search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு - அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்பு
    X

    புதுக்கோட்டையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு - அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்பு

    • நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார்.
    • அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர்கள், தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் இணைந்து போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் தலைமை தாங்கினார்.அனைவரையும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜோதிமணி வரவேற்றார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவரும், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மேலாண்மை குழு உறுப்பினருமான மோகன்ராஜா, துணைத் தலைவர், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார், நகர் மன்ற உறுப்பினர் ராஜா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க பொருளாளர் பிரசாத், இணைச்செயலாளர் முகமது அப்துல்லா, நகர் மன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு, பொதுக்குழு உறுப்பினர் தங்க ராஜா முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க இருபால் பயிற்சியாளர்கள், தொழில் நுட்ப மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் நிலைய பயிற்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க செயலாளர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×