search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகுகுறிப்பு"

    • காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.
    • அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

    மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு குளித்துவிடலாம். மருதாணி தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.

    காபி:

    காபியை நன்றாக காய்ச்சி ஆறவிடவும். அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தலைமுடியை அலசிவிடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.

    அவுரி:

    அவுரி பவுடரை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவி விடலாம். அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

    ரூபார்ப்:

    ஒரு வகை கீரையான இதன் தண்டு பகுதியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்துவிடலாம். இது தலைமுடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

    பீட்ரூட் ஜூஸ்:

    பீட்ரூட்டை வேகவைத்து ஜூஸ் தயாரித்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவவும். பீட்ரூட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஊதா நிறத்தை கொடுக்கும்.

    எலுமிச்சை சாறு:

    எலுமிச்சை சாற்றை பிழிந்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். எலுமிச்சை சாறு தலைமுடிக்கு வெளிர் பொன்னிற நிறத்தை அளிக்கும்.

    சீமை சாமந்தி:

    இந்த சாமந்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற விடவும். பின்பு தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும். தலைமுடி உலர தொடங்கியதும் தண்ணீரில் அலசவும். இது தலைமுடிக்கு வெளிர் பொன்னிறத்தை கொடுக்கும்.

    வாதுமை கொட்டை:

    கருப்பு வாதுமை கொட்டை ஓடுகளை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். கருப்பு வாதுமை கொட்டை தலைமுடிக்கு அடர் பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

    கேரட் சாறு:

    கேரட்டை வேகவைத்து, சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும். கேரட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை அளிக்கும். இங்கே இடம் பெற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வர, நரை முடி மறைந்து இயற்கை வண்ண சாயத்துடன் கூந்தல் மிளிரும்.

    தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கு மரபணு ரீதியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மன அழுத்தம், புகைப்பழக்கம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உணவில் இடம்பெறாதது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு கோளாறுகள் போன்றவைகளும் முடி நரைப்பதற்கு மற்ற காரணங்களாக அமைந்திருக்கின்றன.

    கூந்தலுக்கு நிறத்தை தரும் மெலனின் என்ற நிறமி குறைவதால் முடி நரைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வயதாகும்போது மயிர்க்கால்களில் மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடையலாம் அல்லது இறக்கலாம். அதனால் முடி நரைக்கத் தொடங்கும். ஆனால் முன்கூட்டியே முடி நரைப்பதை சில வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு இயற்கை வண்ண சாயங்கள் தயாரித்து பூசியும் நரை முடியை அலங்கரிக்கலாம்.

    • பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான்.
    • வறண்ட சருமத்திற்கு ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது.

    சருமத்தில் 4 வகைகள் உள்ளன. சாதாரண சருமம், ஆயில் சருமம், வறண்ட சருமம், சென்சிட்டிவ் சருமம். ஒரு பழமொழி உண்டு `ஆல் த நேச்சுரல் புராடெக்ட்ஸ் ஆர் நாட் ஆல்வேஸ் குட்' உங்கள் சருமத்திற்கு பொருந்துகிற

    இயற்கை பொருள் என்னுடைய சருமத்திற்கு விஷமாக இருக்கலாம். இயற்கையான புராடெக்ட்களிலேயே இந்த நிலை இருக்கும்பட்சத்தில் காஸ்மெட்டிக், கெமிக்கல் எனில் இன்னும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.

    பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான். இதனை எல்லா சருமத்திற்கும் பெரும்பாலான பார்லர்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு கிளென்சிங் முறை உள்ளது.

    உதாரணத்திற்கு ஃபேஸ் வாஷ்களே ஜெல் முறை எனில் வறண்ட சருமத்திற்கு, வேம்பு, ஆரஞ்ச் அடிப்படையாக கொண்ட ஃபேஸ் வாஷ் எனில் ஆயில் சருமத்திற்கு வேறு என பிரிப்பது போல் கிளென்சிங்கிலும் சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.

