search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் போதை பழக்கம் மாணவர்களை நெருங்காது- சைலேந்திரபாபு அறிவுரை
    X

    விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால் போதை பழக்கம் மாணவர்களை நெருங்காது- சைலேந்திரபாபு அறிவுரை

    • தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் தனியார் பாதுகாவலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய சைலேந்திரபாபு, தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்களை போதை பழக்கம் நெருங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×