search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளிடம்"

    • கரையோரங்களில் மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.
    • புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது ஆற்றின் நடுவில் மணல் திட்டு பகுதியில் கருங்கல்லிலான பழங்கால புத்தர் சிலை இருந்ததை கண்டு வியந்தனர். உடனடியாக, அந்த சிலையை மீனவர்கள் மீட்டனர்.

    சிலையின் உயரம் 4 அடி ஆகும். இந்த புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.

    இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வராஜிடம் தெரிவித்தனர்.

    அதன்பேரில், சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பார்வையிட்டனர்.

    பின்னர், அதிகாரிகள் புத்தர் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    மேலும், இந்த சிலை எங்கிருந்து வந்தது? கொள்ளிட ஆற்றின் மணல் பகுதியிலேயே இருந்ததா? என பல்வேறு கோணங்களில் கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் சீரமைப்பு பணி, ஆலக்கு டியில் முதலை முத்துவாரி, திருச்சென்னம்பூ ண்டியில் கோவிலடி வாய்க்கால், மாரனேரி, விசலூா் படுகை ஆனந்தகா வேரி வாய்க்கால், கண்டமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூா்வாரும் பணி, கல்லணையில் புனரமைப்பு பணி, திருக்காட்டுப்பள்ளி காவிரியில் படுகை அணை கட்டுமானப் பணி ஆகியவற்றை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

    தொடர்ந்து கல்லணையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னே ற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

    கொள்ளிடத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஷட்டர்களுக்கான மின்மோட்டார்கள், கொள்ளிடம் மணல் போக்கிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைத்தள பணிகள் மற்றும் தடுப்பு சுவர் ஆகிய பணிகளையும், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னா் அவா் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள் ஆகியவற்றில் 1,068.45 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

    மொத்த முள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா்கள் இளங்கோ, மதனசுதாகா், பவழகண்ணன், உதவி செயற்பொறியாளா்கள் சிவக்குமாா், மலா்விழி, சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • ரூ 6.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது.
    • மரபுசாரா கழிவுகளை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் தீர்வு செய்வது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பூபதி ராஜா, செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில்பாபநாசம் பேரூராட்சியில் மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டுவது எனவும், திருப்பாலைத்துறை உரக்கிடங்கில் நீண்ட காலமாக தேங்கியுள்ள மரபுசாரா கழிவுகளை ரூ 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் தீர்வு செய்வது எனவும்,

    ரூ 6.10 லட்சம் மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது எனவும், பாபநாசம் சாலியமங்கலம் சாலையில் இயங்கி வரும் மதுபான கடை பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளதால் பாபநாசம் வடக்கு வீதியில் மயானம் அருகில் மாற்றுவது எனவும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், கோட்டையம்மாள், கெஜலட்சுமி, விஜயா, பிரகாஷ், பாலகிருஷ்ணன். சமீரா பர்வீன், புஷ்பா சக்திவேல், ஜாபர் அலி, முத்துமேரி மைக்கேல் ராஜ், தேன்மொழி உதயகுமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
    • பாலம் கட்டும் பணி 20 சதவீதம் கூட முடியாத நிலையில் பல்வேறு காரணங்களால் ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் கிராமத்திலிருந்து கொட்டாய் மேடு, ஓலகொட்டாய்மேடு, மடவா மேடு, பழையாறு மீன்பிடி துறைமுகம், புதுப்பட்டினம், கூழையாறு, திருமுல்லைவாசல் உள்ளி ட்ட கடலோர மீனவ கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடற்கரை ஓரசாலையை இணைக்கும் வகையில் சாலை அமைந்துள்ளது.

    தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரை ஓர சாலைக்கு செல்லும் இந்த சாலையின் குறுக்கே பக்கிங்காம் கால்வாய் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த சாலையின் நடுவே பக்கிகாம் கால்வாய் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    இதற்கு பதிலாக பழைய பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதியதாக நபார்டு திட்டத்தின் மூலம் ரூ3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கியது.

