search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கொம்பு"

    • மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது.
    • மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    திருச்சி:

    காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார்.

    முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க் கால்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்த படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தை கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், வழியாக நேற்று மதியம் கரூர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது 7 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக முக்கொம்புக்கு திறந்துவிடப்பட்டது.

    அங்குள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது. மாலையில் பெட்டவாய்த்தலைக்கு வந்து அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக் கொம்புக்கு நேற்று இரவு சரியாக 8.30 மணியளவில் வந்தடைந்தது.

    அதன்பிறகு முக்கொம்பில் இருந்து அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களை தூவினர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு விநாடிக்கு 1,900 கனஅடி நீர் மட்டுமே வந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கனஅடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக நமக்கு வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று மதியம் சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்கள்.

    கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும். மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள சிறுகமணியில் பொதுப்பணித்துறை அதிகாரி சென்ற கார் மோதி பேருந்துக்காக நின்ற 3 பெண்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Trichy
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே உள்ள சிறுகமணி அக்ரஹாரம் பேருந்து நிலையத்தில் இன்று மாலை பேருந்துக்காக பலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வேகமாக வந்த கார் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதனை அடுத்து, காரை ஓட்டி வந்த நபர் ஓட்டம் பிடித்தார்.

    விபத்தில் 3 கட்டிட தொழிலாளர் பெண்கள் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் தயாளுகுமார் குடிபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். 
    முக்கொம்பு மேலணையின் 8 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை இல்லை என அங்கு ஆய்வு நடத்திய பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். #Cauvery #Mukkombu
    திருச்சி :

    திருச்சி - சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு மேலணை உள்ளது. 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட முக்கொம்பு மேலணை 182 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த அணையில் தண்ணீர் திறப்பதற்காக 45 மதகுகள் உள்ளன. அதில், 8 மதகுகள் வெள்ளத்தால் உடைந்தன. உடைந்த 8 மதகுகளும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்க பயன்படுத்தப்பட்டவையாகும்.

    8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அணையில் இருந்து சுமார் 90,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை அடுத்து அங்கு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும், மதகுகள் உடைந்த நிலையில் அணையின் கீழ்பாலத்தின் நடுவே உள்ள ஒரு பகுதியும் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.



    இந்நிலையில், அணையின் மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து திருச்சி ஆட்சியர் ராசாமணி அங்கு ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறுகையில், மதகுகள் உடைந்திருந்தாலும் நீர் திறப்பு குறைவு என்பதால் கொள்ளிடம் ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், நாளை மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, மறு சீரமைப்பு பணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Cauvery #Mukkombu
    திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Cauvery #Mukkombu
    திருச்சி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால், ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அணைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வந்து அணையை பார்வையிட்டார். 
    ×