search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் கடல் பகுதியில் போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கவலை
    X

    குளச்சல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.

    குளச்சல் கடல் பகுதியில் போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கவலை

    • ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம்.
    • தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடி தொழில் செய்து வரு கின்றன.

    இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

    பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்குச் சென்று அருகில் மீன்பிடித்து விட்டு மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளன.

    முதல் கட்டமாக குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 50 விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.மீதி படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.அவை மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறது.

    ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் மற்ற விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லும்.அந்த வகையில் தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

    இதனால் குளச்சல் கடல் பகுதியில் இருந்து மீதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் வியா பாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப்படகுகளில் இந்த சீசனில் 'கேரை'மீன்கள் பிடிபடும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்க வில்லை.ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது.பிடிபடும் இந்த மீன்களும் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது என்றனர்.

    Next Story
    ×