search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur Kumaran"

    • தேசிய கொடியை கீழேவிடாமல் கையில் பிடித்தபடி இருந்ததால் கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்டார்.
    • 91-வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் குமரன் நினைவகத்தில் சிலைக்கு பள்ளி மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர்:

    ஆங்கிலேயர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி அழைப்பு விடுத்திருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக திருப்பூரில் 1931-ம் ஆண்டு திருப்பூர் குமரன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தேசிய கொடியினை ஏந்தியபடி ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது காவல் துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியதில் குமரன் கீழே விழுந்த போதும் தேசிய கொடியை மண்ணில் விழாமல் பிடித்தபடி இருந்தார். படுகாயம் அடைந்து உயிரிழந்த போதும் தேசிய கொடியை கீழேவிடாமல் கையில் பிடித்தபடி இருந்ததால் அவர் கொடிகாத்த குமரன் என அழைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரனின் 91 -வது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருப்பூர் குமரன் நினைவகத்தில் இன்று காலை முதல் பல்வேறு அரசியல் கட்சியினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    மக்கள் நீதி மய்யம், இந்து மக்கள் கட்சி, நாம் தமிழர், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் என பலர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பள்ளி மாணவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

    • நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும்.
    • திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் : 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என பல்கலைக்கழக செனட் உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் தியாகம் மறக்க முடியா தது. இவரது வாழ்க்கையும், அவரது போராட்ட வழிமுறைகளும், நெஞ்சுறுதியும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கக்கூடியது.

    இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது அவருக்கு செலுத்தும் பெரும் புகழஞ்சலியாக இருக்கும்.

    குறிப்பாக நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும். இதற்காகவே, திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் எழுதிய திருப்பூர் குமரன் நாடக நூல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    இத்துடன் உள்ளூர் வரலாற்றையும், வளர்ச்சியையும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்குஅமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர்மாலை அணிவித்தனர்
    • திருப்பூர்குமரன் வாரிசுதாரர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்நாளை முன்னிட்டு, திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

    இந்த விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    திருப்பூர் குமரன் சென்னிலையில் 4-10-1904-ல் நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி தம்பதியினருக்கு முதல் பிள்ளையாக பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி. குடும்ப சூழ்நிலை காரணமாக 5&ம் வகுப்பிலேயே தனது பள்ளி படிப்பை முடித்துக்கொண்டார். வறுமையின் காரணமாக மேற்கொண்டு பள்ளி படிப்பை தொடர முடியாத காரணத்தினால் தனது குடும்ப தொழிலான கைத்தறி நெசவு செய்து வந்தார். இவர் தனது 19-வது வயதில் ராமாயி என்ற பெண்ணை 1923-ம் ஆண்டு மணந்தார். கைத்தறி தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் ஈரோடு சென்று, பஞ்சு மில்லில் எடை போடும் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார். ஆரம்பம் முதலே காந்தியின் கொள்கையில் ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேலும், 4-1-1932-ல் காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்தது.

    இந்த செய்தி காட்டு தீ போல் பரவியது. காங்கிரஸ் தொண்டர்கள் கொதிதெளுந்தனர். இதனால் கண்டன போராட்டங்கள் நடத்தவும், சட்ட மறுப்பு இயக்கம் நடத்தவும் முடிவு செய்தனர். இதன் தொடர்சியாக தமிழ்நாட்டில் திருப்பூரில் போலீசாரின் தடையை மீறி 10-1-1932-ம் ஆண்டு தியாகி பி.எஸ். சுந்தரம் தலைமையில், நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் முதல் வரிசையில் காங்கிரஸ் கொடியை பிடித்துக்கொண்டு குமரன் வந்தார். வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கோஷம் எழுப்பிய போது, போலீசாரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் உடல், தலையில் பலத்த காயத்துடன், தன் கையில் இருந்த கொடியை தரையில் சாய விடாமல் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்பி நன் நாட்டு பற்றியை பறைசாற்றினார். குமரன் கீழே விழுந்தாலும், அவரது கையில் வைத்திருந்த கொடி தரையில் விழாமல் பிடித்திருந்தார். திருப்பூர் வீதியிலேயே கொடிகாத்த குருதி வெள்ளத்தில் குமரன் வீழ்ந்து கிடந்தார். அடிபட்டு பலத்த காயங்களுடன் இருந்த குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, சுயராஜ்யம் வராதா என இறுதி சொற்களுடன் 11-1-1932-ம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு சென்றார். இதனால் அவர் கொடி காத்த குமரன் என பெயர் பெற்றார்.

    விண்ணில் பறக்கும் கொடி மண்ணில் வீழ்வதா என தன்னுயிர் கொடுத்து நாட்டின் மானம் காத்த பெருமை, இந்திய விடுதலை வரலாற்றில் தனிப்பெருமை வாய்ந்தது. திருப்பூர் குமரன் நினைவாக அவரது திருவுருவத்துடன் கூடிய அஞ்சல் வில்லையை 2007-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டு சிறப்பு செய்தது. திருப்பூர் குமரன் நினைவகம், திருப்பூர் ரெயில் நிலையம் எதிரில் 11,195 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. நினைவு மண்டபம் கட்டிடம் 2500 சதுர அடியில் ரூ4,80,353 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் பின்னர் திருப்பூர் குமரன் வாரிசுதாரர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கவுன்சிலர் திவாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சதீஷ்குமார், வடக்கு தாசில்தார் கனகராஜ் மற்றும் குமரனின் வாரிசுதாரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என சென்னிமலை நகர மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    தற்போது தியாகி குமரனுக்கு நினைவு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கு 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அமைச்சர்கள் பேசியதாவது:

    சென்னிமலையில் பிறந்து திருப்பூரில் 1932-ம் ஆண்டு நடந்த சுதந்திர போரட்டத்தில் பங்கேற்று தேசத்திற்காக தன் இன்னுயிரை துறந்த திருப்பூர் குமரனை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப் பட்டு வருகிறது.

    தொடர்ந்து முதல்- அமைச்சர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத்நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன்சாலை, சம்பத்நகர் என்று பெயர் சூட்டி சிறப்பு சேர்த்துள்ளார். அந்த வகையில் திருப்பூர் குமரனுக்கு மேலும் பெருமைப்படுத்தும் வகையில், சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.செங்கோட்டையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பிரபு, நகர செயலாளர் ராமசாமி, சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ தேவி அசோக், பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், வெங்கமேடு ஈஸ்வரமூர்த்தி,

    முன்னாள் மாணவர் அணி நிர்வாகி தி.சேகர், இளைஞர் அணி நிர்வாகிகள் குமராவலசு இளங்கோ, பிடாரியூர் சதீஸ், கொடுமணல் கோபால், நகர இளைஞர் அணி அசோக், ரமேஷ் என்கிற குணசேகரன், மெற்குறி தங்கவேல், அம்மா பாளையம் ஈஸ்வரமூர்த்தி, முகாசி பிடாரியூர் சி.கே. ஆறுமுகம், குமரன் பேரவை விஸ்வநாதன், சிவக்குமார், முருங்கத்தொழுவு மு.சி., துரைசாமி, எக்கட்டாம் பாளையம் அல்லி முருகன், கவுண்டிச்சிபாளையம் முருகேசன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×