    ஆனால் அந்த அளவிற்கு இங்கே மெனெக்கெடுகிறார்களா? என கவனிக்கவும். மேலும் அதீத வறண்ட சருமம் கொண்ட சருமத்திற்கு பொதுவாக ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது. காரணம் ஏற்கனவே வறண்ட சருமத்தின் துளைகள் திறந்து தான் இருக்கும் எனும்போது அதனை சரும இறுக்கத்திற்கான ஃபேஷியல்கள் தான் கொடுக்க வேண்டும். இதனால் முகம் இளமை பெற்று, சுருக்கங்கள் மறையும்.

    அதேபோல் ஆயில் சருமம் எனில் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் ஃபேஷியல்களை கொடுக்க வேண்டும். இதனால் பருக்கள், வடுக்கள் மறையும்.

    இந்த கோல்டு, டைமண்ட் ஃபேஷியல்கள் எல்லாம் எந்த அடிப்படையில் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தங்கம் விற்கும் விலைக்கு எப்படி சரும காஸ்மெட்டிக்குகளில் பயன்படுத்த முடியும். எனவே இப்படியான மாய விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

    ஃபேஷியலின் சிறப்பே கொடுக்கப்படும் மசாஜ் மற்றும் க்ளீனிங் முறையில் தான் சிறப்பே உள்ளது. உங்கள் பிரச்சினை என்னவோ, சருமம் எப்படிப்பட்டதோ அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஃபேஷியல் தேர்வு இருக்க வேண்டும். எந்த கிரீம்களும் சருமத்தின் இயற்கையான மெலனினை கட்டுப்படுத்தி உங்களை வெள்ளையாக்காது, எனவே சிவப்பு நிறத்திற்கு மயங்க வேண்டாம். ஆரோக்கியமான சருமம் தான் முக்கியம். அதற்கான ஃபேஷியல் எதுவோ அதை தேர்வு செய்யுங்கள்.

    • முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம்.
    • அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.

    டீடாக்ஸ் என்பது சமீபத்தில் அதிகமாக காதில் கேட்கிற வார்த்தையாக இருக்கலாம். டீடாக்ஸ் என்பது தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துதல் என்று பொருள். உடல் டீடாக்ஸை போலவே முகத்தை டீடாக்ஸ் செய்யும் சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.

    முகத்துக்கு டீடாக்ஸ் மிக மிக முக்கியம். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கழிவுகள், அழுக்குகளைப் போக்கி சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். இதன் மூலம் சருமத்துக்குள் இருக்கும் அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் சுரப்பு ஆகியவற்றைக் குறைத்து ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

    சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டியது மிக அவசியம். முகத்தை சோப்பு போட்டு முகத்தைக் கழுவுவோம். அது சருமத்தின் மேல்புறத்தில் இருக்கிற அழுக்குகள் மட்டும் தான் வெளியேறும். அதனால் டபுள் க்ளன்சிங் முறையை பின்பற்றுவது மிக முக்கியம். அதாவது இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும்.

    இப்படி இரண்டு முறை க்ளன்சிங் செய்யும்போது சருமத் துளைகளுக்குள் உள்ளே சென்றிருக்கிற மேக்கப் பொருள்கள், சன்ஸ்க்ரீன் உள்ளிட்ட லோஷன்கள், அதிகப்படியான சீபம் சுரப்பு ஆகியவற்றை நீக்கும்.

    சருமத்தை க்ளன்சிங் செய்து விட்டால் மட்டும் போதுமா என்றால் போதாது. அதன்பிறகு சருமத்தில் தினமும் தேங்குகிற இறந்த செல்களை நீக்கி சருமத்தில் புதிய செல்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது முக்கியம். இதற்கு நல்ல ஸ்கிரப் ஒன்றை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி மென்மையாக சருமத்தை ஸ்கிரப் செய்து கழுவுங்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதை செய்தால் போதுமானது.

    க்ளே மாஸ்க்கை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுக்கள் முழுமையாக வெளியேறும். கடைகளில் முகத்துக்குப் பயன்படுத்துகிற க்ளே மாஸ்க்குகள் கிடைக்கும். அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது அதற்கு பதிலாக முல்தானி மட்டியும் பயன்படுத்தலாம்.

