search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர்"

    • காய்கறி, உணவு கழிவுகள் மூலம் பயோ கியாஸ் தயாரித்து உணவு சமைக்கும் பணியை சிவகங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக்கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப் பில் சத்துணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. அதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள், மாணவர்கள் பாதிப்புக்குள் ளாகி வந்தனர்.

    இப்பிரச்சினையை போக்க ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஏற்பாட்டில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக்கழிவுகளில் இருந்து தயாரிக்கும் பயோ கேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் மாணவர்களுக்காக சத்துணவு சமைக்கப்பட உள்ளது.

    நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக்கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினவேல், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ், ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

    • மீன்வள தினத்தை முன்னிட்டு கடல்வாழ் உயிரின உணவு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பூங்கா வில் உலக மீன்வள தினத்தை யொட்டி கடல் வாழ் உயிரினங்களின் உணவு கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இக்கண்காட்சி அரங்கில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து பல அறிய வகை மீன்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இடம்பெற்றன. மாலை 4 மணிக்கு தொடங்கிய கண்காட்சி இரவு 8 மணிக்கு முடி வடைந்தது. இதில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    கண்காட்சி அரங்கில் நவீன மின்னணு திரை அமைத்து தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்தும், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்படும் வருமா னம் மற்றும் மீனவர்க ளுக்கான பயிற்சி மற்றும் பேரிடர் காலங்களில் பாது காப்புடன் சென்று வருவ தற்கான வழிகாட்டுதல் குறித்த குறும்படங்கள் திரை யிடப்பட்டது.

    குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தது. உணவு கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா. உதவி இயக்குநர்கள் சிவகுமார் (மண்டபம்), அப்துல்காதர் ஜெய்லானி (ராமேசுவரம்), மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 55 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 82 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 144 ஆக மொத்தம் 623 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு ரூ.75,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு தையல் எந்திரத்தையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.

    நாகர்கோவில் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலின்படி, சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தினை சட்டசபையில் அறிவித்தார். அதனடிப்ப டையில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட வுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் அதிகப்படியாக கண்டறி யப்படும் 3 வகையான புற்றுநோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கான கண்டறியும் பரிசோ தனைகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாய் புற்றுநோயும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வனைத்து பரிசோ தனைகளும் வலியின்றி மிக விரைவில் மிக எளிதாக செய்துகொள்ளலாம்.

    சுகாதாரத்துறை அலுவ லர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பயனா ளர்களை யும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்வாழ்வு மையங்களாக செயல்பட்டு கொண்டி ருக்கும் அரசு துணை சுகா தார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்க உரிய ஏற்பாடு களை செய்துள்ளனர்.

    முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளிலும் இப்பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். மாவட்டத்தின் அனைத்து பயனாளர்களையும் 3 வருடத்திற்குள் பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இத்திட்டம் தொடங்கிய பின் சுகாதாரத்துறை பணியாளர்கள் உங்கள் இல்லங்கள் தேடி வந்து இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கு வார்கள். இந்த அழைப்பி தழ்களில் அருகாமை யிலுள்ள பரிசோதனை முகாம்கள் பயனாளர்க ளுக்கு தெரியப்படுத்தப்ப டும். இத்திட்டத்திற்கான அழைப்பிதழ்கள் பெறப்பட்டவுடன் பரிசோ தனை முகாமிற்கு சென்று பரிசோதனைகள் செய்திட மாவட்ட நிர்வாகத்தின சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இப்பரிசோதனைகள் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் உள்ளடங்கிய தனியார் மருத்துவமனை களிலும் உரிய பயிற்சிகள் பெறப்பட்டவர்களால் செய்யப்படும். பரிசோதனை யின் முடிவில் புற்றுநோய் அறிகுறிகள் இல்லை யெனில், 3 வருடத்திற்குப்பின் மறுபரிசோதனை செய்துக் கொள்ளலாம்.

