search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கிரிக்கெட் 2019"

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. #IPL2019 #SRHvsRR #IPL2019 #SRHvsRR

    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டோன், ஆஷ்டன் டர்னர் இடம் பிடித்தனர். ஐதராபாத் அணியில் ஜானி பேர்ஸ்டோ தாயகம் திரும்பி விட்டதால் விக்கெட் கீப்பர் இடத்திற்கு விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டார்.

    ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன் 13 ரன்னில், சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

    இதன் பின்னர் டேவிட் வார்னரும், மனிஷ் பாண்டேவும் இணைந்து சரிவை தடுத்தனர். ஆனால் வார்னர் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக ஆடினார். 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்ற போதிலும் அவர் பந்தை ஒரு முறை கூட எல்லைக்கோட்டிற்கு விரட்ட முடியாமல் தவித்தது ஆச்சரியம் அளித்தது. அதே சமயம் பாண்டே வேகம் காட்டினார். 11.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இவர்கள் ஆடிய விதம் அந்த அணி 180 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும், நிலைமை தலைகீழாக மாறியது.




    டேவிட் வார்னர் 37 ரன்களில் (32 பந்து) கேட்ச் ஆனார். மனிஷ் பாண்டே 61 ரன்களில் (36 பந்து, 9 பவுண்டரி) வெளியேறினார். விஜய் சங்கர் (8 ரன்), தீபக் ஹூடா (0), விருத்திமான் சஹா (5 ரன்), ஷகிப் அல்-ஹசன் (9 ரன்) உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்கவில்லை. எப்படியோ கடைசி ஓவரில் ரஷித்கான் (17 ரன், நாட்-அவுட்) பவுண்டரி, சிக்சர் அடித்து அணி 150 ரன்களை கடப்பதற்கு உதவினார்.

    20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் வருண் ஆரோன், ஒஷானே தாமஸ், ஸ்ரேயாஸ் கோபால், உனட்கட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும், லிவிங்ஸ்டோனும் (இங்கிலாந்து நாட்டவர்) அட்டகாசமான தொடக்கத்தை தந்தனர். ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவருக்குள் 60 ரன்களை திரட்டினர். ரன்மழை பொழிந்து ரசிகர்களை குதூகலப்படுத்திய லிவிங்ஸ்டோன் 44 ரன்களில் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ரஹானே 39 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த கேப்டன் சுமித் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.



    ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டர்னர் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தானுக்கு இது 5-வது வெற்றியாகும். ஏற்கனவே ஐதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. 11-வது லீக்கில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 6-வது தோல்வியாகும். #IPL2019 #SRHvsRR

    ஐபிஎல் போட்டியில் இன்று நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். #KKRvsRR #IPL2019
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் 43-வது ‘லீக்‘ ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா அணி 4 வெற்றி 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

    கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றது. தோல்வியில் இருந்து மீண்டு 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் அந்த அணி உள்ளது.

    கேப்டன் தினேஷ் கார்த்திக், உத்தப்பா ஆகியோரது ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் நிலையில் தினேஷ் கார்த்திக் உள்ளார்.

    ஆந்த்ரே ரஸ்சலின் அதிரடி ஆட்டத்தை மட்டுமே அந்த அணி நம்பி இருக்கிறது. பந்து வீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஏற்கனவே ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் கொல்கத்தா அணி நம்பிக்கையுடன் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வென்றால் தான் அந்த அணி தொடர்ந்து வாய்ப்பில் இருக்கும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். ராஜஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையில் உள்ளது. #KKRvsRR #IPL2019
    வேடிக்கையாக விளையாடிதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #KXIP #RCB #ViratKohli
    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாபை மீண்டும் வீழ்த்தியது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 34 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் படேல் 24 பந்தில் 43 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சமி, விஜோயன்ஸ், கேப்டன் அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது.

    நிக்கோலஸ் பூரன் 28 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ராகுல் 27 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஸ்டோன்ஸ், மொய்ன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.