    சருமத்தை டீடாக்ஸ் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு சருமம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியம். அதனால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அப்படி குடிக்கும்போது உடல் மற்றும் சருமத்திலுள்ள கழிவுகளை வெளியேற்றும்.

    முகத்தை மசாஜ் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இது ஆயில் மசாஜாகவும் இருக்கலாம். அல்லது க்ரீம் அல்லது வீட்டு வைத்தியங்களின் மூலம் மசாஜ் செய்யலாம். தயிர், மஞ்சள் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்தால் முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அதேபோல பேஷியல் ஆயில் பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம்.

    கிரீன் டீயில் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த கிரீன் டீயை சருமத்துக்கு அப்ளை செய்வதன் மூலம் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு சருமத்தை டீடாக்ஸ் செய்து பளிச்சென்று மாற்றும்.

    கிரீன் டீயை நன்கு நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதை முகத்தில் ஸ்பிரே செய்து விட்டு முகத்தை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் சுற்றுச்சூழுல் மாசுக்களால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய முடியும்.

    • முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது.
    • வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.

    சரும அழகை கூட்ட என்னென்ன செய்யலாம் என்பதைத்தான் எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் சிலவற்றைத் தவிர்த்தாலே நம் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பேணிக்காக்க முடியும்.

    முகப்பரு, கரும்புள்ளியை கண்டதும் முகம் பார்க்கும் கண்ணாடியும் கையுமாக மாறிவிடுவோம். முதலில் முகப்பருவை தொட்டுப் பார்க்கவே கூடாது. அதிலும் முகப்பருவை போக்க பக்கத்து வீட்டார் கொடுத்த அறிவுரை, நண்பர்களின் டிப்ஸ், கேள்விப்பட்டது கேள்விப்படாதது என எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தால் நீங்காத தழும்பு முகத்தில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    முகத்தை பிரகாசமாக வைத்துக்கொள்ள அடிக்கடி முகம் கழுவுவது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். சொல்லப்போனால் முகப்பொலிவை பாதுகாக்க இயற்கையில் சருமத்தில் இருந்து எண்ணெய் சுரக்கும். அடிக்கடி முகம் கழுவுவதால் இந்த எண்ணெய் நீக்கப்பட்டு தோலின் ஈரப்பதம் குறைந்து, வறண்ட சுருக்கமான சருமம்தான் மிஞ்சும்.

    இதேபோல் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் பலர். சருமத்தின் அழகு, ஆரோக்கியம் மீது அக்கறை கொண்டவர்கள்கூட கழுத்து பகுதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தினமும் காலையும் இரவும் முகத்தில் கிரீம்களை பூசிவிட்டு கையில் இருக்கும் மிச்சம் மீதியை கழுத்தில் தேய்ப்பவர்கள்தான் பெரும்பாலானோர். எதையும் அதிகப்படியாக உபயோகிப்பது கேடு விளைவிக்கும்.

    • இளம்வயதிலேயே சருமம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
    • சூரியனின் புறஊதா கதிர்கள் தோல் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது.

    இளம்வயதில் ஆண், பெண் என இருவரும் இளம்வயதிலேயே சருமம் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தோல் சுருக்கம், தோல் நிறம் மாறுதல், தோலில் புள்ளிகள் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு சரும பிரச்சனைகள் தொடரும் பட்சத்தில் ஒவ்வொருவரும் இளம்வயதிலேயே வயதானவர்கள் போன்று மாறுவார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் சில முக்கிய டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும். எளிதாக எப்போதும் சரும பிரச்சனைகளை சந்திக்காமல் இளமையாக ஜொலி ஜொலிக்காலம். இதற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய 8 முக்கிய டிப்ஸ்கள்:

    முதல் டிப்ஸ்

    நாள்தோறும் நாம் வெளியில் செல்லும்போது சூரியகதிர்கள் உடல் மேல் விழுவதை நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சூரியனின் புறஊதா கதிர்கள் தோல் செல்களை அழிக்கும் வல்லமை கொண்டது. இதனால் தோலில் சுருக்கங்கள் அல்லது நிறமாற்றங்கள் ஏற்பட்டு புள்ளிகள் உருவாக வாய்ப்புள்ளது. இதில் இருந்து நாம் பாதுகாத்து கொள்ள சன்ஸ்க்ரீனை பயன்படுத்தலாம். ஆனாலும் சன்ஸ்க்ரீனை தேர்வு செய்வதில் அதிக கவனம் கொள்ள வேண்டும். அதாவது சன்ஸ்க்ரீனை பொறுத்தமட்டில் எஸ்பிஎப் 30 அல்லது அதற்கு மேல் உள்ள அளவை பயன்படுத்துவது சிறந்ததாகும்.

