search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி"

    • ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.
    • சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.

    அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.

    அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    • நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
    • பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.

    இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.

    நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.

    51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

    சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

    இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

    இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவியாக பிரம்ம வித்யாம்பிகை திகழ்கிறார்.

    திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள்.

    மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார்.

    பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

    நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம்.

    கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.

    பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

    • குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
    • 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரணேஸ்வரர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 11வது தலமாகும்.

    காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.

    21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

    பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.

    குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.

    மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.

    பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

    இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

    மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    • உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • வெளி நாடுகளில் பயில விரும்பு வராக இருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது -

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் வெளிநாடு சென்று உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், போன்ற படிப்புகளை வெளி நாடுகளில் பயில விரும்பு வராக இருக்க வேண்டும். குடும்ப வரு மானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கர்கள் தாம் விரும்பும் வெளி நாடு களிலுள்ள கல்வி நிறு வனத்தில் மேல் படிப்பி னை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். இதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • அரியலூரில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது
    • காங்கிரஸ் கூட்டத்தில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் நகரத்திலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்க: அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வகுப்பறைகளை ஆக்கிரமித்து அலுவலகமாக செயல்பட்டு வரும் கல்வி அலுவலகங்களை, பயன்படுத்த படாமல் உள்ள பழைய பயணியர் மாளிகை வளாகத்தில் புதிய கட்டடம் கட்டி அங்கு ஒருங்கிணைந்த கல்வி வளாகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்க குழிகளை சமன்படுத்தி மரங்களை வளர்க்க வேண்டும். ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அரசு சிமென்ட்டை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு அக்கட்சியின் நகரத் தலைவர் மா.மு.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சங்கர் பங்கேற்று மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ் .பழனிச்சாமி , வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலர் ஏ.ஆர்.செந்தில் நன்றி தெரிவித்தார்.

    • கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,626 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விதமாக 1,739 மாணவர்க ளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ-மாணவி களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்ப டையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டில் 7,699 மாண வர்களுக்கும், 9,982 மாணவி களுக்கும் என மொத்த 17,681 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1207 மாணவர்கள், 1378 மாணவிகள், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 850 மாணவர்கள், 1191 மாணவிகள் என 4626 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) முத்துக்கழுவன், நகர்மன்றத் தலைவர்கள் சுந்தரலட்சுமி (அருப்புக்கோட்டை), குருசாமி(சாத்தூர்), ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர்கள் சசிகலா(அருப்புக்கோட்டை), நிர்மலா கடற்கரைராஜ்(சாத்தூர்) உள்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிகள், மாணவர்கள் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது.
    • கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள்.

    நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது.

    இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.

    தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது. ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன. எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    • பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
    • குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்விமுறையில் பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.சேர்க்கை செயல்பாடுகள் அரசு மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நடைபெறும்.இரண்டாண்டு, ஆசிரியர் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

    2 ஆண்டுகள் முழு நேரம் தற்காலிகம் அல்லது நிரந்தர அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்,ஆசிரியராக பணியாற்றி இருக்கவேண்டும்.இன வாரியாக பட்டப்படிப்பில், குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    கல்லூரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது.

    மேலும் விபரங்களை, https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.விண்ணப்பங்களை அக்டோபர் 5-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு கல்வி பயன்பட வேண்டும்.
    • புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேருபவரின் எண்ணிக்கை 3-ல் 1 பங்காக உள்ளது. இதில் உயர்கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கை 25 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால், உயர்கல்விக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 52 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

    கல்லூரி என்பது பட்டம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல. அந்த கல்வியோடு, சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்கள் குறித்தும் கண்காணிப்பது, அது குறித்து ஒரு தீர்க்கமான பார்வை கொண்டிருப்பது உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுப்பதுதான் கல்லூரி.

    அந்த கல்வியை முறையாக பயில்வதன் மூலம் ஒரு முழுமைபெற்ற, சமூகத்தில் ஒரு பொறுப்பு மிக்க பெண்ணாக உருமாற்றம் பெற்று, உங்களை காத்துக் கொள்வதற்கும், சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், உங்களை சார்ந்த குடும்பத்தை பாதுகாப்பதற்கும் உங்கள் கல்வி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) தங்கலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) சிக்கந்தர் பீவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர் முனைவர் உஷா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.
    • ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு.

    மாண்டிசேரி எனப்படும் மழலை ஆசிரியர் பயிற்சி பற்றியும், இதன் முக்கியத்துவம் பற்றியும் சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

    * மாண்டிசேரி கல்வி முறை

    மரியா மாண்டிசேரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டிசேரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டிசேரி பள்ளி மற்றும் மாண்டிசேரி ஆசிரியர்களின் நோக்கம். இது சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி முறை. வெகுசுலபமாகவே, கற்றுக்கொள்ள முடியும்.

    * மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி

    10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் வரை மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற முடியும். 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ இன் மாண்டிசேரி பயிற்சியும், பிளஸ்-2 படித்தவர்கள், அட்வாண்ஸ்ட் மாண்டிசேரி படிப்பும் படிக்கலாம். இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற விரும்புபவர்கள் அடிப்படை மற்றும் அட்வாண்ஸ்ட் பயிற்சிகளை பெற்று, ஆசிரியர் தகுதி பெறலாம்.

    * மாண்டிசேரி ஆசிரியர் பணி

    நன்கு வளர்ந்த குழந்தைகளை கையாள்வதை விட, மழலைகளை கையாள்வது கொஞ்சம் கடினமானது. சவாலானது. வழக்கத்தை விட நிதானமும், பொறுமையும் அவசியம். இதோடு, தினந்தோறும் புதிது புதிதாக கற்றுக்கொண்டு குழந்தைகளை வழிநடந்த முடியும் என்று எண்ணுபவர்கள், மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெறலாம்.

    * வேலைவாய்ப்பு

    நகர்ப்புறங்களில் மாண்டிசேரி பள்ளிகள் அதிகமாகவே தென்படுகின்றன. 'பிளே ஸ்கூல்' போன்றவற்றிலும், மாண்டிசேரி பயிற்சி முடித்திருக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், இயல்பான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், மாண்டிசேரி பயிற்சியின் மூலம் அவர்களது திறனையும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், மாண்டிசேரி பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

    * எப்படி வேறுபடுகிறது?

    வழக்கமான பள்ளிகளில் ஆசிரியர் முதன்மையாக இருப்பார். அவர் சொல்வதை கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு மாண்டிசேரி கல்விமுறையில் குழந்தைகள் முதன்மையாக இருப்பர். ஆசிரியர் பின்னணியில் இருந்து அவர்களை வழிநடத்துவார். இதில் மனப்பாட முறை கிடையாது. யோசனை செய்து பதில் அளிக்க வேண்டும். நன்றாக கவனித்து (Observe) தானே கற்று கொள்வதால் ஆழ் மனதில் (subconscious) பதியும். கரும்பலகை முறை கிடையாது. பார்த்து எழுதும் முறையும் கிடையாது. எல்லாமே செயல்முறை கல்வியாகவே கற்றுக்கொடுக்கப்படும்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும். தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.

    ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன.

    எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    வீட்டுக்கு சென்றால் தாயுடன் நேரம் செலவழிக்க, வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி பொதுவான கல்வி முறைக்கும், மாண்டிசேரி கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதேபோல, இவை அனைத்தையும் கையாள்வதிலும் சிரமங்கள் உண்டு.

    * சிறந்த பயிற்சி

    இப்போது மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பல இடங்களில் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கீகாரம் பெற்ற, முன் அனுபவம் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறுவது, திறமையை வளர்த்து கொள்ளவும், சுலபமான பணிவாய்ப்பு பெறவும் வழிவகுக்கும்.

    * கட்டணம்

    பயிற்சி நிறுவனங்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். அதிகபட்சம், ரூ.20 ஆயிரத்திற்குள், ஒரு வருடத்திற்குள் பயிற்சியை முடித்துவிடலாம்.

    • தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன.
    • டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இன்று பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் 100 இடங்களில் நடைபெற்றது. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய 2 இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன.  தற்போதய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு அரசின் இரு கண்களாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த கோப்பு கவர்னரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    பல்வேறு பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, கோலியனூர் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம், ஆலந்தூர் ஊராட்சி தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • பள்ளி குழந்தைகள் செல்போன் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
    • பெண்கள் தங்களை பாதுகாப்பதற்கு தற்காப்பிற்கு ஏதுவான திறன்களை வளர்த்து கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசி ன்தா மார்டின் வழிகாட்டு தலின் படி பள்ளி மாணவிகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகா மானது தஞ்சாவூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா ளரும் சார்பு நீதிபதியுமான இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் எந்தவொரு பிரச்ச னைகளையும் ஆசிரியர்களிடமோ அல்லது பெற்றோ ர்களிடமோ தயங்காமல் கூற வேண்டும்.

    பள்ளி குழந்தைகள் செல்போன் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செல்போ ன்களின் மூலமாக தான் பல பிரச்சனைகள் வருகின்றன.

    எனவே பெண்களுக்கு செல்போன்கள் தான் முதல் எதிரி. பெண் கல்விதான் நாளைய சமுதாயத்தை உருவாக்கும். பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

    பெண்கள் தங்களை பாதுகாப்பதற்கு தற்காப்பிற்கு ஏதுவான திறன்களை வளர்த்து கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா, உடற்கல்வி இயக்குனர் தேன்மதி, வழக்கறிஞர் சாந்தா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்டத் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    ×