    பரிசோதனையில் புற்று நோய் அறிகுறிகள் தென் பட்டால், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேற்பரிசோதனைகள் செய்யும் வசதியுள்ள அரசு மருத்துவமனைகளில் மேற்பரிசோதனைக்காக பரிந்துரை செய்யப்படும்.

    வளர்ந்த நாடு என்ற பட்டத்திற்கு நாம் தயாராகும் நிலையில், தொற்றா நோய் களான சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. பிற தொற்றா நோய்களை போல் ஆரம்ப நிலையில் கண்டறிதலே புற்றுநோயினை குணப்ப டுத்த சிறந்த வழிமுறை. இதன்மூலம் புற்றுநோயி னால் வரும் உயிரிழப்புகளை வெகுவாக குறைக்கலாம்.

    தமிழக அரசின் மக்க ளைத்தேடி மருத்துவம், உலக அளவில் தொற்றா நோய்களுக்கு ஒரு முன்மா திரியான திட்டமாக செயல்பட்டு கொண்டி ருக்கின்றது. இத்திட்டத்தின் வெற்றி மக்களாகிய உங்க ளின் ஈடுபாட்டை சார்ந் துள்ளது. சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழக அரசின் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திடு மாறு கலெக்டர் ஸ்ரீதர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
    • ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு, பெண்கள் உள் நோயாளிகளின் பிரிவு. குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் விவரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் ஆஸ்பத்திரியின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு டாக்டர்களுக்கு கலெக்டர் கலைச் செல்வி மோகன் அறிவுரை வழங்கி, மருந்தகத்தில் மருந்துகள் இருப்புகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர்- ஓரகடம் கூட்டு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

    • தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.
    • அனைவரையும் ஈர்க்கக்கூடியது தமிழ்மொழி என கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூ ரியில் தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பேசியதா வது:-

    நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு உள்ளது. உலக மொழிகளில் எளிமையாக கற்றுக் கொள்ளும் வகையிலும், சிறப்பு வாய்ந்த மொழி யாகவும் தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழிக ளிலுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை எளிதில் உணர்ந்து, அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையிலும் ரசிக்கத்தக்க வகையிலும் உள்ளது. பல்வேறு காலச்சூழ் நிலையில் மாற்று மொழிக ளின் பயன்பாடுகள் அத்தி யாவசியம் அதிகரித்து வந்தாலும், தாய்மொழி பயன்பாட்டை தவிர்க்கக்கூடாது.

    தாய்நாட்டில் முழுமையாக பேச்சு முதல் கோப்புகள் பராமரிப்பு வரை தமிழ் மொழியை பின்பற்றி பாதுகாப்பதுடன், வருங்காலச் சந்ததியினருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்திட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    தாய்மொழியை காப்பதும் அதன் மூலம் அலுவலக செயல்பாடுகளை செயல்படுத்துவதும் என ஒவ்வொன்றையும் முழுமையாக பின்பற்றி அனைவரும் தமிழ்மொழியை பாதுகாத்திட வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் துரையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    நாகர்கோவில்:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்கு ளம், விலாத்துறை ஆகிய

    ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியையும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின் கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும், நடைக்காவு ஊராட்சி க்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன்கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறு ப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 லட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசுதொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2022-23-ன் கீழ் ரூ.13.25 லட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.13.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளும்,

    பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் தையல் எந்திர அறை கட்டும் பணி யினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சி மன்ற தலைவர்கள் லைலா (தூத்தூர்), மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வேதாளை மக்கள் தொடர்பு முகாமில் 52 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு மாற்று திறனாளி உதவித்தொகை ஆணைகள், 4 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை ஆணைகள், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகை ஆணை, 25 பயனாளிகளுக்கு இ-பட்டாக்கள், 4 பயனாளி களுக்கு முழுப்புலம் பட்டா மாறுதல் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 26,585 மதிப்பிலான விலை யில்லா தையல் இயந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு ரூ. 10,036 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகள்,

    வேளாண்மைத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ. 690 மதிப்பிலான தென்னங் கன்று திரவ உயிரி உரங்களையும், தோட்டக்கலைத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.800 மதிப்பிலான மரக்கன்றுகள் என மொத்தம் 52 பயனாளிகளுக்கு 1.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.

