search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரைமுடி"

    • காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.
    • அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

    மருதாணி பொடியை வெந்நீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு குளித்துவிடலாம். மருதாணி தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை கொடுக்கும்.

    காபி:

    காபியை நன்றாக காய்ச்சி ஆறவிடவும். அதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தலைமுடியை அலசிவிடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் காபி தலைமுடிக்கு செழுமையான, அடர் பழுப்பு நிறத்தை அளிக்கும்.

    அவுரி:

    அவுரி பவுடரை வெந்நீரில் கலந்து பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஓரிரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவி விடலாம். அவுரி பவுடர் தலைமுடிக்கு அடர் நீலம்-கருப்பு நிறத்தை அளிக்கும்.

    ரூபார்ப்:

    ஒரு வகை கீரையான இதன் தண்டு பகுதியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்துவிடலாம். இது தலைமுடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

    பீட்ரூட் ஜூஸ்:

    பீட்ரூட்டை வேகவைத்து ஜூஸ் தயாரித்து ஆறவிடவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்பு தண்ணீரில் கழுவவும். பீட்ரூட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஊதா நிறத்தை கொடுக்கும்.

    எலுமிச்சை சாறு:

    எலுமிச்சை சாற்றை பிழிந்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். எலுமிச்சை சாறு தலைமுடிக்கு வெளிர் பொன்னிற நிறத்தை அளிக்கும்.

    சீமை சாமந்தி:

    இந்த சாமந்தி பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற விடவும். பின்பு தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும். தலைமுடி உலர தொடங்கியதும் தண்ணீரில் அலசவும். இது தலைமுடிக்கு வெளிர் பொன்னிறத்தை கொடுக்கும்.

    வாதுமை கொட்டை:

    கருப்பு வாதுமை கொட்டை ஓடுகளை பொடித்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதை ஆற வைத்து தலைமுடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும். கருப்பு வாதுமை கொட்டை தலைமுடிக்கு அடர் பழுப்பு நிறத்தை கொடுக்கும்.

    கேரட் சாறு:

    கேரட்டை வேகவைத்து, சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தலைமுடியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு தண்ணீரில் கழுவவும். கேரட் சாறு தலைமுடிக்கு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தை அளிக்கும். இங்கே இடம் பெற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வர, நரை முடி மறைந்து இயற்கை வண்ண சாயத்துடன் கூந்தல் மிளிரும்.

    தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கு மரபணு ரீதியான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் மன அழுத்தம், புகைப்பழக்கம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உணவில் இடம்பெறாதது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், தைராய்டு கோளாறுகள் போன்றவைகளும் முடி நரைப்பதற்கு மற்ற காரணங்களாக அமைந்திருக்கின்றன.

    கூந்தலுக்கு நிறத்தை தரும் மெலனின் என்ற நிறமி குறைவதால் முடி நரைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வயதாகும்போது மயிர்க்கால்களில் மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடையலாம் அல்லது இறக்கலாம். அதனால் முடி நரைக்கத் தொடங்கும். ஆனால் முன்கூட்டியே முடி நரைப்பதை சில வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு இயற்கை வண்ண சாயங்கள் தயாரித்து பூசியும் நரை முடியை அலங்கரிக்கலாம்.

    • கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும்.
    • சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும்.

    கூந்தலுக்குப் போஷாக்கு தரும் சீயக்காய் தூளை வீட்டிலேயே இயற்கை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கூந்தல் பிரச்னை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் தீரும்.

    தேவையான பொருட்கள்:

    சீயக்காய்-1 கிலோ

    வெந்தயம்- 100 கிராம்

    பாசிபயறு- 200 கிராம்

    பூந்திகொட்டை-100 கிராம்

    நெல்லிக்காய் (காய்ந்தது)- 50 கிராம்

    ஆவரம்பூ- 50 கிராம்

    செம்பருத்தி பூ- 20 பூ

    நாட்டு பன்னீர் ரோஜா- 20 பூ

    வெட்டிவேர்- 25 கிராம்

    செய்முறை:

    மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் கொடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடி நன்றாக ஆறியதும், அதனை ஒரு டப்பாவில் போட்டு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    தலைக்கு குளிக்கும் முன்னர் தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும். ஒவ்வொரு எண்ணெய் குளியளின் போதும் இந்த சீயக்காய் பொடியை பயன்படுத்தி பலன் பெறலாம். இந்த பொடி முடியை வளரச்செய்வது மட்டுமல்லாமல், பொடுகுத்தொல்லை, உடல் உஷ்ணம், முடி கொட்டும் பிரச்சினை, நரை முடி மற்றும் கூந்தலுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இது நமக்கு உதவியாக இருக்கும். செய்து பாருங்கள்.

