search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudhan bhagavan"

    • புதன் கிரகம் விதியால் துதிக்கப்படுகிறது. எனவே விதியை வெல்ல புதனை துதிக்கலாம்.
    • புதனை வணங்குவதால் இந்திரனும் திருப்தியடைவார்.

    1. பித்தளை, உலோகம் புதனுக்குரியது.

    2. கிரஹபதி, ஞானி, புத்திதாதா, தனப்ரதன் என்ற விசேஷப் பெயர்கள் புதனுக்கு உண்டு.

    3. ஜோதிடக்கலை புதனுக்குரியது.

    4. வாணிஜ்ய நிபுணன் (வியாபாரத்தில் சமர்த்தன்) என்ற திருநாமம் புதனைக் குறிக்கும்.

    எனவே வியாபாரிகள் புதனை வழிபடப் பெரும்பேறு அடைவர்.

    5. முத்துசுவாமி தீட்சிதர் தம் நவக்கிரக கீத்தனையில் புதனை கவி பாடும் திறன் அளிப்பவர் என்றும்,

    செவ்வாய்க்குப் பகைவர் என்றும், சுத்த சத்வ சதானந்த ரூபம் உடையவர் என்றும்

    பல சிறப்பு செய்திகளை கூறுகிறார்.

    புதனுக்கு அதிதேவதை விஷ்ணு, பிரத்யதி தேவதை நாராயணர். புதன் விஷ்ணுவைப் போல் தோற்றமுள்ளவர்.

    6. புதன் கிரகம் விதியால் துதிக்கப்படுகிறது. எனவே விதியை வெல்ல புதனை துதிக்கலாம்.

    7. புதனை வணங்குவதால் இந்திரனும் திருப்தியடைவார்.

    8. சரத்ருதுவிற்கும் அதர்வண வேதத்திற்கும் புதனே உரியவர்.

    9. கல்விக்கும், அறிவிற்கும் உரிய புத்திரகாரகன் புதன்.

    கவி ஆற்றல், கணிதம், தர்க்கம், வைத்திய அறிவு, நாடகம், நாட்டியத்திறன், புத்தகம் எழுதுதல்,

    உச்சரிப்பு ஆகியவற்றுக்கு புதன் உச்சத்தில் இருப்பதே காரணமாகும்.

    10. நவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு வடகிழக்கே அமர்பவன் புதன். புதனுக்குரியது கல்கி அவதாரம்.

    11. ஆயுர்வேதத்திற்கு உரியவரும், மஹா விஷ்ணுவின் அவதாரமானவரும், பாற்கடலில் தோன்றியவரும்,

    அமுத கலசத்தை கையில் ஏந்தியவருமான தன்வந்திரி பகவானைத் துதித்தால் புதன் மகிழ்ச்சியடைவார்.

    12. புதனுக்கு வேம்பு இலையில் சர்க்கரையும், நெய்யும், பாலும் கலந்த சோற்றை வடதிசையில்

    கிரக பலியாகக் கொடுக்க புத பகவான் திருப்தியடைவார்.

    13. புலமைக்கும், வணிகத்திற்கும் உரிய கடவுளாக புதனை பண்டைய கிரேக்கர் வழிபட்டனர்.

    14. புதன் பொன்னிறமானவன். 'கோங்கு' என்ற மலரின் நிறமுடையவன். மஞ்சள் நிற ஆடை புனைந்தவன்.

    மஞ்சள் நிறக் குடையும், கொடியும் உடையவன். மஞ்சள், சந்தனம் தரிப்பவன்.

    15. நல்லோரது நட்பு, தாய்மாமனின் நிதி நிலைமை, நம் கல்வி, புத்தி, அமைதி, ராஜசன்மானம், விவேகம்

    ஆகியவற்றை புதன் நிர்ணயிப்பார்.

    16. கல்வித்தடை, புத்தி மந்தம், வாக்கு நாணயம் தவறுதல், நரம்புத் தளர்ச்சி, மனதில் பீதி, கிலேசம்,

    வியாபார நஷ்டம், பிறதேச வாசம், விபரீத ஞானம் ஆகியவை புதனால் வரும் அசுப பலன்களாகும்.

    17. புதனால் வரும் துன்பங்கள் விலக ஸ்ரீ வால்மீகி ராமாயணத்தில் ௩௫ வது சருக்கம் ராம வருண சம்வாதம் பாராயணம் செய்யலாம்.

    • தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.
    • அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும்.

    புத பகவானுக்கு புதன் கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம், மரகதமணி, வெண்தாமரை

    இவற்றால் அலங்காரம் செய்து, புதனைப் பற்றிய ஸ்தோத்திரங்களை ஓதி, நாயுருவி சமித்தால் யாகத் தீ எழுப்பவும்.

    பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி செய்து, தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்யவும்.

    தூபதீப நைவேத்தியம் கொடுத்துப் பிரார்த்தனை செய்து கொள்ளவும். கற்பூர ஆரத்தி எடுக்கவும்.

    புத பகவானை வழிபடும்போது ராகம் தெரிந்தவர்கள் நாட்டக் குறச்சி ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடுவது மிகுந்த சிறப்பாகும்.