    பெங்களூர் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று அந்த அணி வாய்ப்பில் நீடித்து வருகிறது. வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    எங்களது ஒரே நோக்கம் அணிக்காக சிறப்பாக விளையாடுவது தான். தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் தோற்றது உண்மையிலேயே காயத்தை ஏற்படுத்தி விட்டது. இது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பே. வேறு எந்த அணியும் இதே மாதிரி 6 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது இல்லை. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் நான்கில் வென்றுள்ளோம். 5 ஆட்டத்திலும் வென்று இருந்தால் மகிழ்ச்சியுடன் இருந்து இருப்போம். வேடிக்கையாக விளையாடிதான் இந்த ஆட்டத்தில் வென்றோம். நாங்கள் எந்தவித நெருக்கடியிலும் ஆடவில்லை. எப்படி ஆட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KXIP #RCB #ViratKohli
    அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #westIndies #CWC2019
    பார்படோஸ்:

    10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான உத்தேச அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்து இருந்தது. இதன்படி நேற்று முன்தினம் கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை ஐ.சி.சி.யிடம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்தது. ஆனால் அணியில் யார்-யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் ஒரு நாள் தாமதமாக உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் நேற்று வெளியிடப்பட்டது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் அதிரடி மன்னன் பொல்லார்ட், சாமுவேல்ஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. விரலில் காயத்தால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைனும் ஓரங்கட்டப்பட்டார். 39 வயதான கிறிஸ் கெய்ல் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். இது அவருக்கு 5-வது உலக கோப்பை போட்டியாகும்.



    வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:- ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ். #westIndies #CWC2019
    டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MSDhoni #KapilDev
    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணிக்காக நிறைய சேவைகளை செய்தவர் டோனி. அவரை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அவர் எவ்வளவு காலம் விளையாட விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது. உடல் தகுதியை பொறுத்து அவர் முடிவு செய்ய வேண்டிய வி‌ஷயம்.

    ஆனால் டோனி அளவுக்கு நாட்டுக்காக சிறப்பாக செயல்பட்ட இன்னொரு கிரிக்கெட் வீரர் இல்லை என்றே சொல்வேன். அவரை மதிக்க வேண்டும். அதோடு அவரை வாழ்த்தவும் வேண்டும்.

    டோனி இந்த முறையும் உலக கோப்பையை பெற்று தருவார் என்று நம்புகிறேன். தற்போது உள்ள இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் உலககோப்பையை வெல்வது எளிதல்ல. அணியாக ஆடவேண்டும். காயம் ஏற்பட்டால் பார்த்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிர்ஷ்டம் கை கொடுத்தால் நிச்சயம் இந்த அணி உலககோப்பையை வெல்லும்.

    உலககோப்பை போட்டிக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்யும் பணியை தேர்வு குழுவினர் செய்து உள்ளனர். நாம் அதனை மதிக்க வேண்டும். ரி‌ஷப் பந்துக்கு பதிலாக அவர்கள் தினேஷ் கார்த்திக்கை எடுத்துள்ளார்கள். அப்படியென்றால் அது சரியாகத்தான் இருக்கும். நாம் தேர்வு குழுவினரின் சிறந்த பணியை நம்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்திய அணிக்கு கபில்தேவ் தான் முதல் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 1983-ம் ஆண்டு அவரது தலைமையிலான அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி கோப்பையை வென்றது.

    28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது உலககோப்பையை பெற்றுக் கொடுத்தார். 2011-ம் ஆண்டு அவரது தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி பட்டம் வென்றது.

    தற்போது விராட்கோலி தலைமையில் இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. டோனி ஆட்டத்தை நிறைவு செய்வதில் தொடர்ந்து வல்லவராக இருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருக்கிறது.