    சீயக்காய் தூள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் தூள் போட்டு தலைக்கு குளித்து வரலாம்.

    சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

    கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.

    சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தும் போது உங்கள் கூந்தல் மிருதுவாக மாறும், கூந்தலை வறட்சியாக்காது.

    சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது இயற்கையிலே முடியை மென்மையாக்கும் குணம் கொண்டது.

    • தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.
    • வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம்.

    உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை.

    இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது என்று கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம். தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

    பொதுவாக முடி நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். நீங்கள் முடி தீர்வு தேடுகிறீர்களானால், வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு எளிய முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தி வரலாம். அதிக விலையில் விற்பனையாகக்கூடிய எண்ணெய் வகைகளை பயன்படுத்தி ஏமாற வேண்டாம்.

    அந்தவகையில் தற்போது முடி கொட்டும் பிரச்சினையை எப்படி எளியமுறையில் சரி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:-

    தேங்காய் எண்ணெய்- 2 லிட்டர்

    கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி

    செம்பருத்தி பூ- இரு 10 பூ

    செம்பருத்தி இலை- ஒரு கைப்பிடி

    வேப்பிலை- ஒரு கைப்பிடி

    மருதாணி இலை- ஒரு கைப்பிடி

    சாம்பார் வெங்காயம்- 5 நம்பர் (இடித்தது)

    சோற்றுக்கற்றாலை- ஒரு கப்

    வெந்தயம்- 2 டீஸ்பூன்

    பெரிய நெல்லிக்காய்- 3 (இடித்தது)

    கருசீரகம்- 2 டீஸ்பூன்

    வெட்டிவேர்- ஒரு கைப்பிடி

    செய்முறை:

    ஒரு பெரிய அயன் கடாயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும், கறிவேப்பிலை, வேப்பிலை, மருதாணி இலை மற்றும் முடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி, வெங்காயம், நெல்லிக்காய் இதனை இடித்து சேர்க்க வேண்டும். கற்றாலையை நன்றாக கழுவி சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் வெந்தயம், கருஞ்சீரகம், வெட்டி வேர் போன்றவர்றை மிதமான தீயில் வைத்து அனைத்து பொருட்களையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கொதிக்க விட வேண்டும். சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நன்றாக நிறம் மாறி வரும் வரை அதனை காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை ஒருநாள் முழுவதும் அதே பாத்திரத்தில் வைக்க வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் எசன்ஸ்சும் அந்த தேங்காய் எண்ணெயில் நன்றாக ஊறி இறங்கிய பிறகு வடிகட்டி அதனை தேவையான டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம். 2, 3 மாதங்கள் இருந்தாலும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது.

    முடிகொட்டுதல் பிரச்சினை மற்றும் முடி அடர்த்தி அதிகமாக இல்லை என்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும், பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உபயோகப்படுத்தி பயன்பெறுங்கள்.

    • புருவத்தில் நரை முடி உருவாவதற்கு பலவித காரணிகள் உண்டு.
    • நரைகள் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் அதனை போக்கி விட முடியாது.

    புருவத்தில் நரை முடி உருவாவதற்கு பலவித காரணிகள் உண்டு. தீவிரமான பூஞ்சைத் தொற்றின் காரணமாக, சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம். மிகப்பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், அக்கி பாதிப்புக்குப் பிறகும், ரேடியோதெரபிக்கு பிறகும்கூட சருமத்தின் முடிகள் இப்படி வெள்ளையாக மாறலாம். சிலருக்கு அதீத மன அழுத்தம், கவலை மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதன் விளைவாகவும் இப்படி ஆகலாம்.

    நரைகள் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் அதனை போக்கி விட முடியாது. இதற்கு இந்த பதிவில் கூறும் ஒரு சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி நம்மால் தீர்வை பெற இயலும். இவை அனைத்துமே பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பின் பற்றி வந்த குறிப்புகள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    பொதுவாக முடி கருமையாக மெலனின் என்கிற நிறமி தான் காரணம். இதன் அளவு குறைந்தால் உங்களின் முடி வெள்ளையாக மாற தொடங்கும். நாம் செய்கின்ற ஒரு சில அன்றாட பழக்க வழக்கங்கள் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. நரை முடி வந்து விட்டால் அவ்வளவு எளிதில் இதை போக்கவும் முடியாது.

    இளம் வயதிலே முடி நரைத்து போக சில காரணிகள் உள்ளன. அவற்றில் சில...

