search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர்"

    • தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
    • தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிருமாம் பாக்கத்தில் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    கிருமாம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் அந்த பகுதியிலிருந்த தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் 2 பேர் டாக்டர்கள் என்பது தெரியவந்தது.

    சென்னையை சேர்ந்த பல் டாக்டர் குற்றாலீஸ்வரன்(29), புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்(26) மற்றும் கடலூர் மாவட்டம் அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ரவிக்குமார்(29) என தெரியவந்தது.

    ரவிக்குமார் ரெட்டிச் சாவடியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது டாக்டர்கள் குற்றாலீஸ்வரனும் கார்த்திகேயனும் டீ கடைக்கு வரும்போது அவர்களுடன் என்ஜினீயர் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள் முதலில் ஆரோவில் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அதன்பிறகு தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரி விக்னேசிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • கடந்த மாதம் 17-ந் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
    • அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மூடக்கப்பட்டுவிட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் சையது சலாம் (வயது 36). இவர், வெளிநாட்டில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 3 மாதங்களாக புதுச்சேரியில் தங்கியிருந்தார். அப்போது இணைய வழி மோசடிக்காரர்கள் அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு, நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அன்றைய தினமே உங்களுக்கு 30 சதவீத லாபம் கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.

    இதனை நம்பிய அவர், கடந்த மாதம் 17-ந் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்தவுடன் அவர்கள் சில யூடியூப் லிங்க்குகளை அனுப்பி அதில் அவரை சப்ஸ்கிரைப் செய்ய கூறியுள்ளனர்.

    அவர் செய்து முடித்தவுடன் ரூ.300 சேர்த்து ரூ.1,300 அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.

    அன்றைய தினமே மீண்டும் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தார். அவர்கள் சொன்ன டாஸ்கை முடித்தவுடன் ரூ.1,800 சேர்த்து ரூ.7.800 அவரது வங்கிக்கு வந்தது. அதன் கும்பல் அவரிடம், நீங்கள் எங்களுடைய பிரிமியம் கஸ்டமர் ஆகி விட்டதால் உங்களுடைய வங்கி கணக்கு இனி உங்கள் கம்ப்யூட்டரிலேயே தெரியும் எனவும், பணம் நேரடியாக உங்களுக்கு வராது என்றும் கூறியுள்ளனர்.

    இதனை நம்பி கடந்த 15 நாட்களில் மட்டும் ரூ.38 லட்சத்தை இணைய வழி மோசடிக்காரர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

    அதன்பின், அவரது வங்கிக்கணக்கில் ரூ.52 லட்சம் பணம் இருப்பதாககாட்டியுள்ளது. மேலும், ஒரு இணையதளத்திலும் அவரை முதலீடு செய்யக்கூறினர். இறுதியாக, மேற்படி பணத்தை சையது சலாம் எடுக்க முயன்றார்.

    அப்போது, அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என காட்டியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    மேலும், மோசடிக்காரர்களையும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தொடர்பு கொண்ட அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மூடக்கப்பட்டுவிட்டது.

    இதனையடுத்து சலாம், புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மாமியார் அளித்த புகாரால் விசாரணைக்காக ராஜசேகர் போலீஸ் நிலையத்தில் இருந்தார்.
    • ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். சினிமா புரொடக்சனில் வேவை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் புவனேஸ்வரி. புவனேஸ்வரிக்கும் மதுரையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜசேகருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி கணவர் ராஜசேகரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். ஒன்றாக இருந்தபோது வங்கியில் பணம் கடன் வாங்கியது தொடர்பாக புவனேஸ்வரியிடம் கேட்பதற்காக நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக பானுமதி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    மாமியார் அளித்த புகாரால் விசாரணைக்காக ராஜசேகர் போலீஸ் நிலையத்தில் இருந்தார். அப்போது திடீரென அவர் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் ஏற்கனவே வயாகரா உள்ளிட்ட 10 மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளதாகவும் அவர் போலீசிடம் கூறினார்.

    இதையடுத்து ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாமியார் புகாரால் கைதாகாமல் இருக்க அவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    இதற்கிடையில் ராஜசேகர் மீது தகாத வார்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • தொடர்ந்து மிரட்டிய புகாரில் போலீசார் கைது செய்தனர்
    • மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில் :

    முகநூலில் பெண்கள் படத்தை பதிவிட்டால், சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். எனவே படத்தை பதிவிடாதீர்கள் என பலமுறை போலீசார் எச்சரித்தாலும் அதனை கேட்காத சிலர் முகநூலில் படத்தை வெளியிட்டு வம்பில் சிக்குவது தொடர் கதையாகவே உள்ளது.

