search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்
    X

    பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்

    பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிளுக்கு தேவையான 38 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நாளன்று அலுவலர்கள் பயன்படுத்த தேவையான வாக்காளர் பட்டியல், பூத் சிலீப், பேனா, பென்சில், வாக்குப்பதிவு எந்திரம், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரத்தை மறைக்க பயன்படுத்தக்கூடிய அட்டைகள், அதனை சீல் வைக்க பயன்படுத்தப்படும் துணிகள், மெழுகுவர்த்திகள், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அடையாள மை உள்ளிட்ட 38 வகையான பொருட்கள் தேர்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பிரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். 
    தற்போது அந்த 38 வகையான பொருட்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனி பையில் போடப்பட்டு, வாக்குச்சாவடிக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) மேற்கண்ட 38 வகையான பொருட்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளில் தேர்தல் அன்று பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டப்பட்டும், வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் தனி அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
    Next Story
    ×