search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polls"

    • அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை தி.மு.க. முடக்கியது தி.மு.க.விற்கு பாதகமாக பேசப்படுகிறது.
    • மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு எதிராகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் அலை வீசுவதை காட்டுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கொங்கு மண்டலம் எனப்படும் கோவை பகுதி அ.தி.மு.க. வுக்கு செல்வாக்குள்ள பகுதி. ஒவ்வொரு தேர்தலிலும் இது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கோவையில் பா.ஜனதா வென்றது. அதன் பிறகு அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறவில்லை.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலை சந்தித்த பா.ஜனதா கோவை தெற்கு தொகுதியை கைப்பற்றியது.

    வருகிற பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதி யாருக்கு சாதகமாக இருக் கும் என்று 'நியூஸ் கிளவுட்' என்ற தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது.

    இந்த கருத்துக்கணிப்பில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி முழுக்க ஏழை, நடுத்தரம், பணக்காரர்கள் எனவும், பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் எனவும், பல்வேறு சாதியினரிடேயும் மொத்தமாக சேர்த்து 1596 பேரிடம் கருத்து கேட்டு உள்ளார்கள்.

    இதில் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் தி.மு.க. கூட்டணியை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. 663 வாக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. தி.மு.க. கூட்டணி 593, அ.தி.மு.க. கூட்டணி 194, நாம் தமிழர் கட்சி 89 வாக்குகளை பெற்றுள்ளது.மற்றவை என 57 பேர் வாக்களித்துள்ளனர்.

    இந்த கருத்துகணிப்பின் முடிவு பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. பா.ஜ.க.வின் இந்த அபார வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் போராட்ட குணம், நேர்மை, பண்பு, அவரின் தலைமையில் பா.ஜ.க. என்ற காரணங்கள் ஒரு பக்கம் உள்ளது.

    அதே நேரத்தில் தி.மு.க. சார்பாக கோயம்புத்தூர் பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மற்றும் தி.மு.க.வினரின் ஊழல், கறைபடிந்த கைகள், அடாவடிதனம், ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, வசூல் வேட்டை ஆகியவையும் உள்ளது.

    1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளை விடுதலை செய்வோம் என தி.மு.க., விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேசி வருவதும் கோவை பகுதி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்கள் ஆவேசமடைகின்றனர்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வினரும் தி.மு.க.விற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது போல் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பேசி வருவதும் கோவை பகுதியில் அ.தி.மு.க. செல்வாக்கு சரிவிற்கு மிகமுக்கிய காரணம் ஆகும்.

    மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கோவை மாநகராட்சி வரி பன்மடங்கு உயர்வு, பத்திர பதிவு வரி உயர்வு, மானியங்கள் குறைப்பு, அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை தி.மு.க. முடக்கியது ஆகியவையும் தி.மு.க.விற்கு பாதகமாக பேசப்படுகிறது.

    தொடர்ந்து அண்ணாமலையும் தி.மு.க.வின் ஊழல் பட்டியல்களை தி.மு.க. பைல்ஸ் என தொடர்ந்து வெளியிட்டு வருவது பொதுமக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் அனுமர் வால் போல் நீள்கிறது. இது கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் தி.மு.க.விற்கு எதிராகவும், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் அலை வீசுவதை காட்டுகிறது.

    அதே சமயத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மக்களோடு மக்களாக, என் மண்-என் மக்கள் நடைபயணத்தை மேற் கொண்டதும் கோயம்புத்தூர் மக்கள் மனதில் பா.ஜ.க.வின் தாக்கம் அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது.

    மேலும் கேரளா கம்யூனிஸ்ட் அரசு கோவைக்கு தர வேண்டிய சிறுவாணி ஆற்று தண்ணீரை தர மறுப்பதும், அதை கோவை கம்யூனிஸ்ட் எம்.பி. கேட்க மறுத்து, வாய் மூடி மவுனம் காப்பதும், தி.மு.க. கூட்டணியான கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பதையும் கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டி உள்ளது.

    கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானம் ஏற்படுத்தியது, கோவை-சென்னை, கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு கொடுத்தது, கோவை இ.எஸ்.ஐ. மருத்து வமனையை மருத்துவ கல்லூரியாக மத்திய அரசு தரம் உயர்த்தியது என கோயம்புத்தூரை மையப்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு திட்டங்களை அறிவித்ததும் கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் பா.ஜ.க. வின் செல்வாக்கு உயர காரணமாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

    பாராளுமன்றத்துக்கு 4-ம் கட்டமாக 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #LokSabhaElection #4thPhase #BJP #Congress
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்ற தேர்தல், பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தள்ள நிலையில் இன்று (திங்கட்கிழமை) 9 மாநிலங்களில் 72 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இந்த வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து தீர்மானிக்கின்றனர்.

