

தேவகோட்டை
தேவகோட்டை நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சரவணன் உறுதி மொழியினை வாசிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் பேசுகையில், போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களது தகவல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.