search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் அரிப்பு"

    • மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.9.62கோடி செலவில், 60மீட்டர் நீளத்தில் தடுப்புகற்கள் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், திருக்கழுகுன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.

    • ஏழு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • பணிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி ஆய்வு செய்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கிலமேடு மீனவர் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் நீண்டகாலமாக கடல் சீற்றத்தால் ஏற்படும் கடலரிப்பால், தங்களது படகு, வலை, எந்திரங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதை தடுப்பதற்காக கடற்கரை ஓரத்தில் நேர்கல் தடுப்பு மற்றும் மீன் இறங்குதளம் அமைத்து தரவேண்டும் என அரசிடம் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதற்கு அரசு 9.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது மீன்வளத்துறை சார்பில், கடலில் பாறை கற்கள் கொட்டப்பட்டு ஏழு நேர்கல் தடுப்பு அமைக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி மீனவர்களிடம் நேர்கல் தடுப்பு பணிகள் குறித்தும், அவர்களது மீன்பிடி தொழில் வளம் சார்ந்த குறைகளையும் கேட்டறிந்தார்.

    • உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதன் காரணமாக கூட்டப்பனை மீனவர் கிராமத்தில், அரசால் கடற்கரையில் கட்டப்பட்டு இருந்த மீன் ஏலக்கூடம் மற்றும் வலைபின்னும் கூடத்தில் கடல்நீர் புகுந்தது. இதனால் அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்து சேத விவரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.
    • ரூ. 6 கோடியே 83 லட்சம் மதிப்பில் மீன் இறங்கு தளம் அமைக்க உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவர் கிராமம் அமைந்துள்ளது.

    இந்த மீனவர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் .

    தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தில் கடல் அலைகள் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டது.

    இதனால் கரையில் படகுகளை நிறுத்த முடியாத நிலைமை உண்டானது. கரை அரிப்பை தடுக்கும் வகையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனை ஏற்று தமிழக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 6 கோடியே 83 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

    கரையில் கருங்கல் கொட்டி தடுப்புச் சுவர் அமைக்கப்படுவது உடன் மீன் இறங்க தளமும் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான பூமி பூஜை குட்டியாண்டியூர் கடற்கரையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் பங்கேற்றனர்.

    • மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது.
    • நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள புதுகல்பாக்கம் மீனவர் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு, மணல்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வந்தது., இதனால் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைக்கவும், மீன்களை இறக்கவும், சிரமப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து, அரசின் பார்வைக்கு கொண்டு சென்றது. அரசு 8 கோடி ரூபாய் மதிப்பில், 4 வரிசைகளில் நேர்கல் தடுப்புகளும், 2 வலை பின்னும் கூடங்களும் அங்கு கட்ட முடிவு செய்து அதற்கான கட்டுமான பணிகளை செய்து வந்தனர்., தற்போது பணிகள் நிறைவடைந்தது. அப்பகுதியை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, திருப்போரூர் ஆத்ம வேளாண்மைக் குழுத் தலைவர் பையனூர் சேகர், நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • வீடுகள் இடியும் அபாயம்
    • கடந்த 4 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது. இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடலரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் மேற்கு சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது. அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குளச்சல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. நேற்று மீண்டும் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் பள்ளத்தில் கொட்டப்பட்ட மணல் முழுவதும் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் கொட்டில்பாடு கடற்கரை செல்லும் கிழக்கு சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து எழும் ராட்சத அலைகளினால் சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கொட்டில்பாட்டில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் இன்று காலை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

    குளச்சலில் ஏற்பட்ட கடலரிப்பில் துறைமுக பழைய பாலம் பகுதியில் மணலரிப்பு ஏற்பட்டுள்ளது. பாலத்தின் அஸ்திவாரம் பகுதியில் சுமார் 7 அடி ஆழத்திற்கு மணலரிப்பு ஏற்பட்டு தூண்கள் வெளியே தெரிகிறது. மணற்பகுதியிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மாலை வேளையில் பொழுது போக்கிற்கு கடற்கரை வரும் பொதுமக்கள் மணற்பரப்பில் அமர முடியாமல் உள்ளது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி மாலை கடற்கரை வந்த பொதுமக்கள் மணற்பரப்பில் உட்கார முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். இன்று கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியினை கல்குளம் தாசில்தார் கண்ணன் தலைமையில் குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி ஆகியோர் பார்வை யிட்டனர். இதைத்தொடர்ந்து குளச்சல் நகராட்சியினரும் சென்று பார்வை யிட்டனர்.

    • மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது.
    • மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைச்சாவடி கிராமம் கடலோரப் பகுதியில் உள்ளது. இங்கு ஏற்கனவே கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் கல் கொட்டும்பணியை அரசு மேற்கொண்டது.

    ஆனால், தமிழக பகுதியில் கொட்டப்பட்டுள்ளது போல கடல் நோக்கி தூண்டில் வளைவு அமைக்காமல் சாலை போடுவது போல் கல் கொட்டப்பட்டது.

    இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கல் கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக பிள்ளைச்சாவடியின் வடக்குப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலில் அடித்து செல்லப்பட்டன. மேலும் கடலோர பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடித்து செல்லப்பட்டன.

    மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. எந்த நேரத்திலும் இந்த 2 களங்களும் கடலுக்குள் விழும் என்ற அபாய நிலையில் உள்ளது.

    இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், ஆதிதிராவிடர் பகுதி குடியிருப்பு பஞ்சாயத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.

    தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசி மறியல் நடத்தவிடாமல் கைவிட செய்தார்.

    மேலும் அவர்களோடு, கடல் அரிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராட்சத கற்கள் கொட்டப்படும் மற்றும் தூண்டில் முள் வளைவு போல கற்கள் கொட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    இதையேற்று பொதுமக்கள் போராட்ட முடிவை கைவிட்டனர். மறியலுக்காக மீனவர்கள், கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டதால் சிறிதுநேரம் பதட்டம் நிலவியது.

    • கடல் சீற்றத்தின் போதும் இந்த தடுப்புச்சுவர் கரைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.
    • 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    சென்னை:

    சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவாரத்தில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் கூவம் ஆற்றின் தண்ணீரும் கடலுக்குள் செல்ல வழியில்லாமல் தேங்கி காணப்படுகிறது.

    இந்நிலையில் கடல் அரிப்பை தடுக்க சென்னை நேப்பியர் பாலம் அருகே கடல் முகத்துவார பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

    இந்த பணிகளுக்காக நேப்பியர் பாலம் அருகே 200 கான்கிரீட் டெட்ராபாட் கற்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 ஆயிரம் கான்கிரீட் டெட்ராபாட் கற்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த கான்கிரீட் கற்கள் கடலுக்குள் வேலி போல அமைக்கப்படும். இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தடுத்து நிறுத்தி கடல் அரிப்பை தடுக்கும். பெரிய அலைகள் இந்த தடுப்புச் சுவர் மீது மோதி சிதறடிக்கப்படும். இதனால் அலைகளின் தாக்கம் குறையும். கடல் சீற்றத்தின் போதும் இந்த தடுப்புச்சுவர் கரைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

    இந்த தடுப்புச்சுவர் பெரிய அலைகளை தாங்கும் வகையில் உறுதியாக அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. தற்போது 2 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 3 ஆயிரம் கான்கிரீட் கற்கள் கொண்டு வரப்படும். இது கூவத்தை சுத்தப்படுத்தும் திட்டமாகும். குறைந்த அளவிலான அலையின்போது கூவம் ஆற்றின் தண்ணீர் சீராக கடலில் கலக்கும். பெரிய அலைகளின் போது கடலில் உள்ள நீர் கூவத்தில் பாயும். இதனால் கூவம் ஆற்றின் நீர் இயற்கையாகவே சுத்தமாகிறது.

    பெரிய அலைகள் ஒன் றன்பின் ஒன்றாக ஏற்பட்டு கரையை அடையும்போது இந்த தடுப்புச்சுவர் அலையின் வேகத்தை குறைக்கின் றன. இதனால் கரையில் மண் அரிப்பு ஏற்படாது.

    ஏற்கனவே கடலும் ஆறும் சந்திக்கும் முகத்துவாரத்தில் ஆற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மணலை கொண்டு வருகிறது. இதனால் எந்திரத்தை பயன்படுத்தி மண் மற்றும் சேற்றை அகற்ற வேண்டும். அப்போதுதான் கூவம் தண்ணீர் கடலுக்குள் செல்லும்.