    12-வது உலககோப்பை போட்டி மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. #MSDhoni #KapilDev
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி ரகசியம் என்ன என்ற கேள்விக்கு ஓய்வு பெறும் வரை அதை கூற மாட்டேன் என டோனி பதில் அளித்துள்ளார். #CSK #IPL2019 #MSDhoni
    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    மனீஷ்பாண்டே 49 பந்தில் 83 ரன்னும், (7 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் வார்னர் 45 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்பஜன்சிங் 2 விக்கெட்டும், தீபக் சாஹர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    176 ரன் இலக்குடன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விளையாடியது.

    தொடக்க வீரர் வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வாட்சன் 53 பந்தில் 96 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ரெய்னா 24 பந்தில் 38 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர்குமார், ரஷீத்கான், சந்தீப்சர்மா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 8-வது வெற்றியாகும். இதன்மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளேஆப்’ சுற்றை உறுதி செய்து மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. மேலும் இந்த வெற்றி மூலம் ஐதராபாத்திடம் அதன் சொந்த மண்ணில் தோற்றதற்கு பதிலடி கொடுத்தது. சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்தது.

    வெற்றி குறித்து சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    தனி நபர்களால் சில ஆட்டங்களில் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது. பல போட்டிகளில் அணியாக வெற்றி பெறுகிறோம். எங்கள் அணியின் மேட்ச் வின்னர் வாட்சன். சில ஆட்டங்களில் அவர் சிறப்பாக செயல்படாவிட்டாலும் அவருக்கு ஆதரவு அளிப்பது அவசியமானது. கடந்த ஆண்டு அவர் பல்வேறு ஆட்டங்களில் திறமையை வெளிப்படுத்தினார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நிலையாக விளையாடி ‘பிளேஆப்’ சுற்றுக்கு நுழைவது குறித்து கேட்கப்படுகிறது. இந்த வெற்றியின் மந்திரத்தை வெளியில் சொல்லக்கூடாது. ஏனென்றால் ஏலத்தில் என்னை வாங்க மாட்டார்கள். அது வியாபார ரகசியம்.

    சென்னை அணியின் வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு, சென்னை அணியின் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதைத் தவிர நான் ஓய்வு பெறும் வரை வேறு எதையும் சொல்ல மாட்டேன்.

    எனது முதுகுவலி மோசமாக இல்லை. ஆனால் உலக கோப்பை நெருங்குவதால் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். அச்சப்படும்படி எதுவும் இல்லை. உலககோப்பை தான் முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐதராபாத் அணி 5-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் புவனேஷ்வர் குமார் கூறும்போது, “175 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் பனி துளியால் ஆடுகளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேற இயலும்” என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 26-ந்தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    ஐதராபாத் அணி 11-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை 27-ந்தேதி சந்திக்கிறது. #CSK #IPL2019 #MSDhoni
    விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #RCBvsKXIP

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 42-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணிவெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

    பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் பெங்களூர் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை மீண்டும் தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பெங்களூர் அணியில் கேப்டன் விராட்கோலி (387 ரன்), டிவில்லியர்ஸ் (332 ரன்), பார்த்தீவ் படேல் (283 ரன்), மொய்ன் அலி (216 ரன்), யசுவேந்திர சாஹல் (14 விக்கெட்) ஸ்டெய்ன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ராஜஸ்தான் ராயல்சை 2 முறையும் (14 ரன், 12 ரன்) மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை ஒரு முறையும் வீழ்த்தியது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்), டெல்லி (5 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    பெங்களூர் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி இருக்கிறது.

    பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் (423 ரன்), லோகேஷ் ராகுல் (399 ரன்), அகர்வால் (227 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் முகமது ‌ஷமி (13 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (11 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #RCBvsKXIP

    இதுவரை நடந்த 12 ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு குறித்த தகவலை பார்ப்போம். #IPL2019 #CSK
    இதுவரை ஆடியுள்ள அனைத்து ஐ.பி.எல். தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அந்த சிறப்பை இந்த சீசனிலும் சென்னை அணி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முதல் அணியாக பிளே-ஆப் சுற்றை உறுதி செய்திருக்கிறது.