    2-வது டிப்ஸ்

    புகைப்பிடித்தல் மற்றும் புகைப்பிடிப்பவரின் அருகே இருத்தல் உள்ளிட்டவையும் சருமத்தை பாதிக்கும். புகைப்பிடிப்பது மற்றும் புகைப்பவர் வெளிவிடும் காற்று உள்ளிட்டவை சருமத்தை பாதிக்கும். இது தோலின் ரத்த ஓட்டத்தை குறைக்கும். இதனால் வாய் மற்றும் கண்களை சுற்றி சுருக்கம், கோடுகள் உருவாகலாம். இதனால் புகைப்படிப்பதை கைவிட்டு புகைப்பிடிப்பவரின் அருகே செல்வதையும் தவிர்ப்பதன் மூலம் சருமத்தை பாதுகாக்கலாம்.

    3-வது டிப்ஸ்

    ஆரோக்கியமான சருமத்துக்கு தண்ணீர் என்பது மிகவும் முக்கியமாகும். இதனால் ஒவ்வொருவரும் அதிகளவில் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். தண்ணீர் மூலம் சருமம் ஹைட்ரேட் அடையும். இதன்மூலம் சருமம் பளபளப்பாக இருக்கும். இதன்மூலம் அனைவருக்கும் மிகவும் இளமையாக காட்சியளிக்கலாம். இதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியமாகும். இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.

    4-வது டிப்ஸ்

    ஆரோக்கியமான உணவுக்கும் சருமத்தின் பாதுகாப்புக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்புகள் நிறைந்த சமச்சீர் உணவை தினமும் எடுத்து கொள்ள வேண்டும். இதன்மூலம் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சத்துகளை ஒருசேர பெற முடியும். குறிப்பாக கீரை வகைகள், நட்ஸ், மீன் மற்றும் அவகோடா, பெர்ரி பழங்களை கட்டாயமாக உண்ண வேண்டும்.

    5-வது டிப்ஸ்

    மேலும் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்துக்கு போதுமான அளவு தூக்கம் அவசியமாகும். ஏனென்றால் நாம் தூங்கும்போது தான் சருமத்தில் உள்ள தோல் செல்கள் தங்களை புதுப்பித்து கொள்கின்றன. இது சருமம் மீதான சுருக்கம், நிறமாற்றத்தை தடுக்க உதவும். இதனால் ஒவ்வொருவரும் இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

    6-வது டிப்ஸ்

    மேலும் ஆன்டிஏஜிங் புராடக்ட்டுகளை பயன்படுத்தலாம். குறிப்பாக ரெட்டினோல், வைட்டமின் சி மற்றும் ஹைலூரோனிக் அமிலம் நிறைந்த ஆன்டிஏஜிங் தயாரிப்புகளை பயன்படுத்தலாம். இந்த பொருட்கள் தோல் சுருக்கம், தோலில் ஏற்படும் நிறமாற்றம் உள்ளிட்டவற்றை தடுக்கும். இருப்பினும் இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உடனடியாக ரிசல்ட் என்பதை எதிர்பார்க்க முடியாது. மாறாக படிப்படியாக சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்பு ஏற்படும்.

    7-வது டிப்ஸ்

    சருமத்தை பாதுகாக்க இன்னொரு வழிமுறை என்றால் அது உடற்பயிற்சி செய்வதாகும். தினமும் உடற்பயிற்சி செய்வது என்பது உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இது தோல் செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க உதவுகிறது. இதனால் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். இதன்மூலம் சருமத்தை அழகாகவும் சிறப்பாக பராமரிக்க முடியும்.

