search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி"

    திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Cauvery #Mukkombu
    திருச்சி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால், ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அணைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வந்து அணையை பார்வையிட்டார். 
    மேட்டூர் அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது அணைக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. #MetturDam #Cauvery
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் பெய்த கனமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. 2 அணைகளில் இருந்தும் இன்று காலை தண்ணீர் திறப்பு 97 ஆயிரத்து 858 கன அடியாக குறைக்கப்பட்டது.

    ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. 

    அணையில் இருந்து நேற்று 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    எனினும், நீர்வரத்து தொடர்ந்து 80 ஆயிரம் கன அடியாக இருந்ததால் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 65 ஆயிரம் கன அடியாக உள்ளது.  #Metturdam #Cauvery
    சேலம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில், தீயணைப்புத்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். #Cauvery #Mettur
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெட்டியூர் என்ற பகுதியில் இன்று ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 5 பேரை தண்ணீர் அடித்துச் சென்றது. அவர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், 5 பேரையும் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடி வருகின்றனர்.
    கர்நாடக அணைகளில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படும் நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. #Cauvery #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.  இந்த நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது. 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 64-வது முறையாக நீர் 100 அடியை எட்டியுள்ளது. 

    கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீர் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டால், அணை முழு கொள்ளலவை எட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Cauvery
    சேலம்:

    கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.  இந்த நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து மேட்டூர் அணை முதல் எடப்பாடி வரை காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  இதேபோன்று ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். காவிரி கரையோர மக்களின் நலன் கருதி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

    பொது மக்கள் அவரச உதவிக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaBudget
    பெங்களூர்:

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று பொது பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

    மேலும், பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க மத்திய அரசின் அனுமதி பெற்று காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என அவர் அறிவித்தார். மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளுக்கும் அம்மாநில விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    கர்நாடகாவில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.

    எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள். கர்நாடகாவில் இனி அமைய இருக்கும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி விவகாரத்தில் செயல்பட வேண்டும்.

    கட்சி தொடங்கிய பின்னரே கூட்டணி குறித்து பேச முடியும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். 
    காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தை சுப்ரீம் கோர்ட் இன்று ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.#CauveryManagementAuthority #CauveryIssue
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய சுப்ரீம் கோர்ட், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

    அதன்படி நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.



    இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என கூறியிருந்தது.

    திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா? என ஆராய்ந்து தீர்ப்பு இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர்.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு செயல் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், உடனே இதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயல் திட்டத்துக்கு எதிராக கர்நாடகா தாக்கல் செய்த மனுவை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    திருத்தப்பட்ட செயல் திட்ட அறிக்கையில், தினந்தோறும் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை, மேலாண்மை ஆணையம் மாதம் தோறும் கணக்கிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.#CauveryIssue #CauveryDraftScheme #CauveryManagementAuthority 
    காவிரி பிரச்சனையில் இறுதி முடிவெடுக்க மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் தெரிவித்துள்ளது. #CauveryManagementAuthority #CauveryIssue
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டடது.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்திருந்தது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் அதிகாரங்கள் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றிருந்தது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. குழுவின் முடிவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கலாம் என்ற விதியை மாற்ற வேண்டும், காவிரி குழுவிற்கான முடிவுகளை மத்திய அரசே எடுக்க முடியாது, குழு தனது முடிவுகளை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை கோரலாம் என கூறிய சுப்ரீம் கோர்ட், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

    அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.



    இறுதி முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும் என முன்னர் இருந்த நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    அதேசமயம், கர்நாடக அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் வரைவு செயல் திட்டம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

    இதையடுத்து தீர்ப்பு நாளை மாலை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா? என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #CauveryIssue #CauveryDraftScheme #CauveryManagementAuthority 
    ×