search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே பெண்ணை கற்பழித்து கொன்ற என்ஜினீயர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    திருவட்டார் அருகே பெண்ணை கற்பழித்து கொன்ற என்ஜினீயர் குண்டர் சட்டத்தில் கைது

    • பரிசோதித்த டாக்டர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்
    • இந்த ஆண்டு இதுவரை 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது

    நாகர்கோவில் :

    திருவட்டார் அருகே மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் லைலா (வயது 47).

    இவர், வீட்டில் காயங்களு டன் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் காயங்களுடன் கிடந்த லைலா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த லைலா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசார் மூவாற்று முகத்தை சேர்ந்த எட்வின் (28) டிப்ளமோ என்ஜினீயரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட எட்வின் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டி ருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து கொலை வழக்கில் கைது செய் யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த எட்வினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டார். இதையடுத்து நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த எட்வினை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்த னர்.

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்கள், கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×