search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள் - ரஜினிகாந்த்
    X

    எடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள் - ரஜினிகாந்த்

    கர்நாடகாவில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது என ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    ரஜினி மக்கள் மன்ற பெண் நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ரஜினி மக்கள் மன்றத்திலும் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும். 150 தொகுதிகளில் செல்வாக்கு இருப்பதாக வெளியான செய்தி உண்மையாக இருந்தால் மகிழ்ச்சியே. கர்நாடகாவில் ஜனநாயகம் வென்றுள்ளது.

    எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் 15 நாட்கள் கொடுத்தது கேள்விக்கு உரியது. இதனை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள். கர்நாடகாவில் இனி அமைய இருக்கும் அரசு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி விவகாரத்தில் செயல்பட வேண்டும்.

    கட்சி தொடங்கிய பின்னரே கூட்டணி குறித்து பேச முடியும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கவே நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். 
    Next Story
    ×