search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயாகரா மாத்திரை"

    • மாமியார் அளித்த புகாரால் விசாரணைக்காக ராஜசேகர் போலீஸ் நிலையத்தில் இருந்தார்.
    • ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். சினிமா புரொடக்சனில் வேவை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி. இவர்களது மகள் புவனேஸ்வரி. புவனேஸ்வரிக்கும் மதுரையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜசேகருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக புவனேஸ்வரி கணவர் ராஜசேகரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். ஒன்றாக இருந்தபோது வங்கியில் பணம் கடன் வாங்கியது தொடர்பாக புவனேஸ்வரியிடம் கேட்பதற்காக நேற்று முன்தினம் இரவு ராஜசேகர் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக பானுமதி விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    மாமியார் அளித்த புகாரால் விசாரணைக்காக ராஜசேகர் போலீஸ் நிலையத்தில் இருந்தார். அப்போது திடீரென அவர் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் ஏற்கனவே வயாகரா உள்ளிட்ட 10 மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளதாகவும் அவர் போலீசிடம் கூறினார்.

    இதையடுத்து ராஜசேகரை உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாமியார் புகாரால் கைதாகாமல் இருக்க அவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    இதற்கிடையில் ராஜசேகர் மீது தகாத வார்த்தைகளால் பேசியது, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    ×