என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Athletics Championships"

    • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
    • இந்த போட்டியில் சீனா 26 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இந்தியா 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

    இந்த போட்டியில் சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தனதாக்கியது.

    இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில், "தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 400 மீ தடைதாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார்.
    • பந்தய தூரத்தை அவர் 56.46s வினாடிகளில் கடந்தார்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் வரை நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர் வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற 400 மீ தடைதாண்டும் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார். இதில் அவர் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் பந்தய தூரத்தை 56.46s வினாடிகளில் கடந்தார்.

    இந்த போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீ தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை வித்யா ராம்ராஜ்க்கு அவரின் சகோதரி நித்யா இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது.
    • பந்தய தூரத்தை 13:24.78 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை குல்தீப் சிங் வென்றார்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியும் அடங்கும்.

    இந்நிலையில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 13:24.78 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

    இதே தடகள போட்டியில் இதற்கு முன்பு நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற இவர் பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • இவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இந்திய அணி சார்பாக சந்தோஷ் குமார், ரூபால், விஷால், சுபா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 18.12 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றனர்.

    சீன அணி 3 நிமிடம் 20.52 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கை அணி 3 நிமிடம் 21.95 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.

    • 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியில் 9 தமிழக வீரர்களும் அடங்கும்.

    நேற்று நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் தங்கப்பதக்கமும் 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டியில் செர்வின் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

    • ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
    • பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை குல்வீர் சிங் வென்றார்.

    26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் குமி நகரில் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 59 பேர் கொண்ட இந்திய அணியும் அடங்கும்.

    இந்நிலையில் முதல் நாளான இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குல்வீர் சிங் கலந்து கொண்டார். கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வரை 4-வது இடத்தில் இருந்த குல்வீர், கடைசி சுற்றில் வேகத்தை அதிகப்படுத்தினார். இதனால் இந்த ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் முதல் இடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 28:38.63 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

    பாங்காக்கில் நடந்த கடந்த (2023) ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி உள்பட 27 பதக்கங்கள் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 5 -வது ஆசிய இளையோர் தடகளப் போட்டி தாஷ்கண்ட் மாகாணத்தில் நடைபெற்றது
    • மாணவி அபிநயா 4X100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.

    நெல்லை:

    உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தில் நடைபெற்ற 5 -வது ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி அபிநயா 11.82 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருக வேள், பள்ளி ஒருங்கிணை ப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் சேது, நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலர் லெட்சுமணன், நீச்சல் பயிற்றுநர் கர்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கம் வென்றார்.
    • ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்றார்.

    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார். அவர் 10000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 23 வயதான யர்ராஜி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்தார்.

    ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜ் தங்கம் வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அப்துல்லா அபூபக்கர், ஆடவருக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றார்.

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். #SwapnaBarman
    தோகா:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர்தடை ஓட்டம் உள்பட 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் மொத்தம் 5,993 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 

    உஸ்பெகிஸ்தான் வீராங்கனை எகடெரினா வோர்னினா 6,198 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வப்னா பர்மன் இரண்டு கால்களிலும் தலா 6 விரல்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அவர் கூறுகையில், ‘2-வது இடம் பிடித்தது எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஈட்டி எறிதலில் எனது செயல்பாடு சரியில்லை. அது மட்டுமின்றி கணுக்காலில் வலி காரணமாக என்னால் நன்றாக தயாராக முடியவில்லை’ என்றார். #SwapnaBarman
    ×