search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறித்து"

    • ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

    நாகர்கோவில்:

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்கு ளம், விலாத்துறை ஆகிய

    ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியையும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின் கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும், நடைக்காவு ஊராட்சி க்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன்கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறு ப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 லட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசுதொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ந்து, வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2022-23-ன் கீழ் ரூ.13.25 லட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.13.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளும்,

    பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் தையல் எந்திர அறை கட்டும் பணி யினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சி மன்ற தலைவர்கள் லைலா (தூத்தூர்), மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார்.
    • பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில்:

    மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம், தமிழக மாநில பிரிவு சார்பில் நடைபெற்ற பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார். 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார். இதில் இயக்கு நர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தனர்.

    இதில் டாக்டர்கள் சுரேஷ் பாலன், கோபால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தேவை யான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் துரித உணவு வகையின் தீமைகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியனர். மாணவி அமிர்தா நன்றி கூறினார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிரா மின் கவுசல்ய யோஜனா (கிராமப்பபுற திறன் பயிற்சி) போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அழைப்பு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தமிழகத் தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசி அல்லது கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு திட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும்.

    குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சி கள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்கு தல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.

    மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளை ஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறு வனங்கள் மூலம் வழங்கப் படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங் கள், தகுதிகள், பயிற்சியின் போது வழங்கப்படும் வசதிகள் ஆகியன குறித்தும் தகவல்கள் பெறலாம்.

    எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 155330 அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று பயன டையலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பாக்கியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    கன்னியாகுமாரி:

    அஞ்சுகிராமம் அருகே உள்ள கோட்டவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை.

    இவரது மனைவி பாக்கியம் (வயது 52). இவர் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பாக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பாக்கியம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அஞ்சு கிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாக்கியம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான பாக்கியத்தின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    • சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ உத்தரவு.

    சங்ககிரி:

    சங்ககிரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான கோட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசுகையில், சங்ககிரி கோட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரி மற்றும் எடப்பாடி தாலுகாவில் உள்ள வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கீழ் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவைகளை கணக்கெடுத்து மேற்கண்ட துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்றார்.

    மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் தாசில்தார்கள் பானுமதி (சங்ககிரி), லெனின் (எடப்பாடி) டி.எஸ்.பி. அரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் தேவி, பி.டி.ஓ. முத்து(சங்ககிரி), பேரூராட்சி செயல் அலுவலர்கள் சுலைமான்சேட் (சங்ககிரி), பழனிமுத்து (அரசராமணி) உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என சென்னிமலை நகர மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    தற்போது தியாகி குமரனுக்கு நினைவு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கு 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர்கள் பேசியதாவது:

    சென்னிமலையில் பிறந்து திருப்பூரில் 1932-ம் ஆண்டு நடந்த சுதந்திர போரட்டத்தில் பங்கேற்று தேசத்திற்காக தன் இன்னுயிரை துறந்த திருப்பூர் குமரனை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப் பட்டு வருகிறது.

    தொடர்ந்து முதல்- அமைச்சர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத்நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன்சாலை, சம்பத்நகர் என்று பெயர் சூட்டி சிறப்பு சேர்த்துள்ளார். அந்த வகையில் திருப்பூர் குமரனுக்கு மேலும் பெருமைப்படுத்தும் வகையில், சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.செங்கோட்டையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பிரபு, நகர செயலாளர் ராமசாமி, சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ தேவி அசோக், பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், வெங்கமேடு ஈஸ்வரமூர்த்தி,

    முன்னாள் மாணவர் அணி நிர்வாகி தி.சேகர், இளைஞர் அணி நிர்வாகிகள் குமராவலசு இளங்கோ, பிடாரியூர் சதீஸ், கொடுமணல் கோபால், நகர இளைஞர் அணி அசோக், ரமேஷ் என்கிற குணசேகரன், மெற்குறி தங்கவேல், அம்மா பாளையம் ஈஸ்வரமூர்த்தி, முகாசி பிடாரியூர் சி.கே. ஆறுமுகம், குமரன் பேரவை விஸ்வநாதன், சிவக்குமார், முருங்கத்தொழுவு மு.சி., துரைசாமி, எக்கட்டாம் பாளையம் அல்லி முருகன், கவுண்டிச்சிபாளையம் முருகேசன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

    சென்னிமலை:

    தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெருந்துறை நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளோடு குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

    மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

    எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×