    இன்று தேர்தலை சந்திக்கிற பீகாரின் 5, ஜார்கண்டின் 3, மத்திய பிரதேசத்தின் 6, மராட்டியத்தின் 17, ஒடிசாவின் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலா 13, மேற்கு வங்காளத்தின் 8, காஷ்மீரின் 1 (அனந்தநாக் தொகுதியில் குல்காம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மட்டும்) தொகுதிகளில் மாநில போலீஸ் படையினரும், மத்திய துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பதற்றமான இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் 42 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

    4-வது கட்ட பாராளுமன்ற தேர்தலில் மராட்டியம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 3 பெரிய மாநிலங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    மராட்டிய மாநிலத்தில் மும்பை மாநகரில் உள்ள 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.

    மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் உள்ள நடிகை ஊர்மிளாவுக்கும், பா.ஜனதா கட்சி வேட்பாளர் கோபால் ஷெட்டிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வட மத்தி மும்பையில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரி பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனுக்கும்(பா.ஜனதா), மற்றொரு மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுனில் தத்தின் மகள் பிரியா தத்துக்கும் (காங்கிரஸ்) இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவில் போட்டி அமைந்துள்ளது.

    மத்திய பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், முதல்-மந்திரி கமல்நாத் 9 முறை வென்ற சிந்த்வாரா நாடாளுமன்ற தொகுதியில் அவரது மகன் நகுல் காத் (காங்கிரஸ்) போட்டியிடுகிறார்.

    முதல்-மந்திரி பதவியை தக்கவைப்பதற்காக கமல்நாத், சிந்த்வாரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். தந்தையும், மகனும் ஒரே நாளில் ஒரே தொகுதியில் தேர்தலை சந்திக்கின்றனர் என்பது முக்கிய அம்சம்.

    பீகாரில் பெகுசாராய் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. இங்கு பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி கிரிராஜ்சிங்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரும் மோதுகின்றனர். இதே மாநிலத்தின் தர்பங்கா தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்றவர்.

    மேற்கு வங்காளத்தில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவும் (பாரதீய ஜனதா கட்சி), நடிகை மூன்மூன்சென்னும் (திரிணாமுல் காங்கிரஸ்) அசன்சோல் தொகுதியில் கடும் போட்டியில் உள்ளனர்.

    இந்த 4-வது கட்ட தேர்தலுக்காக தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா (பா.ஜனதா), தேவேந்திர பட்னாவிஸ் (பா.ஜனதா), ராகுல் காந்தி (காங்கிரஸ்), பிரியங்கா (காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மாயாவதி (பகுஜன் சமாஜ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), நவீன் பட்நாயக் (பிஜூஜனதாதளம்), உத்தவ் தாக்கரே (சிவசேனா) உள்ளிட்டவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டினர்.

    நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்தது.

    இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு முடிகிறது.

    இன்று ஓட்டுப்பதிவு நடக்கிற 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 தேர்தலில் கைப்பற்றி இருந்தது. இதைத் தக்க வைத்தாக வேண்டிய நெருக்கடி, அந்த கட்சிக்கு உள்ளது.

    பீகார், ஜார்கண்ட், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய ஏழு மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5-வது கட்ட தேர்தல் மே மாதம் 6-ந் தேதி நடக்கிறது.   #LokSabhaElection #4thPhase #BJP #Congress
    பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிளுக்கு தேவையான 38 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நாளன்று அலுவலர்கள் பயன்படுத்த தேவையான வாக்காளர் பட்டியல், பூத் சிலீப், பேனா, பென்சில், வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை மறைக்க பயன்படுத்தக்கூடிய அட்டைகள், அதனை சீல் வைக்க பயன்படுத்தப்படும் துணிகள், மெழுகுவர்த்திகள், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட 38 வகையான பொருட்கள் தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பிரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். 
    தற்போது அந்த 38 வகையான பொருட்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனி பையில் போடப்பட்டு, வாக்குச்சாவடிக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) மேற்கண்ட 38 வகையான பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளில் தேர்தல் அன்று பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டப்பட்டும், வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் தனி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
    மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் 40 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    மதுரை:

    வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் மேலூர் சுங்கச்சாவடியில் நேற்று வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது.