    ஆனால் பாலம் கட்டும் பணி 20 சதவீதம் கூட முடியாத நிலையில் பல்வேறு காரணங்களால் ஒரு சில மாதங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை அந்தப் பாலத்தை தொடர்ந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்காததால், தாண்ட வன்குளம் கிராமத்திலிருந்து கடற்கரையோர சாலையில் அமைந்துள்ள கிராம ங்களுக்கு தினந்தோறும் சென்று வரும் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இதனால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். கடற்கரையோர மீனவ கிராமங்களின் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்தப் பாலம் கட்டும் பணி துவங்கிய போது புதியதாக தற்காலிக இணைப்பு சாலை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த இணைப்புச் சாலையின் வழியாகத்தான் தொடர்ந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை சிரமத்துடன் இந்த வழியை கடந்து தான் சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பக்கிங் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து சாலையை மூழ்கடித்தது.

    இதனால் இந்த சாலை வழியே சென்று வர முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. கடலோர கிராம மக்கள் கொள்ளிடம், சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து சென்றவர்கள் வேறு வழியை பின்பற்றி வந்தனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில் நேற்று தற்காலிக இணைப்புச் சாலையை நூற்றுக்கணக்கான பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கொட்டாய்மேடு பகுதியில் உள்ள கிராம மக்கள் கூறுகையில், கடந்த சில டா வருடங்களாக இந்தப் பாலம் கட்டும் பணி நடைபெறாமல் உள்ளது.

    இதனால் கடலோர கிராம மக்கள் மிகுந்த சிரம் அடைந்து வருகின்றனர்.

    இந்தப் பாலம் கட்டும்பணி நிறுத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.உடனடியாக அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பாலத்தை உடனடியாக கட்டி முடித்து, சாலையை மேம்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
    • தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 58). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்வதற்காக நேற்று மாலை வந்தனர்.

    பின்னர் மாதாவை தரிசனம் செய்த அவர்கள் இரவில் அங்கேயே தங்கினர். இந்த நிலையில் இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர் மாதா கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அவர்கள் 6 பேரும் ஆற்றில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சிறிது நேரத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து 6 பேரையும் தேடினர். இதில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய 2 பேர் உடலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரவீன்ராஜ், தாவீது, ஈசாக், தெர்மஸ் ஆகிய 4 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து திருக்காட்டுபள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் சேமதடைந்தன.
    • கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராம மக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஒரு கோரிக்கை அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது..

    கொள்ளிடம் கரையோரமுள்ள வாழ்க்கை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்களாவும், கீரை, வாழை உள்ளிட்ட தானியப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் நிலையில், கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் சேமதடைந்தன.

    இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் செல்லும் நிலையில், அப்பகுதியிலுள்ள வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் கசிந்து வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாழ்க்கை கிராமத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர் வாரி, கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

    • ஓரத்தில் போடப்பட்டுள்ள பாராங்கற்கள் நன்கு போடப்ப ட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.
    • காட்டூரில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியையும் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான நீர் சென்று கொண்டிருப்பதால் அளகுடியில் தண்ணீர் சென்று கரையில் மோதி திரும்பும் இடத்தில் கடந்த 2018ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்ட பகுதியை மீண்டும் உடைப்பு ஏற்படாமல் இருக்க தற்போது தற்காலிகமாக சரி செய்யும் பணி நடைபெற்று கரை தற்காலிகமாக பலப்படுத்தப்பட்டது.

    இப்பகுதியை பொதுப்ப ணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காட்டூரில் கொள்ளிடம் ஆற்றின் கரை பகுதியையும் தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    ஓரத்தில் போடப்பட்டுள்ள பாராங்கற்கள் நன்கு போடப்ப ட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜய குமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் ஊழி யர்கள் உடன் இருந்தனர்.

    • ஆகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ராஜேசை தேடும் பணி நடந்து வந்தது.
    • சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது.

    சீர்காழி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் மதகு சாலையை சேர்ந்த ஆகாஷ் (வயது 24), மனோஜ் (23), ராஜேஷ்குமார் (29), கொளஞ்சி நாதன் (34) ஆகிய நான்கு பேரும் கடந்த 18ஆம் தேதி இரவு கொள்ளிடம் ஆற்றின் நடுவில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மணல் திட்டத்தில் ஏறி நின்று கூச்சலிட்டனர்.

    அப்போது கரையில் இருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தண்ணீர் வரத்து அதிகமானதால் கொளஞ்சிநாதனை மட்டும் உயிருடன் மீட்டனர். ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

    அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர். இதில் ஆகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ராஜேசை தேடும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் ராஜேஷ்குமார் உடல் கரை ஒதுங்கியது.

