search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பழக்கம்"

    • தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் தனியார் பாதுகாவலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய சைலேந்திரபாபு, தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்களை போதை பழக்கம் நெருங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    செங்கல்பட்டு:

    பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் தற்போது அதிகரித்து வருகின்றன. இதனால் பள்ளி பருவத்திலேயே சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்யவும், பள்ளிகளில் மருத்துவ பரிசோதனையின் போது மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பழக்கம் உள்ளதா? என்பதை சோதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதில் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். போதைப்பழக்கத்துக்கு தேவையான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
    • கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    விழுப்புரம்:

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதையொட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் வேல்முருகன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் உரிய முறையில் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு செல்லுமாறு வேண்டும்.
    • முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் காவலர்களுடன் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பென்னாகரம் ரோடு பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இதில் இளைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப நிறுவனங்களின் வேலை வாய்ப்பினை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

    மேலும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பேசுகையில் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தவறான போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் உரிய முறையில் வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு வேலைக்கு செல்லுமாறு வேண்டும்.

    மேலும் தருமபுரி மாவட்டத்தை ஒரு போதை பழக்க வழக்கம் இல்லாத மாவட்டமாக படித்த இளைஞர்கள் மாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    பின்னர் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் காவலர்களுடன் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து, மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும்.
    • பள்ளிகளில் மட்டுமல்லாது, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பளர்களை நியமிப்பது கட்டாயமாகிறது.

    அரூர்,

    போதைப்பொருள்கள் போதை ஏற்றிக்கொள்வ தற்காகவும், பொழுது போக்கிற்காகவும் மக்களால் உட்கொள்ளப்படுகின்றன. போதைப் பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனிமனிதன், சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

    சமீபகாலமாக தருமபுரி மாவட்டம் அரூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகள் அருகே குறிப்பிட்ட ஒரு வகை போதைபொருள் படு ஜோராக விற்பனையா கிவருகிறது. 12 ரூபாய்க்கு கிடைக்கும் புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பொருளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதால் இயல்பு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்து வருகிறார்கள்.

    இந்த பொருள் குறைந்த விலையில் கிடைப்பதால் மாணவர்கள் எளிதாக இரையாகக் கூடும் என ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப் பொருளை தங்கள் நாக்குக்கு அடியில் வைத்து மாணவர்கள் சுவைக்கின்றனர். வகுப்பறையிலும் கூட இதை சில மாணவர்கள் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.

    பள்ளிகளின் அருகில் இருக்கும் பீடா கடைகள், பெட்டிக்கடைக்காரர்களே இந்தப் பொருளை மாணவர்களுக்கு அறிமு கப்படுத்தி பழக்குகின்றனர் என குற்றசாட்டுகள் உள்ளது. இந்த போதைப் பொருளை பயன்படுத்துவர்களிடம் யாரவது எதிர்த்து கேள்வி கேட்டால் மாணவர்களுக்குள்ளேயே மாணவர்களை தாக்கி கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறப்படு கிறது .

    பள்ளியின் அருகாமை யில் இத்தகைய பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் போலீஸில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட பெட்டி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசின் 104 இலவச தொலைபேசி அழைப்பு மையத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் 80 அழைப்புகள் உதவி கோரி வருகின்றன. அவற்றில் குறைந்தது 10-லிருந்து 12 அழைப்புகள் சிறாரிடமிருந்தே வருகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். கூறுகிறது

    ஆசிரியர்களும், அரசாங்கமும் மட்டும் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லை. அதனால் அவர்கள் திசை மாறிச் செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போவதுதான் முக்கியக் காரணம்.

    போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்ளும் மாண வர்களை அதிலிருந்து மீட்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மன ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து மீள உதவவும் பள்ளிகளில் மட்டுமல்லாது, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பளர்களை நியமிப்பது கட்டாயமாகிறது.

    தருமபுரி மாவட்ட நிர்வாகம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கக்கூடிய மாணவர்க ளின் நலன் கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வ லர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.
    • விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    உலக குழந்தைகள் வன் கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடலோர காவல் குழுமம் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் குளச்சல் மரைன் காவல் நிலையம் சார்பில் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சமூக இணைய தள விழிப்புணர்வு முகாம் காவல் நிலையத்தில் நடந்தது.

