search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசின்  என்ஜினீயர், விஞ்ஞானி உள்பட  4 தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
    X

    மத்திய அரசின் என்ஜினீயர், விஞ்ஞானி உள்பட 4 தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

    மத்திய அரசின் என்ஜினீயர், விஞ்ஞானி உள்பட 4 தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.

    சேலம்:

    என்ஜினீயரிங் பணி தேர்வு-2022, ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி தேர்வு- 2022, இந்திய பொருளாதார பணி தேர்வு- 2022, இந்திய புள்ளியியல் பணி தேர்வு- 2022 ஆகியவற்றுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி. வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து சமீபத்தில் முதல்நிலை தேர்வு சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இதனை தொடர்ந்து முதன்மை (மெயின்) தேர்வுக்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி என்ஜினீயரிங் பணி முதன்மை தேர்வு வருகிற 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 2 ஷிப்டுகளாக நடைபெற உள்ளது. முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், 2-வது ஷிப்டு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறுகிறது.

    இதேபோல் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி முதன்மை தேர்வு, இந்திய பொருளாதார பணி தேர்வு, இந்திய புள்ளியியல் பணி தேர்வு ஆகியவையும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் கடந்த 6-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் தங்களுடைய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடைசி நாளான 26-ம் தேதி மாலை 4 மணிக்கு பிறகு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாது.

    தேர்வர்கள் ஹால்டிக்கெட்டுடன் மத்திய அல்லது மாநில அரசு அங்கீகரித்துள்ள புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, புகைப்படம் உள்ளிட்டவைகள் தேர்வு எழுத வரும்போது கொண்டு வர வேண்டும் என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    Next Story
    ×