    மேலும் அவர்கள் பணத்தையும் இழந்து வருவது தான் வேதனையான விஷயம். இளம்பெண்கள் மட்டுமல்லாமல் 60 வயதான மூதாட்டி ஒருவரும் இந்தப் பிரச்சினையில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். அவரிடம் குமரி மாவட்ட வாலிபர் பணத்தை பறித்த நிலையில், தற்போது போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 30), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவருக்கு முகநூல் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே உள்ள கொடிப்பாடி புத்தூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பழக்கமானார். நாளடைவில் அருள் பேச்சை நம்பி, தனது போட்டோக்களை அந்த மூதாட்டி பகிர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் மூதாட்டியிடம் போனில் பேசிய அருள், உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போகி றேன் என்று கூறி உள்ளார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அப்படி செய்ய வேண்டாம் என்று அருளிடம் கூறி உள்ளார்,

    இதனை அருள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி மூதாட்டியிடம் இருந்து பணம் பறித்துள்ளார். கூகுள் பே மூலம் ரூ.12 ஆயிரம் பெற்ற அவர், கூடுதலாக ரூ.50 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். பணம் தராவிட்டால், மார்பிங் படத்தை உங்கள் கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரூ புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்மைக்கு களங்கம் விளைவித்தது, பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து கர்நாடக போலீசார் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அவர்கள், இரணியல் போலீசார் உதவியுடன் நெய்யூர் சென்று என்ஜினீயர் அருளை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக பெங்களூரூ அழைத்துச் சென்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு ஒரத்தநாட்டில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.
    • ரூ. 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை யாகப்பாசாவடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை பூட்டி விட்டு ஒரத்தநாட்டில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் மனோகரன் மாமனார் மற்றும் மாமியார் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது அறையில் வைக்கப்பட்டி ருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டது தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார்.
    • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமராக்ஷன். இவரது மகன் அசோக், மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி அபிலாஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அசோக் படித்து முடித்ததும் இங்கிலாந்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது விமானிக்கான பயிற்சி எடுத்து கொண்டார். பின்னர் பிரிட்டிஷ் சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்றார்.

    அதன்பின்பு அசோக்குக்கு சொந்தமாக விமானம் தயாரிக்க ஆசை ஏற்பட்டது. கொரோனா லாக்-டவுன் காலத்தில் விமானம் தயாரிக்கும் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்.

    இதற்காக பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுரைகளை படித்து விமானம் தயாரிப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். தொடர்ந்து அதனை தயாரிக்கும் பணியை தொடங்கினார்.

    அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார். இதற்கு ஒரு கோடியே 26 லட்சம் செலவானது. விமான தயாரிப்பு முடிந்ததும் அதனை முறையான அனுமதி பெற்று ஓட்டி பார்த்தார். அதிலும் வெற்றி கிடைக்க அந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்தார்.

    இதையடுத்து அந்த விமானத்திற்கு தனது மகள் தியாவின் பெயரை சூட்டினார். பின்னர் அசோக் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓய்வு நாட்களில் உலகம் சுற்ற தொடங்கினார். சொந்த காரில் சுற்றுலா செல்வது போல சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் பறக்க தொடங்கினார்.

    ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார். இதனை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

    பெரும் தொழில் அதிபர்கள் மட்டுமே சொந்தமாக விமானம் வைத்துள்ள நிலையில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் சொந்தமாக அவரே விமானம் தயாரித்து அதில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

    • இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த என்ஜினீயரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பட்டதாரியான இவர் பல இணைய தளங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சுவேதா கார்த்திக். பட்டதாரியான இவர் படிப்புக்கேற்ற வேலை தேடி வந்துள்ளார். அதற்காக பல இணையதளங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.

    இந்த நிலையில் மங்கம் மாள்பாளையத்ைத சேர்ந்த பாலமுருகன் என்பவர் சுவேதாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாகவும், தன்னால் வெளிநாட்டில் வேலை வாங்கி தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் தனது போட்ேடா அடையாள அட்டை உள்ளிட்டஆவணங்களை செல்போனில் அனுப்பி உள்ளார். அைத பார்த்து நம்பிய சுவேதா அவரிடம் வேலை தொடர்பாக விவரம் கேட்டுள்ளார்.

    அப்போது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சிங்கப்பூர் கிளையில் பணி வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பணியை பெற ரூ.2 லட்சம் செலவாகும் என்றும் கூறி உள்ளார்.

    இதையடுத்து 2 தவணைகளில் ரூ.2 லட்சத்தை பாலமுருகனின் வங்கி கணக்குக்கு சுவேதா வுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேலைக்கான பணி ஆணையை பால முருகன் அனுப்பி வைத்து உள்ளார்.

    அதில் பணி மற்றும் சம்பள விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுகுறித்து பால முருகனிடம் சுவேதா விவரம் கேட்டார். அப்போது மேலும் ரூ.2 லட்சம் தேவைப்படும் என்றும், பணத்தை செலுத்திய பின்பு நிறுவனத்தில் இருந்து முறையான அழைப்பு வரும் என்று பாலமுருகன் கூறியுள்ளார். பணி ஆைண வந்து விட்டதால் வேலை உறுதி என நம்பிய சுவேதா மீண்டும் ரூ.2 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.

