என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
மாமல்லபுரத்தில் கடல் அரிப்பு தடுப்பு பணியை ஆய்வு செய்த கலெக்டர்
By
Maalaimalar8 Nov 2023 2:36 PM IST

- மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் அரிப்பை தடுக்க ரூ.9.62கோடி செலவில், 60மீட்டர் நீளத்தில் தடுப்புகற்கள் மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், திருக்கழுகுன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி உடன் இருந்தனர்.
Next Story
×
X