search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharathiar"

    • தமிழ் ஆசிரியை பாரதியாரை புகழ்ந்து கவிதை பாடினார்.
    • மாணவியரின் “அச்சமில்லை” பாடலுக்கான நடனம் இடம் பெற்றிருந்தது.

    திருப்பூர் : 

    திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளியில் மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    விழாவின் தொடக்கமாக 9-ம் வகுப்பு மாணவி வரவேற்புரை வழங்க, தமிழ் ஆசிரியை பாரதியாரை புகழ்ந்து கவிதை பாடினார். பாரதியாரின் சித்திரம் மிக பிரம்மாண்டமாக வரையப்பட்டிருந்தது.

    கலைநிகழ்ச்சிகளாக மாணவ, மாணவியர்களது நடனம், பாரதியார் பற்றிய சிறப்புரை, பாரதியார் வேடம் அணிந்த ஏராளமான மாணவ, மாணவியரின் "அச்சமில்லை" பாடலுக்கான நடனம் இடம் பெற்றிருந்தது.

    விழாவில் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் 9-ம் வகுப்பு மாணவி நன்றி கூறினார்.

    • நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும்.
    • திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் : 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என பல்கலைக்கழக செனட் உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் தியாகம் மறக்க முடியா தது. இவரது வாழ்க்கையும், அவரது போராட்ட வழிமுறைகளும், நெஞ்சுறுதியும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கக்கூடியது.

    இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது அவருக்கு செலுத்தும் பெரும் புகழஞ்சலியாக இருக்கும்.

    குறிப்பாக நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும். இதற்காகவே, திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் எழுதிய திருப்பூர் குமரன் நாடக நூல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    இத்துடன் உள்ளூர் வரலாற்றையும், வளர்ச்சியையும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது சிறுவர்-சிறுமிகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வாசு அரங்கநாதன், அகத்தியன் ஜான் பெனடிக்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவை பிரசாத் பாண்டியன், துரைக்கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூஜெர்சி ஆகிய மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
    ×