search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதன் பகவான்"

    • புதன் கிரகம் விதியால் துதிக்கப்படுகிறது. எனவே விதியை வெல்ல புதனை துதிக்கலாம்.
    • புதனை வணங்குவதால் இந்திரனும் திருப்தியடைவார்.

    1. பித்தளை, உலோகம் புதனுக்குரியது.

    2. கிரஹபதி, ஞானி, புத்திதாதா, தனப்ரதன் என்ற விசேஷப் பெயர்கள் புதனுக்கு உண்டு.

    3. ஜோதிடக்கலை புதனுக்குரியது.

    4. வாணிஜ்ய நிபுணன் (வியாபாரத்தில் சமர்த்தன்) என்ற திருநாமம் புதனைக் குறிக்கும்.

    எனவே வியாபாரிகள் புதனை வழிபடப் பெரும்பேறு அடைவர்.

    5. முத்துசுவாமி தீட்சிதர் தம் நவக்கிரக கீத்தனையில் புதனை கவி பாடும் திறன் அளிப்பவர் என்றும்,

    செவ்வாய்க்குப் பகைவர் என்றும், சுத்த சத்வ சதானந்த ரூபம் உடையவர் என்றும்

    பல சிறப்பு செய்திகளை கூறுகிறார்.

    புதனுக்கு அதிதேவதை விஷ்ணு, பிரத்யதி தேவதை நாராயணர். புதன் விஷ்ணுவைப் போல் தோற்றமுள்ளவர்.

    6. புதன் கிரகம் விதியால் துதிக்கப்படுகிறது. எனவே விதியை வெல்ல புதனை துதிக்கலாம்.

    7. புதனை வணங்குவதால் இந்திரனும் திருப்தியடைவார்.

    8. சரத்ருதுவிற்கும் அதர்வண வேதத்திற்கும் புதனே உரியவர்.

    9. கல்விக்கும், அறிவிற்கும் உரிய புத்திரகாரகன் புதன்.

    கவி ஆற்றல், கணிதம், தர்க்கம், வைத்திய அறிவு, நாடகம், நாட்டியத்திறன், புத்தகம் எழுதுதல்,

    உச்சரிப்பு ஆகியவற்றுக்கு புதன் உச்சத்தில் இருப்பதே காரணமாகும்.

    10. நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்கே அமர்பவன் புதன். புதனுக்குரியது கல்கி அவதாரம்.

    11. ஆயுர்வேதத்திற்கு உரியவரும், மஹா விஷ்ணுவின் அவதாரமானவரும், பாற்கடலில் தோன்றியவரும்,

    அமுத கலசத்தை கையில் ஏந்தியவருமான தன்வந்திரி பகவானைத் துதித்தால் புதன் மகிழ்ச்சியடைவார்.

    12. புதனுக்கு வேம்பு இலையில் சர்க்கரையும், நெய்யும், பாலும் கலந்த சோற்றை வடதிசையில்

    கிரக பலியாகக் கொடுக்க புத பகவான் திருப்தியடைவார்.

    13. புலமைக்கும், வணிகத்திற்கும் உரிய கடவுளாக புதனை பண்டைய கிரேக்கர் வழிபட்டனர்.

    14. புதன் பொன்னிறமானவன். 'கோங்கு' என்ற மலரின் நிறமுடையவன். மஞ்சள் நிற ஆடை புனைந்தவன்.

    மஞ்சள் நிறக் குடையும், கொடியும் உடையவன். மஞ்சள், சந்தனம் தரிப்பவன்.

    15. நல்லோரது நட்பு, தாய்மாமனின் நிதி நிலைமை, நம் கல்வி, புத்தி, அமைதி, ராஜசன்மானம், விவேகம்

    ஆகியவற்றை புதன் நிர்ணயிப்பார்.

    16. கல்வித்தடை, புத்தி மந்தம், வாக்கு நாணயம் தவறுதல், நரம்புத் தளர்ச்சி, மனதில் பீதி, கிலேசம்,

    வியாபார நஷ்டம், பிறதேச வாசம், விபரீத ஞானம் ஆகியவை புதனால் வரும் அசுப பலன்களாகும்.

    17. புதனால் வரும் துன்பங்கள் விலக ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ௩௫ வது சருக்கம் ராம வருண சம்வாதம் பாராயணம் செய்யலாம்.

    • தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.
    • அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும்.

    புத பகவானுக்கு புதன் கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம், மரகதமணி, வெண்தாமரை

    இவற்றால் அலங்காரம் செய்து, புதனைப் பற்றிய ஸ்தோத்திரங்களை ஓதி, நாயுருவி சமித்தால் யாகத் தீ எழுப்பவும்.

    பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி செய்து, தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்யவும்.

    தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.

    புத பகவானை வழிபடும்போது ராகம் தெரிந்தவர்கள் நாட்டக் குறச்சி ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடுவது மிகுந்த சிறப்பாகும்.

    புதனுக்கான கோலம்

    அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும்.

