search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In Yercaud"

    • சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் அதிகபட்சமாக 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
    • மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலையில் மழை பெய்தும் வருகிறது. நேற்று நள்ளிரவும், சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆணைமடுவு, கடையாம்பட்டி, தலைவாசல், ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரம் கன மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாநகரில் பொன்னம்மாபேட்டை, டவுன், கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

    அம்மாபேட்டை மிலிட்டரி சாலை, காந்தி மைதானம் பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனால் அந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

    சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் அதிகபட்சமாக 27.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு-27.2, சேலம்-19.6, ஆணைமடுவு - 19, கடையாம்பட்டி- 18, தலைவாசல் - 17, ஓமலூர்-13.4, பெத்தநாயக்கன்பாளை யம்-9, மேட்டூர்-5.2 என மொத்தம் 128.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது.
    • கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் அடுத்த வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது. கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    2022-23-ஆம் நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், பொது நிதியின் கீழ் ரூ.2.36 கோடி

    மதிப்பீட்டில் 54 பணி களும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.69 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 5 பணிகளும் என 2022-23-ஆம் நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஏற்காடு ஊராட்சி ஒன்றி யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறிப்பிட்ட கால அள விற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திடவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்றித்தரவும் துறை அலு வலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப் பொறியாளர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ஏற்காடு தமிழகத்தில் பிரசித் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
    • சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு தமிழகத்தில் பிரசித் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஏழைகளின் என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏற்காட்டிற்கு விடுமுறை தினமான இன்று திரளான சுற்றுலாப்பயணிகள் வந்தனர். கடும் பனி பெய்த நிலையிலும் வாகனங்கள் அதிகம் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இன்று பிற்பகலில் லேசான சாரல் மழையும், பனியும் பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் திரளானோர் சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி மற்றும் மான் பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.ஏரிக்கு திரளான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து சென்றனர்.

    சாலையோர கடைகளில் விற்பனை சூடு பிடித்தது. லேடிஸ் மற்றும் ஜென்ஸ் சீட் கூட்டம் நிரம்பி வழிந்தது. தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் அதிகமாக காணப்பட்டது.

    ×