    இதேபோல் திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1¼ கோடி பறமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை வாடிப்பட்டியில் 40 கிலோ தங்க நகைகளுடன் வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சமயநல்லூர் பகுதியில் கைப்பற்றினர். அவை எங்கிருந்து வருகிறது? யாருக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.  #Parliamentelection #LSPolls

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #AssemblyElections #Congress #BJP
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு வருகிற 12-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு எடுத்து வருகின்றன.

    இந்த வார தொடக்கத்தில் வாக்காளர்களிடம் சி.ஓட்டர் எடுத்த கருத்து கணிப்பின்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் 150, பா.ஜனதா 45 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. மொத்த தொகுதிகள் 200.

    230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 116 தொகுதிகளையும், பா.ஜனதா 107 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 64 தொகுதிகளும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 50-க்கும் குறைவான தொகுதிகளுமே கிடைக்கும் எனவும் சி-ஓட்டர் கூறுகிறது. மொத்த தொகுதிகள் 119.

    சத்தீஷ்காரில் பா.ஜனதா 43 தொகுதிகளையும், காங்கிரஸ் 41 இடங்களையும், இதர கட்சிகள் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது. மொத்த இடங்கள் 90.

    இதேபோல் 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரமில், மிசோ தேசிய முன்னணிக்கு 17, காங்கிரசுக்கு 12, சோரம் மக்கள் இயக்கத்துக்கு 9 இடங்கள் கிடைக்கும் என சி-ஓட்டர் கூறுகிறது.

    அதேநேரம் சி.என்.எக்ஸ். நிறுவனம் டைம்ஸ் நவ் டி.வி.க்காக எடுத்த கருத்து கணிப்பில் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 115 இடங்களும், பா.ஜனதாவுக்கு 75 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

    இதே நிறுவனம் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 122 இடங்களையும், காங்கிரஸ் 95 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளது.

    சத்தீஷ்காரில் பா.ஜனதாவுக்கு 50 இடங்களும், காங்கிரசுக்கு 30 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 10 இடங்களும் கிடைக்கும் என்று சி.என்.எக்ஸ். கருத்து கணிப்பு கூறுகிறது.
    தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த இப்போதுள்ள சட்டங்கள் போதாது என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார். #ChiefElectionCommissioner #OPRawat
    புதுடெல்லி:

    டெல்லியில் ‘இந்திய தேர்தல் ஜனநாயகத்துக்கு உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகம், யதார்த்தத்தில் இயங்காது. ஜனநாயகத்துக்கு என்று ஒரு துணிச்சல், தன்மை, நேர்மை, அறிவு தேவைப்படுகிறது. அவைகளெல்லாம் இப்போது மங்கிப்போய் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதானால், அவையெல்லாம் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

    தூய்மையான தேர்தல்கள், தலைமைக்கு சட்டப்பூர்வமான வசந்தம் போல் இருக்கும்.

    தேர்தல்கள் மாசுபட்டால், நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் மீதும் குறை கூறுவார்கள். எனவே இது கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.

    போலிச்செய்திகள் வெளியாவதும், மக்களை நம்ப வைப்பது பெருகி வருவதும், தகவல்கள் திருட்டு நடைபெறுவதும், லாபம் பார்ப்பதும், தகவல் தொடர்பை குறிவைத்து செயல்படுதலும் நடக்கின்றன.

    நமது நாட்டைப் பொறுத்தமட்டில் சைபர் பாதுகாப்பு (இணைய பாதுகாப்பு), தகவல் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதை தேர்தல் கமிஷன் உணர்ந்து இருக்கிறது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்று சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். (கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்பது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் உபயோகிப்பாளர்களின் தகவல்களை திருடி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம் ஆகும்.)

    தேர்தல்களில் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி பேசப்படுகிறது. தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை உறுதி செய்வதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது. எனவேதான் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது இப்போது சாத்தியம் இல்லை.

    இந்தியாவில் இப்போது தேர்தல்களில் பணம் ஆதிக்கம் செலுத்துவது என்பது கவலை அளிக்கிற பிரச்சினையாக உள்ளது. பிரசாரத்துக்கு பணம் செலவு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    ஆனால் இவை தொடர்பாக இப்போதுள்ள சட்டங்கள், இந்த விவகாரங்களை கவனிப்பதற்கு போதுமானவை அல்ல.

    எனவேதான் இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி வந்து உள்ளது.

    செய்தி ஊடகங்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல், போலி செய்திகள் நடமாட்டத்தை குறைத்தல், பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுதல் ஆகியவை குறித்தும் கவனிக்க வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் ஆராய்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களை நிர்வகிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ChiefElectionCommissioner #OPRawat
    ×