    இந்த தடுப்பு சுவர் அமைப்பதால் கடலில் இருந்து வரும் மண்ணின் அளவு குறையும். இதனால் கூவத்தில் உள்ள தண்ணீர் தடையின்றி கடலில் கலக்கிறது. பொதுப்பணித்துறை, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த கட்டமைப்பை மேற்கொண்டு வருகிறது. 3 முதல் 4 மாதங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய்வசந்த் எம்.பி. பார்வையிட்டார்
    • நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வா வத்துறை புனித ஆரோக்கி யநாதர் ஆலயத்தின் கிழக்கு பக்கம் கடற்கரையில் அமைந்துள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவர் கடல் சீற்றத்தினால் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடித்தொழிலை பாதுகாப்பான முறையில் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    அது மட்டும் இன்றி இந்த கடல் அரிப்பு தடுப்பு சுவரில் நின்றபடி சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து வரும் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு கன்னியாகுமரி வாவத்துறை தூய ஆரோக்கியநாதர் ஆலய பங்குபேரவையினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பயனாக வாவத்துறை கடற்கரையில் கடல் அரிப்பினால் சேதமடைந்த தடுப்பு சுவரை ரூ.91 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மறுசீரமைப்பு செய்ய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேதமடைந்த கடல் அரிப்பு தடுப்பு சுவரை மறுசீரமைப்பு செய்ய நிதி ஒதுக்கி 4 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை.

    இந்த நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் கடல் சீற்றத்தினால் சேதம் அடைந்த வாவத்துறை கடல் அரிப்பு தடுப்புச்சுவரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் ஆலய பங்குத்தந்தை லிகோரியஸ், பங்குபேரவை துணை தலைவர் வர்கீஸ் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள் வாவத்துறையில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த தடுப்பு சுவரை உடனடியாக கட்டி தரும்படி விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவைப்பெற்று கொண்ட விஜய்வசந்த் எம்.பி. வாவத்துறையில் கடல் அரிப்பினால் சேதம் அடைந்த தடுப்பு சுவரை மறுசீரமைத்து கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் உறுதி அளித்தார்.

    ஆய்வின்போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் தாமஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ்,உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மாண்டஸ் புயல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலையில் அடித்து சென்று விட்டன.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் உள்ளது. இதன் ஒரு பகுதி புதுவையைச் சேர்ந்ததாகவும் மற்றொரு பகுதி தமிழக பகுதியை சேர்ந்ததாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலையில் அடித்து சென்று விட்டன. 3-க்கும் மேற்பட்ட படகுகளையும் அலைகள் இழுத்து சென்றது. 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அலைகளில் சிக்கி வேரோடு முறிந்து விழுந்தது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

    இதற்கிடையே நேற்று மதியம் பலத்த சூறை காற்றினால் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து அவ்வழியே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    இன்று காலை மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

    • கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
    • கடல் அரிப்பால் மீன் பிடித்து வரும் படகுகளை கரைக்கு இழுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள கடலோர கிராமங்களான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவநேரி, எடையூர், சுலேரிக்காடு பகுதிகளில் உள்ளவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாமல்லபுரத்தில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடல் அரிப்பை தடுக்க மாமல்லபுரம் கடலோர பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்களிடம் கேட்டபோது:-

    இந்த கடல் அரிப்பால் மீன் பிடித்து வரும் படகுகளை கரைக்கு இழுப்பதில் சிரமம் ஏற்படுகிறது., பாறைகளை கொட்டி தூண்டில் வளைவு அமைத்தால் மீன்பிடி படகுகளை கடலின் கரையோரம் பாதுகாப்பாக கட்டி நிறுத்தி வைக்க முடியும். மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் எங்களால் அச்சமின்றி கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்ப முடியும் என்றனர்.

    • கடற்கரையில் இருந்து 400 மீட்டர் தூரத்துக்கு தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும்.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் வந்து கூட்டபனையில் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களில் இயற்கை சீற்றம் மற்றும் கனமழை காரணமாக அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இங்குள்ள பெரிய தாழையில் தொடங்கி கூட்டப்புளி, பெருமணல், தோமையார்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் தான் இருந்து வருகிறது.

    இந்த 9 கிராம மக்களும் கடல் அரிப்பால் மீளா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். சுமார் 100 மீட்டர் தூரம் வரைக்கும் ஏற்படும் கடல் அரிப்பால் இப்பகுதியில் படகுகளை கூட நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    மேலும் கடற்கரையில் உள்ள மிக்கேல் ஆண்டவர் ஆலயம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலையில் கடல் அரிப்பினால் விளிம்பு நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைத்து தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டு காலமாக இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். அரசு சார்பில் 3 இடங்களில் 50 மீட்டர் தூரத்துக்கு தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அதையும் தாண்டி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

    எனவே கடற்கரையில் இருந்து 400 மீட்டர் தூரத்துக்கு தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் வந்து கூட்டபனையில் ஆய்வு செய்தனர்.

    மீனவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் ஒரு வருடத்தை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.

    ×