    - புகை பழக்கம்

    - வைட்டமின் டி குறைபாடு

    - மரபணு ரீகியாக

    - ஊட்டசத்து குறைபாடு

    - மாத்திரை தொடர்ந்து எடுத்து கொள்ளுதல்

    எளிய வழி வெள்ளை முடியாக உள்ள உங்கள் புருவத்தை மிக எளிதில் கருமையாக மாற்றலாம். இதற்கு குறிப்பில் கூறுவது போன்று செய்து வந்தாலே போதும்.

    தேவையான பொருட்கள்..

    பிளாக் டீ

    பிளாக் காபி

    செய்முறை :- முதலில் பிளாக் டீ மற்றும் பிளாக் காபியை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இதனை புருவத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து புருவத்தில் உள்ள இந்த ஐப்ரோ பேக்கை பஞ்சை வைத்து துடைத்து விடலாம். இந்த குறிப்பை பயன்படுத்தும் போது கண்ணில் படாதவாறு பார்த்து கொள்ளவும்.

    தினமும் 2 முறை ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை புருவத்தில் தடவி வந்தால் இளம் வயதில் நரைத்தல் நிகழ்வு தடை செய்யப்படும். மேலும், புருவம் கரு கருவென வளரவும் இந்த குறிப்பு உதவும்.

    தலை முடியின் வளர்ச்சிக்கு எப்படி நெல்லிக்காய் உதவுகிறதோ அதே போன்று புருவ முடிக்கும் இது நல்ல தீர்வை தருகிறது. நெல்லியை வேக வைத்து அரைத்து கொண்டு புருவத்தில் தடவினால் புருவத்தில் உள்ள வெள்ளை முடிகள் கருமை பெறும். இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின் சி போன்ற தாதுக்கள் தான்.

    இந்த பூமியில் இருக்க கூடிய எல்லா வவித இயற்கை பொருட்களும் நமக்கு அதிக பயனை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. அந்த வகையில் சூரிய ஒளியும் அடங்கும். தினமும் 15 நிமிடம் இளம் வெயிலில் இருந்தாலே இது போன்ற நரை பிரச்சினை உங்களுக்கு உண்டாகாது.

    நீங்கள் சாப்பிட கூடிய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருந்தால் மட்டுமே அது பயனுள்ளவை. இல்லையெனில் பல வித பாதிப்புகள் உண்டாகும். வைட்டமின் பி12 அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நரைகளின் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

    • சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம்.
    • மெலனோசைட்ஸ் என்பவைதான் மெலனின் உற்பத்தி செல்கள்.

    புருவங்களில் உள்ள ரோமங்கள், கண் இமைகள், உடல் ரோமங்கள் ஆகியவை நரைப்பதை 'போலியாசிஸ்' (Poliosis) என்கிறோம். இந்தப் பகுதிகளில் உள்ள முடிகளில் மெலனின் எனப்படும் நிறமியே இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

    கூந்தல் நுண்ணறைகள் பலவீனமாக இருப்பபது, நிறமி செல்களில் ஏற்படுகிற ஆட்டோஇம்யூன் குறைபாடு, மெலனின் உற்பத்தியில் ஏற்படுகிற பிறவிக் கோளாறு போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். குடும்பப் பினனணி, வைட்டமின் பி 12 குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு, இதர ஊட்டச்சத்துகளின் குறைபாடு போன்றவையும் காரணமாகலாம்.

    தீவிரமான பூஞ்சைத் தொற்றின் காரணமாக, சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம். மிகப்பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், அக்கி பாதிப்புக்குப் பிறகும், ரேடியோதெரபிக்கு பிறகும்கூட சருமத்தின் முடிகள் இப்படி வெள்ளையாக மாறலாம். சிலருக்கு அதீத மன அழுத்தம், கவலை மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதன் விளைவாகவும் இப்படி ஆகலாம்.

    யூமெலனின் மற்றும் பியோமெலனின் ஆகிய நிறமிகள்தான் முடிக்கு கறுமை நிறத்தைக் கொடுப்பவை. இவற்றில் பியோமெலனின் என்பவை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைக் கொடுப்பவை. யூமெலனின் என்பது பிரவுன் அல்லது கறுப்பு நிறத்தைக் கொடுப்பவை. இவை எல்லாம் இணைந்துதான் கூந்தலுக்கு அதன் இயல்பான நிறம் வருகிறது. மெலனோசைட்ஸ் என்பவைதான் மெலனின் உற்பத்தி செல்கள். இவைதான் மெலனின் நிறமித் தொகுப்புக்குக் காரணம்.

    ×