    விளக்கேற்றி வைத்து புதனுக்குரிய பாடல்களை, தியான சுலோகங்களைச் சொல்லி வழிபடவும்.

    • மிதுனம், கன்னிராசிகளின் அதிபதி புதன்.
    • புதனின் நட்பு வீடுகள் : ரிஷபம், சிம்மம், துலாம்.

    மிதுனம், கன்னிராசிகளின் அதிபதி புதன்.

    அறிவைக் கொடுக்கும் புதன், கன்னிராசிக்கு வரும் சமயம் உச்சம் பெறும், மீனராசிக்கு வரும் சமயம் நீச்சமடையும்.

    புதனின் நட்பு வீடுகள் : ரிஷபம், சிம்மம், துலாம்.

    பகை வீடுகள் : கடகம், விருச்சிகம்

    ஒருவர் ராசிக்கு வந்து புதன் தங்கியிருக்கும் போது குடும்பம் அமைதியையும் சுகத்தையும் இழக்க நேரிடும்.

    குடும்பத்தில் இருந்து பிரிந்திருக்க நேரிடலாம். சுபக்கிரகப் பார்வை ஏற்படுமானால் தீய பலன் மாறி நற்பலன் ஏற்படும்.

    புதன், ராசிக்கு 2ல் வரும் சமயம் செல்வாக்கு குறையலாம். புதன் வலிமை பெற்றால் நற்பலனே விளையும்.

    புதன், ராசிக்கு 3ல் வரும்போது எதிரிகளால் தொந்தரவு இருக்கலாம்.

    சுபர்களின் பார்வை படுமானால் நல்ல பலன்களே உண்டாகும்.

    ராசிக்கு 4ல் புதன் தங்கும்போது நல்ல பலன்கள் உண்டாகும்.

    பொருள் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ராசிக்கு 5ல் வரும்போது சிரமம்தான்.

    மற்றக் கிரகங்ளின் வலிமையால் நன்மையை உண்டாகும்.

    புதன் ராசிக்கு 6ல் வரும்போது நன்மையே நடக்கும்.

    எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.

    மற்றவர்களிடையே மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

    குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதனால் செலவுகள் வரும்.

    ராசிக்கு 7ல் புதன் வரும்போது அமைதி குறையலாம்.

    ஆனாலும் விரைவில் நன்மையாகும்.

    ராசிக்கு 8ல் வரும்போது, பலன்கள் நன்றாக இருக்கும்.

    குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும். பொருளாதார வசதி பெருகும்.

    எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.

    புதன் 9ல் வரும்போது தெய்வபக்தியால் சிரமங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

    புதன், ராசிக்கு 10ல் வரும் சமயம் பணவசதியும், உற்சாகமும், கணவன் மனைவி உறவு சந்தோஷமாகவும் இருக்கும்.

    ராசிக்கு 11ல் வரும்போதும் நன்றாக இருக்கும். கவலை ஏதும் இருக்காது.

    புதன் ராசிக்கு 12ல் நிற்கும்போது சிரமமான நேரம்தான்.

    ஆரோக்கியக் குறைவு, பண நெருக்கடி, மனக்குழப்பம் இருக்கும்.

    கிரக சஞ்சாரத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது நற்செலவுகள் ஏற்பட்டு நல்ல காரியங்கள் நடக்கும்.

    • புத தசை 17 ஆண்டுகள்.
    • வாக்கு சாதுர்யம், பண்டிதர்களின் நட்பு, புகழ் முதலியவை கிடைக்கும்.

    புத தசை 17 ஆண்டுகள்.

    புதன் ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 நாட்களாகும்.

    கன்னி ராசியில் 1 மிதுன ராசியில் 1, ரிஷபம், சிம்மம், துலாம் ராசிகளில் மேஷம்,விருச்சிகம், தனுசு,

    கும்ப ராசிகளில் கடக ராசியில் மீன ராசியில் 1/8 பங்கு வீதம் பலனைத் தரும்.

    புதன் தரும் பலன்களை ஆனி, புரட்டாசி மாதங்களிலும், மிதுனம், கன்னி ராசிகளில் வரும்போதும் காணலாம்.

    புதன் சுப பலன்களாக ஒருவர் மேற்கொண்டிருக்கும் படிப்பு, தொழில், கலை முதலியவற்றில் மகா பாண்டித்யமும் ஞானமும் அருளுவார்.

    வாக்கு சாதுர்யம், பண்டிதர்களின் நட்பு, புகழ் முதலியவை கிடைக்கும்.

    புதன் அசுப பலன் தரும்போது தொழிலில் அல்லது கலைகளில் வீழ்ச்சி, புத்தி தடுமாற்றம், வாக்கு மீறுதல், சச்சரவு, சொந்த ஊரைவிட்டுப் போகுதல் முதலியவை உண்டாகும்.

