search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eyebrows"

    • புருவத்தில் நரை முடி உருவாவதற்கு பலவித காரணிகள் உண்டு.
    • நரைகள் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் அதனை போக்கி விட முடியாது.

    புருவத்தில் நரை முடி உருவாவதற்கு பலவித காரணிகள் உண்டு. தீவிரமான பூஞ்சைத் தொற்றின் காரணமாக, சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம். மிகப்பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், அக்கி பாதிப்புக்குப் பிறகும், ரேடியோதெரபிக்கு பிறகும்கூட சருமத்தின் முடிகள் இப்படி வெள்ளையாக மாறலாம். சிலருக்கு அதீத மன அழுத்தம், கவலை மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதன் விளைவாகவும் இப்படி ஆகலாம்.

    நரைகள் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் அதனை போக்கி விட முடியாது. இதற்கு இந்த பதிவில் கூறும் ஒரு சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி நம்மால் தீர்வை பெற இயலும். இவை அனைத்துமே பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பின் பற்றி வந்த குறிப்புகள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

    பொதுவாக முடி கருமையாக மெலனின் என்கிற நிறமி தான் காரணம். இதன் அளவு குறைந்தால் உங்களின் முடி வெள்ளையாக மாற தொடங்கும். நாம் செய்கின்ற ஒரு சில அன்றாட பழக்க வழக்கங்கள் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. நரை முடி வந்து விட்டால் அவ்வளவு எளிதில் இதை போக்கவும் முடியாது.

    இளம் வயதிலே முடி நரைத்து போக சில காரணிகள் உள்ளன. அவற்றில் சில...

    - புகை பழக்கம்

    - வைட்டமின் டி குறைபாடு

    - மரபணு ரீகியாக

    - ஊட்டசத்து குறைபாடு

    - மாத்திரை தொடர்ந்து எடுத்து கொள்ளுதல்

    எளிய வழி வெள்ளை முடியாக உள்ள உங்கள் புருவத்தை மிக எளிதில் கருமையாக மாற்றலாம். இதற்கு குறிப்பில் கூறுவது போன்று செய்து வந்தாலே போதும்.

    தேவையான பொருட்கள்..

    பிளாக் டீ

    பிளாக் காபி

    செய்முறை :- முதலில் பிளாக் டீ மற்றும் பிளாக் காபியை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இதனை புருவத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து புருவத்தில் உள்ள இந்த ஐப்ரோ பேக்கை பஞ்சை வைத்து துடைத்து விடலாம். இந்த குறிப்பை பயன்படுத்தும் போது கண்ணில் படாதவாறு பார்த்து கொள்ளவும்.

    தினமும் 2 முறை ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை புருவத்தில் தடவி வந்தால் இளம் வயதில் நரைத்தல் நிகழ்வு தடை செய்யப்படும். மேலும், புருவம் கரு கருவென வளரவும் இந்த குறிப்பு உதவும்.

    தலை முடியின் வளர்ச்சிக்கு எப்படி நெல்லிக்காய் உதவுகிறதோ அதே போன்று புருவ முடிக்கும் இது நல்ல தீர்வை தருகிறது. நெல்லியை வேக வைத்து அரைத்து கொண்டு புருவத்தில் தடவினால் புருவத்தில் உள்ள வெள்ளை முடிகள் கருமை பெறும். இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின் சி போன்ற தாதுக்கள் தான்.

    இந்த பூமியில் இருக்க கூடிய எல்லா வவித இயற்கை பொருட்களும் நமக்கு அதிக பயனை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. அந்த வகையில் சூரிய ஒளியும் அடங்கும். தினமும் 15 நிமிடம் இளம் வெயிலில் இருந்தாலே இது போன்ற நரை பிரச்சினை உங்களுக்கு உண்டாகாது.

    நீங்கள் சாப்பிட கூடிய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருந்தால் மட்டுமே அது பயனுள்ளவை. இல்லையெனில் பல வித பாதிப்புகள் உண்டாகும். வைட்டமின் பி12 அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நரைகளின் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

    பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவது புருவங்கள். புருவங்களின் அழகை பாதுகாக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    புருவங்களை எப்போதும் திரெடிங் முறையில் அகற்றுவதே மிகவும் நல்லது. சிலர் வாக்சிங் முறையிலும் அகற்றுவதுண்டு. வாக்சிங் செய்வதால் நாளடைவில் அந்த இடத்துத் தசைகள் சுருங்கித் தொய்ந்து போகக் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வாக்சிங் முறையில் புருவங்களை நீக்ககூடாது சிலர் பிளேடு உபயோகித்துப் புருவங்களை ஷேப் செய்வதும் உண்டு.

    இந்த முறை மிகவும் ஆபத்தானது. அப்படி அகற்றும் போது அந்த இடத்து முடிகள் மறுபடி வளரும் போது மிகவும் அடர்த்தியாக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வளரும்.  எனவே இவ்வாறு செய்யகூடாது. புருவங்கள் நரைத் திருந்தால் மஸ்காராவை உபயோகித்து கருப்பாக்கிக் கொள்ளலாம். மஸ்காரா பிரஷ்ஷை லேசாகக் காயவைத்து நரையை மறைக்கத் தடவலாம். ஐப்ரோபென்சில் உபயோகிப்பதை விட இப்படிச் செய்வது மிகவும் அழகாக, இயற்கையாக இருக்கும்.

    கண்களுக்கு அடிக்கடி ஐபேட் உபயோகிக்கலாம். இது கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும், புருவங்களின் சீராக வளர்வதற்கும் உதவும். புருவங்களின் வளர்ச்சிக்கு லாவண்டர், ரேஸ்மெரி, மாதிரியான அரோமா எண்ணெய்கள் மிகவும் சிறந்தவை. அவற்றை சூடுபடுத்தாமல் அப்படியே மசாஜ் செய்ய உபயோகிக்க வேண்டும்.
    பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. உங்கள் முகத்திற்கு ஏற்ப எப்படி புருவத்தை சீர் செய்வது என்று பார்க்கலாம்.
    பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து அழகாக்கிக் கொள்வது அவசியம்.

    அடர்த்தியான புருவங்கள் உள்ளவர்கள் அழகு நிலையங்களில் செய்யப்படும் திரெட்டிங்கை செய்துகொள்ளவும். அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது. புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும்.

    சதுரமான முகம் உள்ளவர்கள் புருவத்தின் நடுவில் வளைவாக திரெட்டிங் செய்துகொண்டால் முகம் வட்டமாகக் காட்சி தரும். நீளமான முகம் கொண்டவர்கள் திரெட்டிங் செய்துகொள்ளும்போது, புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு வட்டமாக, அழகாகத் தெரியும்.

    நீளவட்ட முகமுடையோர் கவனமாக திரெட்டிங் செய்தல் வேண்டும். புருவத்தின் கடைசியிலும் இல்லாமல், முதலிலும் இல்லாமல் சற்றே நகர்த்தி, லேசாக வளைத்து திரெட்டிங் செய்ய வேண்டும். இதனால் முகம் நீளவட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சியளிக்கும்.முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள். அழகாகத்  திகழுங்கள்.
    ×