search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "univeristy"

    • நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும்.
    • திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    திருப்பூர் : 

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுதந்திர போராட்ட வீரரான திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என பல்கலைக்கழக செனட் உறுப்பினர் டாக்டர் ஆதலையூர் சூரியகுமார் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்பூர் குமரனின் தியாகம் மறக்க முடியா தது. இவரது வாழ்க்கையும், அவரது போராட்ட வழிமுறைகளும், நெஞ்சுறுதியும் இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்கக்கூடியது.

    இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடி கொண்டிருக்கும் இவ்வேளையில் திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவது என்பது அவருக்கு செலுத்தும் பெரும் புகழஞ்சலியாக இருக்கும்.

    குறிப்பாக நாடக வடிவில் படிக்கும் போது, இன்றைய இளைஞர்களுக்கு எளிதில் சென்றடையும். இதற்காகவே, திருப்பூர் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை தலைவர் ஆழ்வை கண்ணன் எழுதிய திருப்பூர் குமரன் நாடக நூல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

    இத்துடன் உள்ளூர் வரலாற்றையும், வளர்ச்சியையும் மாணவர்களுக்கும் எடுத்துக்கூறும் விதமாகவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் 10பேரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைப்பு மையங்கள் இந்த ஆண்டு தொடங்க ஏற்பாடு நடந்து வருகிறது.
    சென்னை:

    சென்னை கடற்கரை சாலையில் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் உள்ளது. இந்த மன்றம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் கல்வியில் தரமேம்பாடு செய்யவும், சிறந்த மாணவர்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள கலாசாரம், கல்வி முதலியவற்றை கற்கவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவும், அனைத்து பல்கலைக்கழகங்களையும் கண்காணித்தும் வருகிறது.

    சென்னை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்து உள்ளன.

    அதன்படி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக தொழிற்சாலை அதிகாரிகள் அடிக்கடி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க பயிற்சி அளிக்கின்றனர்.

    இதற்காக 6 பல்கலைக்கழகங்களிலும் வர்த்தக ஒருங்கிணைப்பு மையங்கள் இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களால் ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இதன் மூலம் ஏராளமான மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்க இந்த மையங்கள் ஏற்பாடு செய்யும். இந்த பல்கலைக்கழங்கள் மேலும் பல புதிய தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் செய்து வருகிறது.
    ×