search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி"

    • இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது
    • இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது

    விளையாட்டு, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு, குரூப் தலைவர் எம். வினித் கர்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

    இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது. 2023-ல் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.15,000 கோடியைத் தாண்டி உள்ளது.

    மேலும், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13 சதவீதம். 2022-ஆம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.15,766 கோடியாக அதிகரித்து 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வருவாயில் ஸ்பான்சர்ஷிப் செலவுகள், மீடியா செலவுகள் மற்றும் ஒப்புதல் கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.

    விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பு விஷயத்தில் பின் தங்கியுள்ளது. ஸ்பான்சர்ஷிப் செலவுகள் 2022 -ஐ விட 24 சதவீதம் அதிகரித்து 2023 -ல் ரூ.7,345 கோடியாக உயர்வு அடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
    • ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி அபரி மிதமானது.

    பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது.

    மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்ட லூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

    டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.

    இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    இதில் மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2-வது ஐ.டி. பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நிலமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    3-வது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.

    இந்த 3 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை 1½ வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    நாகர்கோவில்:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்கு ளம், விலாத்துறை ஆகிய

    ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியையும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின் கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும், நடைக்காவு ஊராட்சி க்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன்கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறு ப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 லட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசுதொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2022-23-ன் கீழ் ரூ.13.25 லட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.13.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளும்,

    பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் தையல் எந்திர அறை கட்டும் பணி யினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சி மன்ற தலைவர்கள் லைலா (தூத்தூர்), மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சண்முகவடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஹெலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ரூ.20 லட்சம்‌ மதிப்பில்‌ கட்டப்பட்டு வரும்‌ ஒர்கிங்‌ சென்டர்‌ கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர்கள்‌, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வை யிட்டேன். பணிகளை விரைந்து முடித்து குடியி ருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட் டது.அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணி களை ஆய்வு மேற்கொண்ட தோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிர தான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலையை பார்வை யிட்டேன். சாலை யின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. மேலும், புலி யூர்ச்சாலை ஊராட்சி யில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டி டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை
    • ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில், மேல்புறம் ஊராட்சி ஒன்றி யம் முழுக்கோடு ஊராட்சிக்கு ட்பட்ட பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புண்ணியம் மாத்தூர்கோணம் சாலை பணிகளும், வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிதறால் பட்டன்விளை ஆட்டுக்கடவு சாலை பணிகளும், ரூ.35 லட்சம் மதிப்பில் பனிச்சமூடு கிருஷ்ணன்கோவில் சாலை பணிகளும், ரூ.38 லட்சம் மதிப்பில் வெள்ளாங்கோடு, செட்டிவிளை (பள்ளி கோணம் ஆர்.சி.சர்ச் சாலை) சாலை பணிகளும், மாஞ்சாலுமூடு பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் கைதகம் படப்பச்சை சாலை பணிகளும், மலையடி ஊராட்சிக்குட்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பில் காங்கோடு சாணி சாலை பணிகளும், ரூ.24 லட்சம் மதிப்பில் உத்திரங்கோடு சண்டிப் பாறை சாலை பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் ஊராட்சிக் குட்பட்ட செழுவன்சேரி-மஞ்சவிளை சாலை, துப்பிறமலை சாலை பணிகளும், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட காணாகும் கொடி யூர்க்கோணம் சாலை பணிகளும், விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மடிச்சல் சாட்டுமுக்கு சாலைப்ப ணிகளும், முழுக்கோடு, வெள்ளாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.6 கோடி மதிப்பிலான சாலை பணிகளும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
    • ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவாக்கியுள்ளது.

    கோவை,

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் 'தற்சார்பு இந்தியா திட்டத்தை' புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன்வைத்துள்ளது.

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையப் பொருட்களின் விற்பனை ரூ.1.34 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

    ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கைவினைஞர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதி பொருட்களின் விற்பனை, கடந்த 9 ஆண்டுகளில் 332 சதவீதம் என்ற இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    2013-14 நிதியாண்டில் ரூ.31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருள்களின் விற்பனை, 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.

    அதேபோல ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.

    "மகாத்மா காந்தியால் எழுச்சி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

    உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல் மற்றும் 'மேக் இன் இந்தியா' ஆகிய திட்டங்களின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும்." என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில்," மத்தியில் மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சியோடு காதி தயாரிப்புகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் வகையில் 'தன்னிறைவிலிருந்து வளம்' என்பதை வலியுறுத்தி 9 சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன" என்றார்.

    • ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது.
    • கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் அடுத்த வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது. கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    2022-23-ஆம் நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், பொது நிதியின் கீழ் ரூ.2.36 கோடி

    மதிப்பீட்டில் 54 பணி களும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.69 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 5 பணிகளும் என 2022-23-ஆம் நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஏற்காடு ஊராட்சி ஒன்றி யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறிப்பிட்ட கால அள விற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திடவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்றித்தரவும் துறை அலு வலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப் பொறியாளர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு
    • பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஏற்றக்கோடு மற்றும் குமரன்குடி ஊராட்சி பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைப்பது, நீர் நிலைகளை தூர்வாருவது, குடிநீர் வசதி உள்ளிட்ட பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட குளச்சல் திருவட்டார் சாலை முதல் கட்டைக்கால் சாலை வரை தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் கருந்தளம் அமைக்கப்பட்டி ருந்த பணியினை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சிற்றார் பட்டணக்கால் கால்வாய் முதல் கூடளாகம் வரை மகாத்மா காந்தி தேசிக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் கால்வாய் தூர்வாரி மேம்படுத்தும் பணியினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    குமரன்குடி ஊராட்சிக் குட்பட்ட கண்ணன்கரை விளை முதல் கொல்லன் விளை சாலை வரை பத்மநா பபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.99 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்ட சிமெண்ட் சாலை மற்றும் கட்டி முடிக்கப் பட்ட தடுப்புச்சு வர் பணியினை யும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் வடக்கநாடு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணி என மொத்தம் ரூ.71.69 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, கீதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பால்சன் (குமரன்குடி), ஹெப்சிபாய் கிறிஸ்டி (ஏற்றக்கோடு), உதவி பொறியாளர்கள் சஞ்சு பொன்ராஜன், கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியனில் ரூ.53.85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி யூனியன் தினைக்குளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் தினைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப பணிகளை உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான காம்பவுண்ட் சுவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டதுடன் பள்ளி வளாகத்தை சுற்றி உட்புறப் பகுதியில் காம்பவுண்டு சுவரில் மாணவ- மாணவிகள் பார்த்து பயன்பெறும் வகையில் கல்வி முன்னேற்றத்திற்கான விழிப்பு ணர்வு ஓவியங்கள் வரைந்துள்ளதை பார்வையிட்டு பாராட்டினார்.

    இதே போல் ஒவ்வொரு பள்ளியிலும் காம்பவுண்டு சுவர் உட்புறத்தில் பொது அறிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அமைத்து மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பின்னர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார்.தினைக்குளம் ஊராட்சியில் 15-வது நிதி குழு திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தி ற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார். அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராம சாலையின் பக்கவாட்டுகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன் கணேஷ் பாபு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் அருண் பிரசாத், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று ஆய்வு

    கன்னியாகுமரி, மார்ச்.14-

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரிய சாமி நேற்று இரவு கார் மூலம் கன்னியா குமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதன் பிறகு அவர் இரவு கன்னியா குமரியில் தங்கினார். பின்னர் அமைச்சர் ஐ. பெரிய சாமி இன்று காலை கன்னியா குமரி அருகே உள்ள கோவளம் சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் தூய்மை இந்தியா திட்டம்மற்றும் 15 -வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ்சுற்றுலா பயணிகளுக்குவசதியாக நவீன கழிப்பறை கட்டும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பிறகு ஒற்றையால் விளை அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள், நண்பர்கள் நட்புறவு திட்டத்தின் கீழ் ரூ.68 லட்சத்து25 ஆயிரம் செலவில்4 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டும்பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆமணக்கன்விளை அரசு தொடக்கப்பள்ளி யில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 69 ஆயிரம் செலவில் சத்துணவு திட்ட சமையலறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    அதைத் தொடர்ந்து சுவாமிதோப்பு பதிசாலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 99 ஆயிரம் செலவில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அவருடன் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட திட்ட அதிகாரி பாபு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியதி.மு.க. செயலாளர் பாபு, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணைசெயலாளர்தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர்வைகுண்ட பெருமாள், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ்.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்ப ரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணன், கோவளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்டெனி, லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
    • மதுரையில் நடந்த மாநாட்டில் தலைவர்கள் பேசினார்கள்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு நடந்தது.

    இதில் தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் அழகிரி, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. கோ.தளபதி, பூமிநாதன் மற்றும் தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீ.வீரமணி பேசியதாவது:-

    சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழகம் வளம் மிக்க மாநிலமாக மாறி இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் பா.ஜ.க. பிடிவாதம் பிடிக்கிறது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டிருப்பதால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி ஈரோட்டில் பிரசாரம் தொடங்கப்படும்.

    அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.ஆர்.பாலு எம்.பி. பேசுகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். குழந்தையை பெற்றெடுத்து ஊனமாக்கியது போல் இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் செய்கிறது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாது. சேது சமுத்திர திட்டத்திற்கு மத சாயம் பூசக்கூடாது என்றார்.

    தொடர்ந்து கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசினர்.

    ×