    • ராசி : மிதுனம், கன்னி
    • வஸ்திரம் : பச்சை நிற ஆடை

    வழிபட உகந்த தினம்:புதன்கிழமை

    ராசி :மிதுனம், கன்னி

    திக்கு :வடகிழக்கு

    அதிதேவதை :விஷ்ணு

    பிரத்யதி தேவதை :நாராயணன்

    நிறம் :வெளிர்பச்சை

    வாகனம்:குதிரை

    புதனுக்குப் விருப்பமானவை

    மானியம்:பச்சைப் பயறு

    மலர்:வெண்காந்தள்

    வஸ்திரம்:பச்சைநிற ஆடை

    ரத்தினம்:மரகதம்

    நிவேதனம்:பாசிப்பருப்புப் பொடி அன்னம்

    சமித்து:நாயுருவி

    உலோகம்:பித்தளை

    • அங்கு யார் சென்றாலும் பெண்ணாக மாறி விடுவார்கள்.
    • அவள்மேல் மையல் கொண்டார் புதன்.

    இளன் என்ற ராஜகுமாரன், காட்டில் வேட்டையாடச் செல்லும்போது, அங்கு சென்றதும் பெண்ணாக மாறி விட்டான்.

    அங்கு யார் சென்றாலும் பெண்ணாக மாறி விடுவார்கள்.

    அதுசமயம் புதன் அங்கு வந்தார். பெண்ணாக மாறிய இளன், 'இளை' என்ற பெயரில் அந்தக் காட்டில் உலவி வந்தான்.

    அவள்மேல் மையல் கொண்டார் புதன்.

    அந்த இளன் என்ற ராஜகுமாரன் பெண்ணாக மாறியது பார்வதி தேவியின் சாபமே.

    புதன், இளையுடன் சேர்ந்து மகிழ்ந்து வாழ்ந்தார்.

    பெண்ணாக மாறிய இளன் வெட்கமுற்று, ஆணாக மாறுவதற்கு அம்பாளை வேண்டித்தவம் இருந்தான்.

    ஒரு மாதம் ஆணாகவும், ஒரு மாதம் பெண்ணாகவும் இருக்க அம்பாள் அருள்புரிந்தாள்.

    புதனுக்கும் இளனுக்கும் 'புரூரவா' என்ற குழந்தை பிறந்தது.

    இரட்டை வாழ்வு வாழும் இளையின் நிலை மாற முனிவர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தார் புதன்.

    யாகத் தீயில் சிவபெருமான் தோன்றினார்.

    இளையின் வேண்டுகோளின்படி நிரந்தரமாகவே ஆணாக விளங்கும்படி அருள் புரிந்தார்.

    பிறகு இளனாகவே மாறித் தன் நாட்டுக்குச் சென்றான் அந்த ராஜகுமாரன்.

    சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர் புதன். சகலகலா வல்லவர்.

    மகாஞானி. சுபகிரகர். புலவர்களையும், சிவனடியார்களையும் காத்து அருள்பவர்.

    தன்னை வழிபடுகிறவர்களுக்கு மிகுதியான அறிவைக் கொடுப்பவர்.

    வாக்கு சாதுர்யம் அளிப்பவர். தீய கிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் சக்தி கொண்டவர்.

    புதன் இளம் பச்சை நிறம் உடையவர்.

    சாத்வீக குணம் கொண்டவர்.

    சுகபோஜனம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத் தொழில், வாத நோய், அலி முதலியவற்றிற்கு புதனே காரகன்.

    புதன், வித்யாகாரகர், மாதுலகாரகன், ஸெளம்யன் எனவும் அழைக்கப்படுகிறார்.

    புதன் அத்திரிகோத்திரம், மகதநாட்டினர்.

    கத்தி, கேடயம் வரதக்கரங்கள் கொண்டவர். மஞ்சள் ஆடை, மரகதமணி மாலை பூண்டவர்.

    நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில், மஞ்சள் நிறக் கொடியின் கீழ் அமர்ந்து மேருவை வலம் வருபவர்.

    திருமாலை வழிபட்டால் இவருக்கு விருப்பமாகும்.

    சூரியனுக்கு வடகிழக்கில் பாண வடிவான மண்டலத்தில் தங்கப் பிரதிமையாக வடக்கு முகமாக வீற்றிருப்பவர்.

    சூரியனிடம் பிரகாசத்தை இழுத்து, செடி கொடிகளைப் பச்சை நிறமாக்கும் தன்மை உடையவர்.

    பச்சை பதார்த்தங்களிடம் பிரியம் உள்ளவர். பச்சைப் பயறு தானமாகக் கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்.

    • ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.
    • சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.

    அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.

    இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.

    ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.

    அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.

    இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.

    புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.

    • நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
    • பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.

    இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.

    நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.

    51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

    சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.

    இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.

    இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவியாக பிரம்ம வித்யாம்பிகை திகழ்கிறார்.

    திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள்.

    மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார்.

    பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.

    கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.

    நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம்.

    கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.

    பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.

    • குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
    • 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரணேஸ்வரர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 11வது தலமாகும்.

    காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.

    21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.

    இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.

    பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.

    குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.

    மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.

    பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.

    இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.

    மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

    ×