    புதனுக்கான கோலம்

    அரிசி மாவினால் புதனுக்குரிய இந்தக் கோலத்தை புதன் கிழமை தோறும் பூஜை அறையில் போடவும்.

    விளக்கேற்றி வைத்து புதனுக்குரிய பாடல்களை, தியான சுலோகங்களைச் சொல்லி வழிபடவும்.

    • மிதுனம், கன்னிராசிகளின் அதிபதி புதன்.
    • புதனின் நட்பு வீடுகள் : ரிஷபம், சிம்மம், துலாம்.

    மிதுனம், கன்னிராசிகளின் அதிபதி புதன்.

    அறிவைக் கொடுக்கும் புதன், கன்னிராசிக்கு வரும் சமயம் உச்சம் பெறும், மீனராசிக்கு வரும் சமயம் நீச்சமடையும்.

    புதனின் நட்பு வீடுகள் : ரிஷபம், சிம்மம், துலாம்.

    பகை வீடுகள் : கடகம், விருச்சிகம்

    ஒருவர் ராசிக்கு வந்து புதன் தங்கியிருக்கும் போது குடும்பம் அமைதியையும் சுகத்தையும் இழக்க நேரிடும்.

    குடும்பத்தில் இருந்து பிரிந்திருக்க நேரிடலாம். சுபக்கிரகப் பார்வை ஏற்படுமானால் தீய பலன் மாறி நற்பலன் ஏற்படும்.

    புதன், ராசிக்கு 2ல் வரும் சமயம் செல்வாக்கு குறையலாம். புதன் வலிமை பெற்றால் நற்பலனே விளையும்.

    புதன், ராசிக்கு 3ல் வரும்போது எதிரிகளால் தொந்தரவு இருக்கலாம்.

    சுபர்களின் பார்வை படுமானால் நல்ல பலன்களே உண்டாகும்.

    ராசிக்கு 4ல் புதன் தங்கும்போது நல்ல பலன்கள் உண்டாகும்.

    பொருள் வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ராசிக்கு 5ல் வரும்போது சிரமம்தான்.

    மற்றக் கிரகங்ளின் வலிமையால் நன்மையை உண்டாகும்.

    புதன் ராசிக்கு 6ல் வரும்போது நன்மையே நடக்கும்.

    எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.

    மற்றவர்களிடையே மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

    குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதனால் செலவுகள் வரும்.

    ராசிக்கு 7ல் புதன் வரும்போது அமைதி குறையலாம்.

    ஆனாலும் விரைவில் நன்மையாகும்.

    ராசிக்கு 8ல் வரும்போது, பலன்கள் நன்றாக இருக்கும்.

    குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும். பொருளாதார வசதி பெருகும்.

    எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.

    புதன் 9ல் வரும்போது தெய்வபக்தியால் சிரமங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

    புதன், ராசிக்கு 10ல் வரும் சமயம் பணவசதியும், உற்சாகமும், கணவன் மனைவி உறவு சந்தோஷமாகவும் இருக்கும்.

    ராசிக்கு 11ல் வரும்போதும் நன்றாக இருக்கும். கவலை ஏதும் இருக்காது.

    புதன் ராசிக்கு 12ல் நிற்கும்போது சிரமமான நேரம்தான்.

    ஆரோக்கியக் குறைவு, பண நெருக்கடி, மனக்குழப்பம் இருக்கும்.

    கிரக சஞ்சாரத்தில் மாற்றங்கள் ஏற்படும்போது நற்செலவுகள் ஏற்பட்டு நல்ல காரியங்கள் நடக்கும்.

    • புத தசை 17 ஆண்டுகள்.
    • வாக்கு சாதுர்யம், பண்டிதர்களின் நட்பு, புகழ் முதலியவை கிடைக்கும்.

    புத தசை 17 ஆண்டுகள்.

    புதன் ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 நாட்களாகும்.

    கன்னி ராசியில் 1 மிதுன ராசியில் 1, ரிஷபம், சிம்மம், துலாம் ராசிகளில் மேஷம்,விருச்சிகம், தனுசு,

    கும்ப ராசிகளில் கடக ராசியில் மீன ராசியில் 1/8 பங்கு வீதம் பலனைத் தரும்.

    புதன் தரும் பலன்களை ஆனி, புரட்டாசி மாதங்களிலும், மிதுனம், கன்னி ராசிகளில் வரும்போதும் காணலாம்.

    புதன் சுப பலன்களாக ஒருவர் மேற்கொண்டிருக்கும் படிப்பு, தொழில், கலை முதலியவற்றில் மகா பாண்டித்யமும் ஞானமும் அருளுவார்.

    வாக்கு சாதுர்யம், பண்டிதர்களின் நட்பு, புகழ் முதலியவை கிடைக்கும்.

    புதன் அசுப பலன் தரும்போது தொழிலில் அல்லது கலைகளில் வீழ்ச்சி, புத்தி தடுமாற்றம், வாக்கு மீறுதல், சச்சரவு, சொந்த ஊரைவிட்டுப் போகுதல் முதலியவை உண்டாகும்.

    ×