    இந்த சீசனில் உள்ளூரில் தோல்வி காணாத (சென்னையில் நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி) ஒரே அணியும் சென்னை தான். #IPL2019 #CSK 
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். #SwapnaBarman
    தோகா:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர்தடை ஓட்டம் உள்பட 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் மொத்தம் 5,993 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 

    உஸ்பெகிஸ்தான் வீராங்கனை எகடெரினா வோர்னினா 6,198 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வப்னா பர்மன் இரண்டு கால்களிலும் தலா 6 விரல்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அவர் கூறுகையில், ‘2-வது இடம் பிடித்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஈட்டி எறிதலில் எனது செயல்பாடு சரியில்லை. அது மட்டுமின்றி கணுக்காலில் வலி காரணமாக என்னால் நன்றாக தயாராக முடியவில்லை’ என்றார். #SwapnaBarman
    ஐபிஎல் போட்டியின் 40-வது ‘லீக்‘ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். #IPL2019 #RR #DC
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியின் 40-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி மும்பை இந்தியன்சை 2 முறை (4 விக்கெட், 5 விக்கெட்), பெங்களூர் அணியை 1 தடவை (7 விக்கெட்) தோற்கடித்து இருந்தது. பஞ்சாப் (14 ரன், 12 ரன்), சென்னை (8 ரன், 4 விக்கெட்), அணிகளிடம் தலா 2 முறையும் ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தலா 1 தடவையும் தோற்றது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ராஜஸ்தான் அணிக்கு உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரகானே மாற்றப்பட்டு ஸ்டீவன் சுமித் நியமிக்கப்பட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம்.

    பேட்டிங்கில் பட்லர் (311 ரன்), சுமித் (245 ரன்), சாம்சன் (234) ஆகியோரும், பந்து வீச்சில் ஆர்ச்சர் (11 விக்கெட்), ஷிரேயாஸ் கோபால் (10 விக்கெட்)ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

    அந்த அணி கொல்கத்தாவை 2 முறையும் (சூப்பர் ஓவர், 7 விக்கெட்), மும்பை (37 ரன்), பெங்களூரு (4 விக்கெட்), ஐதராபாத் (39 ரன்), பஞ்சாப் (5 விக்கெட்) ஆகியவற்றை ஒருமுறையும் வீழ்த்தியது.

    சென்னை ( 6 விக்கெட்), பஞ்சாப் (14 ரன்), ஐதராபாத் (5 விக்கெட்), மும்பை (40 ரன்) ஆகியவற்றிடம் தோற்றது.

    ராஜஸ்தானை வீழ்த்தி 7-வது வெற்றியை டெல்லி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி அணியில் தவான் (347 ரன்), கேப்டன் ஹிரேயாஸ் அய்யர் (327 ரன்), ரி‌ஷப்பந்த் (258 ரன்), ரபடா (21 விக்கெட்), கிறிஸ் மோரிஸ் (11 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். #IPL2019 #RR #DC
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். #Varanasi #PriyankaGandhi #LSpolls2019 #PriyankaGandhicontest
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார்.



    இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக வயநாட்டில் இரண்டாவது நாளாக இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நீங்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி வருவது பற்றி? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, 'காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டால் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன்’ என தெரிவித்தார்.  #Varanasi #PriyankaGandhi  #PriyankaGandhicontest #LSpolls2019
    ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். #MKStalin #Election2019
    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்பின், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

    ‘யாரை திருப்திபடுத்த தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையத்தின் கோட்பாடு மோடியின் காலில் மிதிப்பட்டுக் கிடக்கிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகின்ற சூழலை உருவாக்கிவிட வேண்டாம். வேலூரில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திமுக தான்’ என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
    ×