    மரைன் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் மாணவிகளுக்கு சமூக இணைய தளத்தில் வரும் ஆபாச படங்களை ஷேர் செய்யக்கூடாது, அறிமுகமில்லாத பெண்களிடம் பழக கூடாது, குறிப்பாக காதல் வசப்படக்கூடாது. எவரேனும் காதல் கடிதம் தந்தால் அல்லது காதலிக்கிறேன் என மெசேஜ் அனுப்பினால் வீட்டில் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளியில் ஆசிரியர்களிடம் கூற வேண்டும்.தாய் தந்தையை தவிர வேறு யாரையும் நம்பக்கூடாது, படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் எதிர்க்காலத்தை பெற்றோர் அமைத்து தருவர். மாணவர்கள் கஞ்சா போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கக்கூடாது.விழிப்புடன் இருக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் கடன் வாங்கி உங்களை படிக்க வைக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகுவது, பெற்றோரை கொலை செய்வதற்கு சமம்.தினமும் நீங்கள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்.அதில் வரும் குற்றச்செய்திகளை தெரிந்து கொண்டு, நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். ஸ்கூட்டி ஓட்டும்போது அதிக வேகத்தில் செல்லக்கூடாது.

    திருப்பம், வளைவுகளில் செல்லும்போது போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விபத்துக்களில் சிக்க கூடாது என அறிவுரை கூறினார். பின்னர் மாணவர்கள் அனைவரும் 'போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம்'என போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பள்ளி ஆசிரியர் கெஜின், உடற்கல்வி ஆசிரியர் ஜூடின் மற்றும் மரைன் போலீசார் கலந்து கொண்டனர்.

    • போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    இன்ஸ்பெக்டர் சரவணன் உறுதி மொழியினை வாசிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் பேசுகையில், போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களது தகவல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • மாணவர்களுக்கு, ஒழுக்கம் சுயக்கட்டுப்பாடு அவசியம் பற்றி எடுத்துக்கூறினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

    பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் வரவேற்றார். திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ப.ராஜேஸ்வரி தலைமை தாங்கி, போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை விளக்கி, அவற்றை கட்டுப்படுத்த மாணவர்களுக்கு, ஒழுக்கம் சுயக்கட்டுப்பாடு அவசியம் பற்றி எடுத்துக்கூறினார். பள்ளி மாணவ தலைவர் அகல்யா ஆங்கிலத்திலும், துணைத்தலைவர் காருண்ய பருணி தமிழிலும் போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கும் அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்" என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வபர்களின் சொத்துக்களும் முடக்கப் பட்டு வருகின்றன.
    • குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வபர்களின் சொத்துக்களும் முடக்கப் பட்டு வருகின்றன.

    இதற்கிடையே போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதை பொருட்களுக்கு எதிராக ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளிகளிலும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நாகர்கோவில் வடசேரியில் உள்ள பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் பேசிய போது, "உங்களது வீட்டில் சகோதரரோ அல்லது தந்தையோ போதை பழக்கத்திற்கு ஆளாகி இருந்தால் அவர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும். போதை பழக்கத்துக்கு ஆளாகுபவர்கள் மன அழுத்தத்துக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு வேறு எந்த செயலிலும் நாட்டம் இருக்காது. போதைப் பழக்கத்திற்கு ஆளானால் படிப்பு பாதிப்பதோடு எந்த விளையாட்டிலும் ஈடுபட முடியாது. குடி பழக்கத்துக்கு ஆளானால் வீட்டை கவனிக்க முடியாது.

    இதனால் வீட்டில் மகிழ்ச்சி இல்லாமல் போகும் போதைப் பழக்கத்தால் கெட்டது மட்டுமே நடக்குமே தவிர எந்த நல்லதும் நடக்காது. எனவே, மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதுபடி போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.

    • நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர்கள், தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார்.அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவரும், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு உறுப்பினருமான மோகன்ராஜா, துணைத் தலைவர், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார், நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க பொருளாளர் பிரசாத், இணைச்செயலாளர் முகமது அப்துல்லா, நகர் மன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு, பொதுக்குழு உறுப்பினர் தங்க ராஜா முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர்கள், தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் நிலைய பயிற்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

    ×