    8-வது டிப்ஸ்

    தற்போதைய சூழலில் பலரும் மனஅழுத்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். முடிந்தவரை மனஅழுத்தத்தை தவிர்க்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். மனஅழுத்தம் நிம்மதியை இழக்க செய்வதோடு உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். குறிப்பாக சருமத்தையும் பாதிக்கிறது. அதாவது மனஅழுத்தத்தின்போது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் சருமத்தின் செல்களை சிதைக்கின்றன. இது தோலில் பாதிப்பை ஏற்படுத்தி வயதானவர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். இதனால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் தியானம், போதிய அளவிலான தூக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    • இளமையான தோற்றத்தை தருகிறது.
    • முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும்.

    பீட்ரூட்டில் உள்ள லிகோபேன் மற்றும் ஸ்காலீன் தோல் தொங்கிப்போவதை தடுத்து, இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த்தொற்றையும் குணப்படுத்துகிறது. முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் `சி'யானது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். இந்த பீட்ருட் நைட் கிரீம் முகத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பித்து முகத்திற்கு பொலிவூட்டுகிறது.

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட்

    கற்றாழை ஜெல்

    தேன்

    கிளிசரின்

    தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

    செய்முறை:

    பீட்ரூட்டை தோல் சீவி, மிக்சியில் தண்ணீர் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேன், கிளிசரின், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். கலக்கும் போதே கொஞ்சம் கெட்டியாகி வரும். இதை சின்ன டப்பாவில் ஊற்றி வைத்து தினமும் இரவு தூங்குவதற்கு முகத்திற்கு தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.

    • புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
    • புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.

    பொதுவாக நம்மில் பலர் நல்ல அடர்த்தியான புருவத்தை பெற ஆசைப்படுவார்கள். ஆனால் அவ்வளவு அடர்த்தியான புருவத்தை எல்லோராலும் பெற முடியாது. அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் தங்கள் புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.

    * தேங்காய் எண்ணெய்யை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.

    * விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தை காண முடியும். உடலும் குளிர்ச்சி அடையும்.

    * தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.

    * கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.

    * முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு காலத்திற்கு செய்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதை காண முடியும்.

    * வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.

    • முக அழகை மேம்படுத்த உதவுகின்றன.
    • பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம்.

    ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, கிரான்பெர்ரி என பல்வேறு வகைகளில் இருக்கும் பெர்ரி பழங்கள், உடல் ஆரோக்கியயத்தை பாதுகாப்பதோடு, முக அழகையும் மேம்படுத்த உதவுகின்றன. இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளை போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

    வீட்டிலேயே பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இதோ..

    ஃபேஸ்பேக், தேன் பேஸ்பேக்:

    முதலில் பெர்ரி பழங்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும், அந்த கூழுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இது சருமத்தை சுத்தம் செய்து, சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.

    பெர்ரி, ரோஸ் வாட்டர் பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைகழுவவும். இந்த ஃபேஸ்பேக், திறந்திருக்கும் சருமத் துளைகளை இறுகச்செய்து, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.

    பெர்ரி, எலுமிச்சை பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பசைபோல தயாரிக்கவும். இதை முகத் தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால், முகத்தில் இயற்கையான பொலிவு மற்றும் பளபளப்பு உண்டாகும்.

    பெர்ரி அரிசி மாவு பேஸ்பேக்:

    பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு தயிர், அரிசி மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

    பெர்ரி, ஓட்ஸ் ஃபேஸ்பேக்:

    பழக்கூழுடன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். அதனுடன் மண்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும். பின்பு அதை முகத்தில் தடவி 10 முதல் 12 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

    பெர்ரி, தேங்காய் எண்ணெய் ஸ்கிரப்:

    பெர்ரி பழங்களுடன், அரை டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும், இந்த ஸ்கிரப் முகப்பரு, வடுக்கள் மற்றும் கறைகளை விரைவாக அகற்ற உதயும்.

    • முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • ஹார்மோன் சமநிலையின்மையே பெண்களின் முகத்தில் முடி வருவதற்கு காரணம்.

