கொள்ளிடம் ஆற்றில் பழங்கால புத்தர் சிலை கண்டெடுப்பு

கரையோரங்களில் மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர். புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.
கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை.
கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை.
Published on

கபிஸ்தலம்:

பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது ஆற்றின் நடுவில் மணல் திட்டு பகுதியில் கருங்கல்லிலான பழங்கால புத்தர் சிலை இருந்ததை கண்டு வியந்தனர். உடனடியாக, அந்த சிலையை மீனவர்கள் மீட்டனர்.

சிலையின் உயரம் 4 அடி ஆகும். இந்த புத்தர் சிலை பழங்காலத்தில் செய்யப்பட்டது போல் உள்ளது.

இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வராஜிடம் தெரிவித்தனர்.

அதன்பேரில், சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் ராஜதேவி, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலையை பார்வையிட்டனர்.

பின்னர், அதிகாரிகள் புத்தர் சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும், இந்த சிலை எங்கிருந்து வந்தது? கொள்ளிட ஆற்றின் மணல் பகுதியிலேயே இருந்ததா? என பல்வேறு கோணங்களில் கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com