search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்துக்கணிப்பு"

    • 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.
    • வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

    மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலுடன் நடக்கிறது. இதைப்போல 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.

    இந்த நாட்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதி காலை 7 மணி முதல் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறும் ஜூன் 1-ந்தேதி மாலை 6.30 மணி வரை இந்த கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதைப்போல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    • கடந்த 2019-ல் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற்றது.
    • மகாராஷ்டிராவில் 48-ல் 25 தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் 42-ல் 20 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும்.

    சென்னை:

    2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார் என்றும் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பா.ஜ.க. தலைமையிலான என்டிஏ கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியா கூட்டணிக்கு 98 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

    பிப்ரவரி 5 முதல் 23 வரை 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. கடந்த பாராளுமன்ற தேர்தலைக் காட்டிலும் இப்போது நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் இந்த எண்ணிக்கை 335-ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குஜராத் (26), மத்திய பிரதேசம் (29), ராஜஸ்தான் (25), அரியானா (10), டெல்லி (7), உத்தரகாண்ட் (5), இமாச்சல பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 40 தொகுதிகளில் 17 இடங்களையும், ஜார்க்கண்டில் 14-ல் 12 தொகுதிகளிலும், ஒடிசாவில் 21-ல் 10 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள அசாமில் 14 தொகுதிகளில் 10 இடங்கள் அக்கட்சியின் வசமாகும். மகாராஷ்டிராவில் 48-ல் 25 தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் 42-ல் 20 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 21 இடங்களைப் பெறும் என்று இந்தியா டி.வி-சி.என்.எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை தி.மு.க. முடக்கியது தி.மு.க.விற்கு பாதகமாக பேசப்படுகிறது.
    • மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு எதிராகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் அலை வீசுவதை காட்டுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கொங்கு மண்டலம் எனப்படும் கோவை பகுதி அ.தி.மு.க. வுக்கு செல்வாக்குள்ள பகுதி. ஒவ்வொரு தேர்தலிலும் இது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கோவையில் பா.ஜனதா வென்றது. அதன் பிறகு அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்த பா.ஜனதா கோவை தெற்கு தொகுதியை கைப்பற்றியது.

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி யாருக்கு சாதகமாக இருக் கும் என்று 'நியூஸ் கிளவுட்' என்ற தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது.

    இந்த கருத்துக்கணிப்பில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி முழுக்க ஏழை, நடுத்தரம், பணக்காரர்கள் எனவும், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் எனவும், பல்வேறு சாதியினரிடேயும் மொத்தமாக சேர்த்து 1596 பேரிடம் கருத்து கேட்டு உள்ளார்கள்.

    இதில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. 663 வாக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 593, அ.தி.மு.க. கூட்டணி 194, நாம் தமிழர் கட்சி 89 வாக்குகளை பெற்றுள்ளது.மற்றவை என 57 பேர் வாக்களித்துள்ளனர்.

    இந்த கருத்துகணிப்பின் முடிவு பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. பா.ஜ.க.வின் இந்த அபார வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் போராட்ட குணம், நேர்மை, பண்பு, அவரின் தலைமையில் பா.ஜ.க. என்ற காரணங்கள் ஒரு பக்கம் உள்ளது.

    அதே நேரத்தில் தி.மு.க. சார்பாக கோயம்புத்தூர் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் தி.மு.க.வினரின் ஊழல், கறைபடிந்த கைகள், அடாவடிதனம், ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, வசூல் வேட்டை ஆகியவையும் உள்ளது.

    1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளை விடுதலை செய்வோம் என தி.மு.க., விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேசி வருவதும் கோவை பகுதி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்கள் ஆவேசமடைகின்றனர்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வினரும் தி.மு.க.விற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது போல் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பேசி வருவதும் கோவை பகுதியில் அ.தி.மு.க. செல்வாக்கு சரிவிற்கு மிகமுக்கிய காரணம் ஆகும்.

    மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கோவை மாநகராட்சி வரி பன்மடங்கு உயர்வு, பத்திர பதிவு வரி உயர்வு, மானியங்கள் குறைப்பு, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை தி.மு.க. முடக்கியது ஆகியவையும் தி.மு.க.விற்கு பாதகமாக பேசப்படுகிறது.

    தொடர்ந்து அண்ணாமலையும் தி.மு.க.வின் ஊழல் பட்டியல்களை தி.மு.க. பைல்ஸ் என தொடர்ந்து வெளியிட்டு வருவது பொதுமக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் அனுமர் வால் போல் நீள்கிறது. இது கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு எதிராகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் அலை வீசுவதை காட்டுகிறது.

    அதே சமயத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மக்களோடு மக்களாக, என் மண்-என் மக்கள் நடைபயணத்தை மேற் கொண்டதும் கோயம்புத்தூர் மக்கள் மனதில் பா.ஜ.க.வின் தாக்கம் அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.

    மேலும் கேரளா கம்யூனிஸ்ட் அரசு கோவைக்கு தர வேண்டிய சிறுவாணி ஆற்று தண்ணீரை தர மறுப்பதும், அதை கோவை கம்யூனிஸ்ட் எம்.பி. கேட்க மறுத்து, வாய் மூடி மவுனம் காப்பதும், தி.மு.க. கூட்டணியான கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பதையும் கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டி உள்ளது.

    கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானம் ஏற்படுத்தியது, கோவை-சென்னை, கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு கொடுத்தது, கோவை இ.எஸ்.ஐ. மருத்து வமனையை மருத்துவ கல்லூரியாக மத்திய அரசு தரம் உயர்த்தியது என கோயம்புத்தூரை மையப்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு திட்டங்களை அறிவித்ததும் கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் பா.ஜ.க. வின் செல்வாக்கு உயர காரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

    ×