    முகத்தில் முடி தோன்றும் பிரச்சனை ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களும் இருக்கும். சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடி இருக்கும், அதனால்தான் அவர்கள் பார்லருக்கு சென்று ஷேவிங், வாக்சிங் அல்லது மெழுகு போன்றவற்றை செய்கிறார்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் செலவழிக்க விரும்பினால், லேசர் சிகிச்சையையும் முயற்சி செய்யலாம்.

    பெண்களுக்கு முகத்தில் முடி வருவதற்கு என்ன காரணம்?

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற மருத்துவ நிலைகளால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையே பெண்களின் முகத்தில் முடி வருவதற்கு மிகவும் பொதுவான காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். இது முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ஒரு நபரின் உடல் மற்றும் முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெராய்டுகள் போன்ற சில வகையான மருந்துகள் பெண்களுக்கு முக முடி பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றொரு காரணியாக இருக்கலாம். இதற்கு நீங்கள் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற நீங்கள் சமையலறை பொருட்களையே பயன்படுத்தலாம்.

    சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு

    நீங்கள் 35 மில்லி தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். கலவையை கொதிக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கவும். பிறகு ஆறவிடவும். ஆறிய கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். அதை தண்ணீரில் கழுவி, வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். எலுமிச்சை மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தொடங்குங்கள். கலவையை சுமார் மூன்று நிமிடங்கள் சூடாக்கி, அது மிகவும் தடிமனாக இருந்தால் அதை மெல்லியதாக மாற்ற மெதுவாக தண்ணீரை கிளறவும். பேஸ்ட் குளிர்ந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இது இயற்கையான மெழுகு போன்றது, எனவே மெழுகு பட்டையைப் பயன்படுத்தி, வளர்ச்சியின் எதிர் திசையில் முடியை வெளியே இழுக்கவும்.

    முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் அரிசி மாவு

    ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க அவற்றை நன்கு கலந்து, தேவையற்ற முக முடி உள்ள பகுதிகளில் தடவி, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உலர வைக்கவும். முடி வளர்ச்சியின் எதிர் திசையில் உலர்ந்த ஃபேஸ் மாஸ்க்கை மெதுவாக உரிக்கவும், பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்

    ஒரு பழுத்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்மீலைக் கலக்க வேண்டும். இது ஒரு பயனுள்ள இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும். மேலும் இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வட்ட இயக்கத்தில் தடவவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, முகத்தை தண்ணீரில் மெதுவாக கழுவ வேண்டும்.

    பப்பாளி மற்றும் மஞ்சள்

    பப்பாளியில் பப்பெய்ன் என்ற நொதி உள்ளது, இது மயிர்க்கால்களை உடைத்து முடி வளர்ச்சியைத் தடுக்க உதவும். பப்பாளி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்ய, பப்பாளி கூழ் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.

    இந்த இயற்கையான முக முடி அகற்றும் யோசனைகளை பயன்படுத்துவதற்கு முன், தேவையற்ற தோல் எதிர்வினைகளைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். மேலும், தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய மறக்காதீர்கள். உங்கள் முகத்தில் உள்ள தோல் பொதுவாக மற்ற உடல் பாகங்களை விட அதிக உணர்திறன் கொண்டது, எனவே முடி அகற்றும் முறைகள் வரும்போது அதற்கு கவனிப்பு தேவை. இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள முடியை அகற்ற முயற்சி செய்கிறீர்கள் என்றால், கவனமாக இருக்க வேண்டும்.

    • அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

    எலுமிச்சை ஸ்க்ரப்

    நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.

    பால்

    பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

    அன்னாசி கூழ்

    வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.

    ஆலிவ் ஆயில்

    தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

    வாழைப்பழம்

    மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.

    • சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
    • அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    அந்த காலம் முதல் பெண்கள் தங்கள் சருமத்தை பராமரித்துக்கொள்ள பல இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அது அவர்களின் சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும். ஆனால் தற்போதைய அவசர உலகத்தில் தாங்களே தயாரித்து சருமப்பொலிவை பாதுக்காக்க பெண்களுக்கு நேரம் இல்லாததால், கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது சருமத்திற்கு மட்டும் கெடுதல் செய்வது மட்டுமல்லாமல், உடலிற்கும் தீங்கு விளைவிக்க கூடும். அதனை தடுக்க, வெறும் மூன்றே பொருட்களை வைத்து வீட்டில் சருமப்பொலிவை அதிகரிக்க அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

    ஸ்ட்ராபெர்ரி பிரவுன் சுகர் ஸ்கிரப்

    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது ஸ்ட்ராபெர்ரி பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சரும பாதிப்பை குறைகிறது. மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்சை எதிர்த்துப் போராடி சருமப்பொலிவை தக்க வைக்க பயன்படுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டும் இல்லாமல் சரும சுருக்கத்தை குறைத்து இளமையாக இருக்க உதவி செய்கிறது.

    தேவையான பொருட்கள்:

    ஸ்ட்ராபெர்ரி - 3 அல்லது 4

    பிரவுன் சுகர் - 2 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    செய்முறை:

    ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி அதில் இருக்கும் கம்பு மற்றும் நடுவில் இருக்கும் தண்டை அகற்ற வேண்டும். அதன்பிறகு துண்டு துண்டாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் பிரௌன் சுகர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்ளோ தான் சருமத்தை அழகாக பராமரிக்கும் ஸ்கிரப் தயார். இந்த ஸ்கிரப்பை சுத்தமான சருமத்தில் பயன்படுத்தினால் தான் வித்தியாசம் நன்றாக இருக்கும். எனவே, முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர் தயார் செய்த ஸ்கிரப்பை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்து 10 நிமிடம் கழித்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். இப்போது உங்களின் முகத்தை பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். முகம் அவ்ளோ பொலிவுடன் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

    • கடுகு எண்ணெய்யை பலரும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
    • கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது.

    கடுகு எண்ணெய்யை பலரும் சமைய லுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை மேற்பூச்சாகவும் யோகிக்க முடியும் இந்த எண்ணெய்யில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக் அலிக் பாவமிடிக் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.

    சரும நிறம்:

    கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது. இது பிரி-ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும். இதில், சிறந்த ஆக்சிஜனேற்றங்கள் உள்ளதால் சரும செல்களை மேம்படுத்தும். இளமையிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு உண்டு. இதைத்தொடர்ந்து முகத்தில் தடவும்போது மெல்லிய கோடுகள். சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்க உதவும். தோல் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்தும். முகத்தில் உள்ள கருந்திட்டுகள், கரும்புள்ளிகளை குறைக்க உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தரும்.

    சன்ஸ்கிரீன்:

    கடுகு எண்ணெய்யில் மாய்ஸ்சுரைசர் பண்புகள் உள்ளன. அவை உலர்ந்த மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை குணப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள். இறந்த சரும செல்களை அகற்றவும். வெயிலினால் முகம் கறுத்துப்போவதை தடுக்கவும் உதவிபுரியும். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, இயற்கையான சன்ஸ்கிரின்போல் செயல்பட்டு, சூரியனின் புறஜாதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை தடுக்கும்.

    முடி வளர்ச்சி

    தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் போலிவில்லாத கூந்தலுக்கு சுடுகு எண்ணொய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும். இதில் உள்ள ஆஸ்டி-பாக்டீரியல் பண்புகள் ' வழுக்கை விழவது மற்றும் ஸ்கால்ப் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி வரும்போது பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

    பாத வெடிப்பு:

    பலருக்கும் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு. நகங்கள் வெடிப்பு, தோல் உரிதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் இதுமேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க கடுகு எண்ணெய்யை பாதங்களில் பூசி வரலாம்.

    கொழுப்பைக் குறைக்கும்:

    கடுகு எண்ணெய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்றுப்பகுதியில் கொழுப்பு தேங்கி உள்ளவர்கள். அப்பகுதியில் இந்த எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தினமும் தடவி வரலாம். இதுபோன்று மசாஜ் செய்யும்போது, உடலில் இருந்து ஒருவித சூடு வெளியேறும். இது உடலில் பல நாட்களாக தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

    ×