    ஆனால் நிறுவனத்தில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுவேதா அது தொடர்பாக பாலமுரு கனை தொடர்பு கொண்டார். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசி உள்ளார். அதன் மூலம் பாலமுருகன் தன்னை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார் என்பது சுவேதாவுக்கு தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைவாங்கி தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த பாலமுருகனை தேடி வருகின்றனர்.

    • என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கட்டுமான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளி யங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவ ருடைய மகன் ஹரிஷ் குமார் (வயது 15). விருது நகரில் உள்ள ஒரு பள்ளி யில் 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்கு செல்ல இருந்தார்.

    அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருைடய மகன் ரவிசெல்வம் (17). இவர் நரிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார்.

    தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஹரீஷ்குமாரும், ரவி செல்வமும், திருச்சுழி மேலேந்தல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரி கட்டு மான பணிக்கு நேற்று சென்றிருந்ததாக கூறப்படு கிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஹரீஷ்குமார், ரவி செல்வம் பரிதாபமாக இறந்தனர். இவர்களது உடல் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்கள் உடலை உற வினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களின் உறவினர்கள் நரிக்குடி போலீசில் புகார் செய்தனர். அதனடிப்படையில் கட்டிட என்ஜினீயர் நெல்லையை சேர்ந்த ஜெயசீலன் ராஜா (29), மேற்பார்வையாளர் கட்டனூரை சேர்ந்த பால்சாமி மற்றும் பரமக்குடியை சேர்ந்த விஜயராகவன் ஆகிய 3 பேைர போலீசார் கைது செய்தனர்.

    • பரிசோதித்த டாக்டர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்
    • இந்த ஆண்டு இதுவரை 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது

    நாகர்கோவில் :

    திருவட்டார் அருகே மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் லைலா (வயது 47).

    இவர், வீட்டில் காயங்களு டன் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் காயங்களுடன் கிடந்த லைலா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த லைலா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசார் மூவாற்று முகத்தை சேர்ந்த எட்வின் (28) டிப்ளமோ என்ஜினீயரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட எட்வின் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டி ருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கொலை வழக்கில் கைது செய் யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த எட்வினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார். இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த எட்வினை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்த னர்.

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்கள், கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மதுரையில் ரெயில்வே என்ஜினீயரிடம் வழிப்பறி செய்ா 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். மதுரை ெரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரேம்குமார் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தகராறு செய்தனர். அப்போது அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்தது.

    மேலும் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பிரேம்குமார் வேறு வழியின்றி அவர்களிடம் ஆயிரம் ரூபாயை ெகாடுத்தார். அதை வாங்கி கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசில் பிரேம் குமார் புகார் கொடுத்தார். இந்த புகார் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் கவனத்திற்கு சென்றது. இதில் தொடர் புடைய குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    அதன்படி மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆகியோர் மேற்பார்வையில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பிரேம்குமாரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் வழிப்பறி செய்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் முல்லை நகருக்கு சென்றனர். அங்கு நேருஜி தெருவில் பதுங்கி இருந்த 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முல்லை நகர், நேருஜி தெரு, சண்முக சுந்தரம் மகன் தினேஷ் குமார் என்ற மாணிக்கம் (22), அவரது சகோதரர் கணேசன் (24), செக்கானூ ரணி செந்தில்குமார் மகன் சந்துரு (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    • கேரளாவை சேர்ந்த பலர் குழந்தைகளுக்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது.
    • தனிப்படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களையும் சிலர் பரப்பி வந்தனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

    இதில் கேரளாவை சேர்ந்த பலர் குழந்தைகளுக்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணைய தளத்தில் வெளியிட்டது, அவற்றை பலருக்கும் பகிர்ந்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடிவந்தனர். இதற்காக ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 12 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மெமரி கார்டுகள், செல்போன்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.

    மத்திய அரசின் என்ஜினீயர், விஞ்ஞானி உள்பட 4 தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.

    சேலம்:

    என்ஜினீயரிங் பணி தேர்வு-2022, ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி தேர்வு- 2022, இந்திய பொருளாதார பணி தேர்வு- 2022, இந்திய புள்ளியியல் பணி தேர்வு- 2022 ஆகியவற்றுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து சமீபத்தில் முதல்நிலை தேர்வு சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இதனை தொடர்ந்து முதன்மை (மெயின்) தேர்வுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி என்ஜினீயரிங் பணி முதன்மை தேர்வு வருகிற 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2 ஷிப்டுகளாக நடைபெற உள்ளது. முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், 2-வது ஷிப்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இதேபோல் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி முதன்மை தேர்வு, இந்திய பொருளாதார பணி தேர்வு, இந்திய புள்ளியியல் பணி தேர்வு ஆகியவையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் கடந்த 6-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடைசி நாளான 26-ம் தேதி மாலை 4 மணிக்கு பிறகு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாது.

    தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, புகைப்படம் உள்ளிட்டவைகள் தேர்வு எழுத வரும்போது கொண்டு வர வேண்டும் என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    ×