல முடிவில் இந்த மீன் ரூ.61 ஆயிரத்திற்கு விலைபோனது. இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×