    முன்னதாக அரசு துறைகளின் சார்பில் மேற் கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் , ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அல்லா பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.9.62கோடி செலவில், 60மீட்டர் நீளத்தில் தடுப்புகற்கள் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், திருக்கழுகுன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு சார்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
    • தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நான் முதல்வன் நிரல் திருவிழா அறிமுகம் மற்றும் விளக்கப்பட்டரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களின் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் நோக்கம் தொழில், கல்வி மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் எதிர்கா லத்திற்கான திட்ட இலக்கீட்டை எளிதாக கை யாளும் வகையில் அவர்க ளுக்கான வழிகாட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    பொதுவாக கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான திட்டத்தின் போது அவர்க ளுக்கு ஏற்படும் இடையூறு களை கண்டறிந்து சரியான வழிகாட்டுதலை மேற் கொள்ள செய்வதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலம் சிறந்து விளங்கும். அதுதான் நான் முதல்வன் என்னும் திட்டத்தில் உன்னத லட்சியமாகும்.

    இத்திட்டத்தில் மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதலை மேற்கொள்ள சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தை சேர்ந்த அனுபவம் மிக்க மாணவர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு புராஜக்ட் திட்டத்திற்கு தக்க ஆலோசனை மற்றும் வழி காட்டுதலை செய்து கொடுப்பதற்கான பணி களை தொழில் பயிற்சி நிலையம் முதல்வர்கள் மற்றும் கல்லூரி முதல் வர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாண வர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் இறுதி யாண்டு கல்வியை முடித்து ஒவ்வொருவரின் லட்சிய மும் நிறைவேறிடும் வகை யில் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் திறன் பயிற்சி குமரவேல், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மாரிமுத்து, ஓம் பிரகாஷ் திட்ட மேலாளர் ரூபன், மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் பிரதீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.62.68 லட்சம் மதிப்பில் மானிய உதவிகளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி கள், மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    முன்னதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொட்டகை அமைத்தல், கறவைப்பசு, ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் கொள்முதல் செய்தல், பசுந்தீவன பயிர் சாகுபடி செய்தல், இயந்திர புல் நறுக்கும் கருவி கொள்முதல் செய்தல் உள்ளிட்ட கால்நடை சார்ந்த தொழில் புரிவதற்கும், கருவிகள் கொள்முதல் செய்வதற்கும் 30 பயனா ளிகளுக்கு மொத்தம் ரூ.99.50 லட்சம் திட்ட மதிப்பில் ரூ.62.68 லட்சம் அரசு மானி யத்திற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்ட தொடக்க விழா நடந்தது.
    • அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடை பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்க விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்து வமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக பி ன்புறம், போலீஸ் சூப்பி ரண்டு முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை (Ajfan Dates), புதிய சோதனை சாவடி, காவல் கண்கா ணிப்பாளர் முகாம், அரசு விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் வரை மொத்தம் 8 கி.மீ நடை பயணம் மேற்கொள்ள ப்பட்டது.அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடை பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக குடிநீர், ஓய்வு நாற்காலிகள் மற்றும் வழிகாட்டி பலகைகள், நடைபயிற்சி நன்மைகள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

    இத்திட்டத்தினை இன்று காலை சனிக்கிழமை ராம நாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை,மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜீலு,சார் கலெக்டர் அப்தாப் ரசூல்,சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார் (ராமநா தபுரம்), இந்திரா (பர மக்குடி),செய்தி மக்கள் தொடர்பு அலு வலர்பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் தினேஷ்கு மார்,மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், வாலாந்த ரவை ஊராட்சி மன்றத் தலைவர் முத்தமிழ் செல்வி பூரணவேல்,உட்பட உள்ளாட்சி பிரதிநி திகள், அரசு அலுவ லர்கள் பங்கேற்றனர்.

    ×