    பின்னர் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் உடல் அமரர் ஊர்தி மூலம் திருவிடைமருதூர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 1 வாரத்திற்கு பிறகு ராஜேஷ் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கல்லணை கால்வாயில் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விட்டனர்.
    • மூன்று பேர் கொள்ளிட ஆற்றில் நடுவில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே திருவைகாவூர் ஊராட்சி மணல்மேடு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் (வயது 55) வடக்கு தெருவில் வசிக்கும் ரவிச்சந்திரன் (வயது 55) ஆகிய இருவரும் திருவைகாவூர் கொள்ளிடம் ஆற்றில் வழக்கம் போல் ஆடுமேய்க்க ஆடுகளை ஓட்டி சென்றனர். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கல்லணை கால்வாயில் உபரி நீரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விட்டனர். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிட ஆற்றின் இரு கரையும் தொட்டு தண்ணீர் சென்றது. இதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் இருவரை கரையில் இருந்தவர்கள் பார்த்தவுடன் பாபநாசம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பாபநாசம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து விசைப்படகுகள் மூலம் ஆடு மேய்த்த தொழிலாளிகளை பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் மேய்ந்து கொண்டிருந்த சுமார் 50 ஆடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக தெரிய வருகிறது. இதுபோல், திருவைகாவூர் அடுத்த புதுக்கண்டி படுகை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சேட்டு அவரது மகன் அருண் மற்றும் முருகன் ஆகிய மூன்று பேர் கொள்ளிட ஆற்றில் நடுவில் திட்டுப் பகுதியில் சிக்கி இருப்பதாக தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் படி அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணிகளை கும்பகோணம் கோட்டா–ட்சியர் லதா பாபநாசம் தாசில்தா'ர் மதுசூதனன் வருவாய் ஆய்வாளர் சுகுணா கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ், சிவப்பிரகாசம் ஒன்றிய கவுன்சிலர் விஜயன் ஊராட்சி மன்ற தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி துறையினர் விரைந்து வந்து கொள்ளிட ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் கருணாகரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை, அரசு மருத்துவர் கௌசிகா முன்னிலை வகித்தனர்.

    இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.2000 வீதம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசுகையில், தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்படி வீட்டில் யாராவது நோயினால் பாதிக்கப்பட்டால் உறவினர்கள் வர மறுத்தாலும் அரசு ஆம்புலன்ஸ் நேரடியாக வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்டவருக்கு தேவையான முழு மருத்துவ உதவியும் செய்து அதற்கான முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்றார்.

    இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். வட்டார அளவில் அங்கன்வாடிகள் சார்பில் இயற்கை உணவு மற்றும் இயற்கை வகையான ஊட்டச்சத்து கண்காட்சி முகாமில் இடம் பெற்றிருந்தது.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஓடும் அதிக தண்ணீரால் மேலணையில் உள்ள 8 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Cauvery #Mukkombu
    திருச்சி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கிருந்து உபரிநீர் 2 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில் உள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால், ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. மதகு உடைப்பை அடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    அணைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் வந்து அணையை பார்வையிட்டார். 
    கொள்ளிடம் பழைய பாலத்தின் 18-வது மற்றும் 20-வது தூண்கள் இடிந்து தண்ணீரில் மூழ்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
    திருச்சி:

    முக்கொம்பு அணைக்கு கூடுதல் தண்ணீர் வரத்தால் பாதுகாப்பு கருதி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

    இதனால் அந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1928-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான இரும்பு பாலம் சேதம் அடைந்தது. அந்த பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் கடந்த புதன்கிழமை இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது.

    இதனால், எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் கொள்ளிடம் பழைய பாலம் இருந்ததால் முன்னெச்சரிக்கையாக பொதுப்பணித்துறை அதிகாரிகள்  பாலத்தில் போக்குவரத்தைத் தடை செய்தனர்.

    அடுத்த சில தினங்களில் இந்த விரிசல் அதிகமாகி இரண்டாக பாலம் உடைந்தது. நேற்று நள்ளிரவு பாலத்தின் 18-வது மற்றும் 20-வது தூண்கள் இடிந்து தண்ணீரில் மூழ்கியது. எனினும், நள்ளிரவில் தூண்கள் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை

    இந்நிலையில், பாலத்தின் தூண்கள் இடிந்து விழும் பிரத்யேக காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
    ×